Just In
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 2 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 3 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கனும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
புதிய 135சிசி பைக்கை இந்தியாவில் களமிறக்கும் பெனெல்லி!
இன்னும் சில மாதங்களில் புதிய 135சிசி பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக பெனெல்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபற்றிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் வர்த்தகத்தை துவக்கியது இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம். டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் துணையுடன் இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது பெனெல்லி.
இந்நிறுவனத்தின் பிரிமியம் பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறுகிய காலத்தில் மிக சிறப்பான விற்பனையை பெனெல்லி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் வர்த்தகத்தை மிக வலுவாகவும், நீண்ட கால நோக்குடன் திட்டமிட்டு புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.
அந்த வகையில், வரும் மார்ச் மாதத்தில் புதிய 135சிசி பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக பெனெல்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெனெல்லி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
புதிய 135சிசி பைக்கை அறிமுகம் செய்வதற்கு அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளும், சோதனை ஓட்டங்களும் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இவை அனைத்தும் முடிந்து வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.
இந்த புதிய பைக் மாடல் ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை கொண்டதாக இருக்கும். இந்த புதிய பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று பெனெல்லி - டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் கூட்டணி நம்பிக்கை வைத்துள்ளது.
இந்த புதிய பைக் மாடல் புனே நகர் அருகே தலேகானில் உள்ள டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். ரூ.350 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட இந்த ஆலையில், பெனெல்லி மற்றும் ஹயோசங் பிராண்டிலான பைக்குகளை டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் அசெம்பிள் செய்து வருகிறது.
மாதத்திற்கு 50,000 பைக்குகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையை புதிய மாடல்களின் வருகையையொட்டி, விரிவாக்கம் செய்யவும் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 கோடி வரை முதலீடு செய்ய இருக்கிறது டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம்.
தற்போது பெனெல்லி பிராண்டில் டிஎன்டி25, டிஎன்டி300, டிஎன்டி600ஐ, டிஎன்டி600ஜிடி, டிஎன்டி899 மற்றும் டிஎன்டி ஆர் ஆகிய பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த பைக் மாடல்கள் ரூ.1.84 லட்சம் முதல் ரூ.12.86 லட்சம் விலை கொண்டதாக இருக்கிறது.
இந்த நிலையில், புதிய 135சிசி மாடல் அந்த நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான மாடலாக வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!