Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளுக்கு போட்டியாக வரும் ஹோண்டாவின் புதிய பைக்
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக மிடில்வெயிட் வண்டிகளை தயாரிக்கும் முடிவை ஹோண்டா அறிவித்திருக்கிறது. அதை குறித்து பார்க்கலாம்
இந்தியாவில் எங்குகானினும் ராயல் என்ஃபீலிடு மோட்டார் சைக்கிள்கள் சாலைகளில் பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டன. இதை மனதில் வைத்து இனி மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள்களை தாயாரிக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது.
250cc முதல் 800cc வரை திறன் இருக்கக்கூடிய இருசக்கர வாகனங்கள், மிடில் வெயிட் மோட்டார் சைக்கிள்கள் என ஆட்டோமைபைல் உலகில் சொல்லப்படுகின்றன. இதுபோன்ற திறன் கொண்ட வண்டிகளில் இந்தியாவில் இன்றும் முதன்மையாக இருப்பது ராய்ல் என்ஃபீல்ட் நிறுவனம் தான்.
தினம் தினம் இந்தியர்களிடையே ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளுக்கு ஆதரவு பெருகுவதை மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் உற்றுநோக்கிதான் வருகின்றன. ஆனால் REக்கு வெளிப்படையான போட்டியை ஹோண்டா நிறுவனம் தான் முதலில் அறிவித்துள்ளது.
மிடில்வெயிட் வண்டிகளை தயாரிக்கும் அறிவிப்பை தெரிவித்ததோடு மட்டும் நிற்காமல், அதற்கான பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது ஹோண்டா நிறுவனம்.
அதில் முதற்கட்டமாக ஹோண்டாவின் ஜப்பான் மற்றும் தாய்லாந்து தொழிற்சாலைகளில் பணியாற்றும் பல பொறியாளர்களை இந்தியாவில் பணியாற்ற அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள ஹோண்டாவின் வெளிநாட்டு பொறியாளர்கள், ஒரு மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் மாடல் ஒன்றை உருவாக்குவார்கள். அந்த மாடல் மோட்டார் சைக்கிள்கள் உலகதரத்திலான தயாரிப்பாக இருக்கும்.
ஹோண்டா அனைத்துலக மிடில்வெயிட் மாடல் மோட்டார் சைக்கிளை தயாரிப்பதற்கான பின்னணி, மிதமிஞ்சிய தனம். காரணம் இந்திய மார்க்ட்டில் ஹோண்டாவின் இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் ஹிட்டடித்து விட்டால், RE மற்ற நாடுகளை குறிவைக்கும்.
அப்படி RE முந்துவதற்குள், ஹோண்டாவின் இந்த மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் எல்லா நாடுகளிலும் கால் பதித்துவிடும். இதுவே ஹோண்டா மிடில்வெயிட் வண்டிகளை தயாரிப்பதற்கான பின்னணி.
ஹோண்டாவின் இந்த அறிவிப்பை குறித்து ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் ஈச்சர் மோட்டார்ஸ் லிமிடெட் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
காரணம், ஈச்சர் மோட்டார்ஸ் லிமிடெடிற்கு சித்தார்த் லால் தலைமை செயல் அதிகாரியான பின்பு, அந்நிறுவனத்தின் வளர்ச்சி வெளிநாடுகளில் கனிசமாகவே உள்ளன.
மிடில்வெயிட் திறனில் இருக்கக்கூடிய ராயல் என்ஃபீல்ட்டின் மோட்டார் சைக்கிள்கள் கடந்தாண்டு 70.56 சதவித அளவில் மற்ற நாடுகளில் விற்பனையாகியுள்ளது. இது மிகபெரிய சாதனை என்றே அட்டோமொபைல் உலகில் பார்க்கப்படுகிறது.
இதை ஹோண்டாவும் கவனித்துள்ளது, இருந்தாலும் RE நிறுவனத்திற்கு போட்டிகளமாக ஹோண்டா இந்தியாவையே தேர்ந்தெடுள்ளது. இதுகுறித்து பேசிய ஆசியவிற்கான ஹோண்டாவின் செயல் அதிகாரி ரோரிஅக்காய் அபே
"ராயல் என்ஃபீல்ட் இந்தியாவில் வலிமையான வியாபாரத்தை பெற்றிருகிறது. குறிப்பாக மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் விற்பனையின் RE இங்கு அசுர வளர்ச்சியில் உள்ளது. அந்த வளர்ச்சி தான் எங்களுக்கான நோக்கமும், அதனால் தான் இந்தியாவில் நாங்கள் மிடில்வெயிட் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய ஆர்வமாக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஹோண்டாவின் இந்த அறிவிப்பை ஆட்டோமொபைல் துறையில் ஆலோசராக இயங்கும் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்தியாவில் தான் பைக் தயாரிப்புகளுக்கான கட்டமைப்புகள் எளிதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 535cc எஞ்சின் பவர் வரை பெற்ற வண்டிகளை மட்டுமே இதுவரை தாயாரித்துள்ளன. இதில் மேலும் ஒரு மைக்கல்லாக இந்திய சாலைக்கான 750ccயில் மோட்டார் சைக்கிளை தாயாரிக்கும் பணியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.
ஆக, மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் வாங்கும் திறன் ஆகியவற்றில் இந்தியா பெரிய வளர்ச்சி காண இருக்கிறது. அதற்கான அடித்தளமாகவே ஹோண்டாவின் அறிவிப்பை நாம் எடுத்துக்கொள்வோமாக.
வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
- ஆடம்பரம் - அனுபவம் - அதிரடி ; வருகிறது புதிய பி.எம்.டபுள்யூ
- சீற்றத்துடன் சீறிப் பாய்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்
- பேட்டரியில் இயங்கும் ஐ-பேஸ் காரை அறிமுகம் செய்த ஜாகுவார்
- செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஹெலிகாப்டர்
டிராக்குகளில் ஓட்டுவதற்காக ஹோண்டா தயாரிப்பான ஆஃபிரிக்க ட்வின் மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட தொகுப்பை கீழே உள்ள கேலரியில் பாருங்கள்
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!