Just In
- 50 min ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 3 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 4 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 6 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
Don't Miss!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சமையல் எண்ணெயில் ஓடும் மோட்டார்சைக்கிள்... கேரள மாணவர்களின் அசத்தல்!
விக்குற விலைவாசியில பெட்ரோல், டீசல் ஊத்தி கட்டுப்படியாகுமா? என்ற புலம்பல்களை நாம் அடிக்கடி கேட்பதுண்டு. குறைந்த விலையில் மாற்று எரிபொருகள்காக வந்த பயோ கேஸ் போன்றவையும் பெரிய அளவில் வாகன ஓட்டிகளுக்குப் பலனளிக்கவில்லை.
ஏதாவது வேஸ்ட்டா போற பொருளில் இருந்து எரிபொருள் கண்டுபிடிச்சா பரவாயில்லை என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. அதன் மூலம் எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளது என்பதும் அவர்கள் வாதம்.
இந்த நிலையில், சமையலுக்குப் பயன்படுத்திய பிறகு மீதமான எண்ணெய்யை வாகன எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள்.
இது என்னப்பா புது டெக்னிக்கா இருக்கே? என பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள் அவர்கள். கேரள மாநிலம், கொச்சியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களான அதுல் ஜியோ, ராகுல் சி.வி., அஜின் சி.எம்., ரவீண் குமார் ஆகிய நான்கு பேர் கொண்ட இளைஞர் படைதான் சத்தமில்லாமல் இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கழிவுகளாக வீணாய்ப் போகும் பொருள்களை வெளிநாடுகளில் எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்தப்படுவதை அறிந்த அந்த நான்கு பேரும், அதேபோன்றதொரு முயற்சியில் நாமும் செயல்படுவோம் என உறுதியேற்றார்கள்.
கல்லூரி இறுதியாண்டு புராஜெக்ட்டாக சமையல் எண்ணெய் எரிபொருளை கையில் எடுத்தார்கள். இதற்காக அவர்கள் தேர்வு செய்த வாகனம் ராயல் என்ஃபீல்டு. அதன் லோகோவை ஆர்இ என மாற்றியும் உள்ளனர். ரீசைக்கிள், ரீ யூஸ், ரெடுயூஸ் என்ற வார்த்தைகளின் முதல் இரு எழுத்துகள்தான் ஆர்.இ.
முதலில் சமையல் எண்ணெய் எரிபொருளைப் பயன்படுத்தி வாகனத்தை இயக்க முடியவில்லையாம். விடா முயற்சி... விஸ்வரூப வெற்றி என்ற அடிப்படையில், அதில் சில சேர்மங்களை சேர்த்து பயோ எரிபொருளாக மாற்றியுள்ளனர்.
அதைப் பயன்படுத்தும் போது வெளியாகும் மாசுவின் அளவு தொடக்கத்தில் இருந்ததைக் காட்டிலும், இப்போது குறைந்துள்ளதாகவும் அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் எரிபொருள் தயாரிக்க ரூ.76 செலவாகிறதாம். மொத்தமாக பெரிய அளவில் இதை உற்பத்தி செய்தால் லிட்டர் ரூ.30-க்கு விற்பனை செய்ய முடியும் என்கின்றனர் கண்களில் நம்பிக்கையுடன்.
இளைய இந்தியாவின் இத்தகைய சமூகம் சார்ந்த சிந்தனைகள்தான் உலக அரங்கில் நம்மை தலை நிமிர வைக்கும் வெளிச்சக் கீற்று....
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!