Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டிராபிக் ஜாமில் கார் ஓட்டும் புதிய தொழில்நுட்பம்: ஃபோர்டு கண்டுபிடிப்பு
போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டும்போதும் அதிக மன அழுத்தமும், உடல் சோர்வும் ஏற்படுகிறது. மேலும், இஞ்ச் இஞ்ச்சாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும்போது டிரைவர்கள் காரை ஓட்டும்போது மிகுந்த அவஸ்தைக்கு ஆளாகின்றனர்.
இந்த அவஸ்தைகளை தவிர்க்கும் வகையில் புதிய தானியங்கி தொழில்நுட்பத்தை ஃபோர்டு உருவாக்கியுள்ளது. டிராபிக் அஸிஸ்ட் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள ஃபோர்டு வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட சோதனைகளில் வெற்றி கண்டுள்ளது.
மிகுந்த போக்குவரத்து நெரிசலில் செல்லும்போது இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் போதும். கார் தானியங்கி முறையில் செல்லும். காரின் ரியர் வியூ மிரரில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மற்றும் ரேடார் உதவியுடன் போக்குவரத்து நெரிசலை கண்டறிந்து பிளாக் பாக்ஸ் என்ற கட்டுப்பாட்டு கருவி மூலம் காரின் நகர்வு கட்டுப்படுத்தப்படுகிறது.
முன்னால் மற்றும் பக்கத்தில் செல்லும் வாகனங்கள் மீது மோதிவிடாமல் அழகாக காரை நகர்த்தும். சாலைகளில் வளைவுகள் இருந்தாலும் கார் தானாக திரும்பும். மேலும், பிரேக், ஆக்சிலேட்டர் எல்லாவற்றையும் பிளாக் பாக்ஸ் கட்டுப்படுத்துகிறது. போக்குவரத்து நெரிசல் குறைந்தவுடன் 30 கிமீ வேகத்தை கார் எட்டும்போது இந்த கருவி தானாக ஆஃப் ஆகி டிரைவர் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும்.
இந்த புதிய தொழில்நுட்பம் அடுத்த 5 ஆண்டுகளில் வணிக ரீதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் பெரும்பான்மையான கார் மாடல்களில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.