Just In
- 5 min ago சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- 1 hr ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 2 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
Don't Miss!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
டியூக் 390 வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவம்: அதான் கேடிஎம்!
இதுவரை எந்தவொரு பைக் நிறுவனமும் வழங்காத புதுமையான அனுபவத்தை கேடிஎம் டியூக்390 பைக் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் கிடைத்தது.டெல்லி அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் ஃபார்முலா- 1 சர்க்யூட்டில், தங்களது டியூக் 390 பைக்கை ஓட்டி பார்ப்பதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை அந்த நிறுவனம் வழங்கியது.
சாதாரண சாலைகளில் தங்களது பைக்கின் முழு செயல்திறனையும் பார்க்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு, இந்த நிகழ்ச்சி மூலம் த்ரில்லான அனுபவத்தை பெற்றனர். இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு திருப்திகரமான நிகழ்வாக அமைந்தது. அதுபற்றிய கூடுதல் தகவல்கள்.
வாடிக்கையாளர் ஆர்வம்
நாடு முழுவதும் இருந்து 100க்கும் அதிகமான கேடிஎம் டியூக் 390 பைக்கின் உரிமையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கெடுத்தனர். தங்களது பைக் மற்றும் அதற்கான விசேஷ உடைகளுடன் அவர்கள் அங்கு ஆஜராகினர்.
டிராக் டே!
ஆரஞ்ச் டே என்ற பெயரில் இதுவரை கேடிஎம் பைக் உரிமையாளர்களுக்கான பைக் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முதல்முறையாக டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் கேடிஎம் டியூக் 390 பைக் உரிமையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் விதத்தில், இந்த "டிராக் டே" எனப்படும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆலோசனை
பந்தய களத்தில் ஓட்டுவதற்கு பதிவு செய்த கேடிஎம் டியூக் 390 பைக்கின் உரிமையாளர்களுக்கு பயிற்சியாளர்கள் சிறப்பு ஆலோசனைகளை வழங்கினர். பந்தய களத்தில் எவ்வாறு பைக்கை அதிவேகத்தில் ஓட்டுவது மற்றும் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கொடுத்தனர்.
போட்டி
பந்தய களத்தில் இறங்கிய கேடிஎம் டியூக் 390 பைக்குகளில் நேரத்தை துல்லியமாக கணக்கிட உதவும் சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. இதன்மூலம், ஒவ்வொருவரும் எவ்வளவு நேரத்தில் பந்தய களத்தை சுற்றி வந்தனர் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.
சிறந்த அனுபவம்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல டியூக் 390 பைக் உரிமையாளர்கள் புத் பந்தய களத்தில் ஓட்டியது மிகச்சிறப்பான, மறக்க முடியாத அனுபவமாக குறிப்பிட்டனர். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு கேடிஎம் நிறுவனம் மீண்டும் ஏற்பாடு செய்யும் என்றும் அவர்கள் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர்.
கேடிஎம் டியூக் 390
கேடிஎம் டியூக் 200 பைக்கின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் பிராண்டின் 2வது பைக் மாடல் இது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 43 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 373சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
-
ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!