Just In
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னை ஆலையில் அடுத்த ஆண்டு டயர் உற்பத்தி: மிச்செலின்
டயர் தயாரிப்பில் மிகப்பெரிய சர்வதேச நிறுவனமான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிச்செலின், திருவள்ளூர் மாவட்டம் கண்டிகை தொழிற்பேட்டையில், ரூ.4,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்ட டயர் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.
290 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் இந்த தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நவம்பரில் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மிச்செலின் நிறுவனத்தின் தலைவர் நிக்கோலஸ் பீமவுண்ட் கூறியதாவது:
"உலகில் 18 நாடுகளில் எங்களுக்கு 70 டயர் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், சென்னையில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலைதான் இவற்றில் மிகப்பெரியதாக இருக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையின் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிந்தவுடன், அடுத்த ஆண்டு நவம்பரில் டயர் உற்பத்தியை துவங்க திட்டமிட்டுள்ளோம்.
முதலில் ஆண்டுக்கு 3 லட்சம் டிரக் ரேடியல் டயர்களை உற்பத்தி செய்ய உள்ளோம். இந்த டயர்கள் முழுவதும் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய இருக்கிறோம்.
படிப்படியாக தொழிற்சாலையின் உற்பத்தியை விரிவாக்கம் செய்த பின் ஆண்டுக்கு 2 மில்லியன் கார் மற்றும் டிரக்குகளு்க்கான ரேடியல் டயர்கள் இங்கு தயாரிக்கப்படும்," என்றார்.