Just In
- 2 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 3 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 4 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 4 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாவில் சிறிய ரக விமான விற்பனையை துவங்கும் மஹிந்திரா!
இந்தியாவில் சிறிய ரக விமானங்கள் விற்பனையை துவங்குவதற்கான அனுமதியை மஹிந்திரா பெற்றிருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமமான மஹிந்திரா, விமான தயாரிப்புத் துறையிலும் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிப்ஸ்ஏரோ நிறுவனத்துடன் இணைந்து சிறிய ரக விமானங்களை தயாரித்து வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள விதிமுறைகளால் விமானங்களை விற்பனை செய்ய முடியாத நிலை இருந்தது.
இந்தநிலையில், இந்தியாவில் சிறிய ரக விமானங்களை விற்பதற்கான அனுமதியை மத்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து பெற்றுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் விரைவில் சிறிய ரக விமானங்களின் விற்பனையை மஹிந்திரா துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய நிறுவனங்கள்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிப்ஸ்ஏரோ மற்றும் ஏரோஸ்டாஃப் ஆகிய விமான தயாரிப்பு நிறுவனங்களை சில ஆண்டுகளுக்கு முன் ரூ.175 கோடி மதிப்பீட்டில், மஹிந்திரா கையகப்படுத்தியது. இதன்மூலம், அந்த நிறுவனங்களின் விமானங்களை மஹிந்திரா வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
விமான மாடல்
இந்தியாவில் ஜிஏ- 10 என்ற விமான மாடலை முதலில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் 10 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்டதாக இருக்கும்.
பாதுகாப்பு வசதிகள்
இந்த விமானத்தில் 11 பாரசூட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அகலமான கண்ணாடி ஜன்னல்கள், சிறப்பான இடவசதி கொண்டதாக இருக்கும். பயணிகள் மிகுந்த பாதுகாப்பு உணர்வுடன் பயணிக்க முடியும் என மஹிந்திரா தெரிவிக்கிறது.
பன்முக பயன்பாடு
பயணிகள் சேவை துறை மட்டுமின்றி, மீட்புப் பணிகள், ராணுவப் பணிகள், சுற்றுலாத் துறை, ஆம்புலன்ஸ், சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் வசதி கொண்டதாக இருக்கும். இந்த விமானத்தின் இருக்கைகளை தேவைப்படும்போது சில நிமிடங்களில் கழற்றிவிட முடியும்.
மஹிந்திரா மகிழ்ச்சி
பல ஆண்டுகளாக இந்தியாவில் விமானங்களை விற்பனை செய்வதற்கு இருந்து வந்த முட்டுக்கட்டைகள் தற்போது நீங்கியுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடியின் சமீபத்திய ஆஸ்திரேலிய பயணமும் இதற்கு பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும், இது மிகுந்த ஊக்கமளிப்பதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!