Just In
- 17 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பெனெல்லி மோட்டார் சைக்கள் நிறுவனம் திவாலானதாக அறிவித்த நீதிமன்றம்... காரணம் என்ன?
இத்தாலியைச் சேர்ந்த பெனெல்லி மோட்டார் சைக்கிள் நிறுவனம், அந்நாட்டில் கணிசமான வாடிக்கையாளர் எண்ணிக்கையையும், விற்பனையையும் கொண்டுள்ளது. கேடிஎம் லிமிடெட்டின் துணை நிறுவனமான டபிள்யூபி சஸ்பென்ஸன் என்ற கம்பெனிதான் பெனெல்லி மோட்டார் சைக்கிள்களுக்குத் தேவையான சில பாகங்களை விநியோகித்து வந்தது.
இந்த நிலையில்தான் பெனெல்லி நிறுவனம் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியது. அதாவது, டபிள்யூபி சஸ்பென்ஸன் கம்பெனிக்குக் கொடுக்க வேண்டிய தொகையைத் தராமல் நீண்ட நாள்களாக இழுத்தடித்து வந்ததாக பெனெல்லி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
கிட்டத்தட்ட 1.20 லட்சம் யூரோ கடன் தொகை நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. அதன் விளைவு, கடைசியாக நீதிமன்றத்தில் போய் முடிந்திருக்கிறது. இத்தாலியின் பெசாரோ நீதிமன்றத்தின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
குறிப்பிட்ட காலத்துக்குள் கடன் தொகையை டபிள்யூபி சஸ்பென்ஸன் நிறுவனத்துக்கு வழங்குமாறு பெனெல்லியிடம் அறிவுறுத்தியுள்ளது நீதிமன்றம். அதன் பிறகும் உரிய தொகையை திருப்பித் தராததால் பெனெல்லி நிறுவனம் திவாலாகி விட்டதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், கடன் தொகையை உடனடியாக செலுத்துமாறும் பெனெல்லி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவித்த பிறகு அந்நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகள் கடன் தொகைக்காக பறிமுதல் செய்யப்படும். மேலும், பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட பெனெல்லி நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு நடுவே பெனெல்லியின் தாய் நிறுவனமான குயான்ஜியாங் கம்பெனி இந்தத் தீர்ப்பை எதிர்த்துள்ளது. சீனாவில் செயல்படும் இந்த நிறுவனம், பெனெல்லி திவாலாகவில்லை என்றும், அதன் பொருளாதார நிலை சீராக இருக்கிறது என்றும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.
பெசாரோ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகவும் குயான்ஜியாங் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் இத்தாலி உள்பட சர்வதேச அளவில் பெனெல்லியின் பெயர் டேமேஜாகி உள்ளது. அதனை சரி செய்து மோட்டார் சைக்கிள் உலகில் மீண்டு(ம்) வருமா பெனெல்லி? என்பதற்கு காலம்தான் விடை சொல்ல வேண்டும். இந்தியாவில் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் கூட்டணியில் பிரிமியம் பைக் மாடல்களை பெனெல்லி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!