Just In
- 53 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 9 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எலக்ட்ரிக் கார்கள் பற்றிய வரலாற்றுத் துளிகள்
1828ம் ஆண்டு ஹங்கேரி நாட்டை சேர்ந்த அன்யாஸ் ஜெட்லிக் என்பவர்தான் முதன்முதலில் பேட்டரியில் இயங்கும் சிறிய வாகனத்தை கண்டுபிடித்தார். இந்த வாகனத்தில் பயணிகள் ஏற்றிச் செல்ல முடியாது என்றாலும் எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்திற்கு இதுதான் முதல் வித்து. இதைத்தொடர்ந்து, எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
முதலில் பேட்டரியை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலை இருந்தது. ரீசார்ஜ் செய்துகொள்ளும் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு எலக்ட்ரிக் கார்களின் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்தது.
19ம் நூற்றாண்டில் எலக்ட்ரிக் கார்கள் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு பிரபலமாகின. 1900 களில் அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் நீராவியில் இயங்கும் கார்கள் வந்தபின் கூட எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலை வகித்தன.
பெட்ரோல் மற்றும் நீராவியில் இயங்கும் கார்களை ஸ்டார்ட் செய்வதில் இருந்த பிரச்னை மற்றும் புகை ஆகியவை வாடிக்கையாளர்களை எலக்ட்ரிக் கார்கள் மீது ஆர்வம் காட்ட வைத்தது. எலக்ட்ரிக் கார்களின் கையாளுமை, பராமரிப்பும் எளிதாக இருந்தது.
இந்த நிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின் அமெரிக்காவில் பெட்ரோல் மலிவு விலையில் கிடைக்கத் துவங்கியது. இதையடுத்து, எலக்ட்ரிக் கார்களுக்கான மவுசு குறைந்து பெட்ரோல் கார்கள் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனத்தை திருப்பினர்.
மேலும், எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்புக்கான அபரிதமான செலவீனத்தால் அதன் விலை அதிகமாக இருப்பதும், நீண்ட தூரம் செல்ல முடியாத நிலை இருப்பதும் அன்றிலிருந்து இன்று வரை சவாலான விஷயமாகவே இருக்கிறது.
மரபு சார்ந்த எரிபொருளுக்கான தட்டுப்பாடு, சுற்றுச் சூழல் மாசுபடுதல் ஆகிய விஷயங்கள் மீண்டும் எலக்ட்ரிக் கார்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.
எலக்ட்ரிக் கார்களில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் வகையில் பேட்டரி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இயங்கும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஹைபிரிட் கார்களாக பல நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.
மேலும், எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான செலவீனத்தை குறைக்கும் வகையில் பல முன்னணி நிறுவனங்கள் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன. இதனால், எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்களின் உற்பத்தி செலவீனம் வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சிகளை பல்வேறு நாட்டு அரசுகளும் முழு உத்வேகத்துடன் துவங்கியுள்ளன. சார்ஜிங் நெட்வொர்க், கார்களுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்டவை இதில் அடக்கம்.
2012 டிசம்பர் நிலவரப்படி, நிசான் லீஃப், தெல்ஸா ரோட்ஸ்டெர், ரேவா ஐ, மிட்சுபிஷி ஐ எம்ஐஇவி, ஸ்மார்ட் இடி, வீகோ விப் லைஃப், ரினால்ட் புளூயன்ஸ் இசட்இ, ஃபோர்டு ஃபோகஸ் எலக்ட்ரிக், பிஎம்டபிள்யூ ஆக்ட்டிவ்இ, கோடா, தெல்ஸா மாடல் எஸ், பட்டி, ஹோண்டா ஃபிட் இவி, ரினால்ட் ஸோயி, பிஒய்டி இ6, பொல்லூர் புளூகார் ஆகியவை நெடுஞ்சாலையில் செல்லத்தக்க, விற்பனை நிலையில் இருக்கும் எலக்ட்ரிக் கார்கள்.
இந்தியாவில் ரேவா நிறுவனம் முதலாவதாக எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. 2 பேர் மட்டுமே பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த கார் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது அல்ல என்பதோடு, பிக்கப், விலை ஆகியவையும் வாடிக்கையாளர்களை கவரவில்லை.
தற்போது மஹிந்திரா ஆளுகைக்கு கீழ் வந்துள்ள ரேவா 4 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட காரை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் வசதிகொண்ட இந்த கார் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் என தெரிகிறது.
மேலும், மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்காக பெரும் நிதியை ஒதுக்கியுள்ளது. எலக்ட்ரிக் கார்கள் மீண்டும் முக்கியத்துவம் பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
எலக்ட்ரிக் கார்கள் உண்மையிலேயே சுற்றுச் சூழலுக்கு உகந்தவையா? மற்றொரு பகுதியில் பார்க்கலாம்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!