Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 2 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 4 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Movies கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா பரவல் எதிரொலி!! தள்ளிப்போகும் 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி
2022 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்ட நாளில் இருந்து தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்தியாவில் நடைபெறும் மிக பெரிய மற்றும் முக்கியமான ஆட்டோமொபைல் கண்காட்சியாக ஆட்டோ எக்ஸ்போ விளங்குகிறது. இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலேயே பெரிய ஆட்டோமொபைல் வாகன நிகழ்ச்சியான இதன் புதிய எடிசனாக 2022 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ அடுத்த வருடத்தில் நடைபெறவுள்ளது.
அடுத்த சில வருடங்களில் இந்திய சந்தையில் கால்பதிக்கவுள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களிடம் உள்ள திட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் சில மாதிரிகளை இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தும். அதேபோல் ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் அடுத்த 2,3 வருடங்களில் தங்களது பிராண்டில் இருந்து வெளிவரவுள்ள மாடல்களை நிறுத்தி வைக்கும்.
மிக முக்கியமான கண்காட்சி நிகழ்ச்சி என்பதால், நாட்டின் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களும், ஊடகவியலாளர்களும் வருகை தருவர். நிறுத்தி வைக்கப்படும் மாதிரிக்கு அவர்களிடம் இருந்து வரும் கருத்துகள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கும் நிறுவனங்களுக்கு பெரிதும் உதவிகரமானவைகளாக இருந்து வருகின்றன.
இத்தகைய நிகழ்ச்சி தான் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் தள்ளி வைக்கப்பட உள்ளதாக, இதனை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்டோ எக்ஸ்போவில் புதிய 2022 எடிசன் துவங்கவுள்ள தேதி, உலகளாவிய ஆட்டோ நிகழ்ச்சிகளையும், கொரோனா பரவலையும் கண்காணித்த பிறகு அடுத்த வருட இறுதியில் நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது. ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி பொதுவாகவே வருட துவக்கத்தில் நடைபெறும்.
முன்னதாக 2022 ஆட்டோ எக்ஸ்போவும் வருகிற பிப்ரவரி மாத 2ஆம் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 2020 ஆட்டோ எக்ஸ்போ பிப்ரவரி மாத துவக்கத்தில் நடைபெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
கொரோனா வைரஸ் பரவல் அந்த சமயத்தில் சீனாவில் மட்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருந்ததால், சிறிய தயக்கத்துடன் இந்த நிகழ்ச்சி வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமையே வேறு. கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ள நாடுகளில் முதன்மையான இடத்தில் இந்தியா உள்ளது.
இதனால் ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கும் பார்வையாளர்கள், அனைத்து பங்குதாரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என 2022 ஆட்டோ எக்ஸ்போ குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி ஆட்டோ நிகழ்ச்சியை நடத்த அதன் நிர்வாகிகளுக்கு தற்போதைய சூழலில் போதிய நேரம் வழங்க வேண்டும். அதற்கு எப்படியிருந்தாலும் ஒரு வருடம் அவர்களுக்கு தேவைப்படும் எனவும் கூறியுள்ளது.
கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவை போல் 2022 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியும் தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது திட்டமிட்டுள்ளபடி அடுத்த வருடத்திற்குள்ளாக 2022 ஆட்டோ எக்ஸ்போ நடத்தி முடிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!