இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனையில் 5 ஆண்டுகளாக கலக்கி வரும் டெய்ம்லர்..!!

இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனையில் 5 ஆண்டுகளாக கலக்கி வரும் டெய்ம்லர்..!!

By Azhagar

இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனையில் பாரத்பென்ஸ் என்ற பிராண்டின் கீழ் கால்பதித்து 5 ஆண்டுகள் ஆனதை டெய்ம்லர் நிறுவனம், விமர்சையாக கொண்டாடி வருகிறது.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

2012ல் இந்தியாவில் தனித்துவமான தயாரிப்பு மற்றும் செயல்பாட்டால் வர்த்தக வாகன பிரிவில் நுழைந்து விற்பனையில் புதிய பாதையை அமைத்து தந்த நிறுவனம் டெய்ம்லர்.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

இதுவரை டெய்ம்லர் தயாரித்த சுமார் 55,000 பாரத்பென்ஸ் டிரக்குகள் 2012ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

2017ல் வர்த்தக வாகன உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டும் விதமாக பாரத்பென்ஸ் டிரக்குகளின் விற்பனை திறன் திட்டமிடப்படும் என டெய்ம்லர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

கடந்த மாதங்களாகவே டெய்ம்லர் வர்த்த வாகன உற்பத்தியில் 2 அடுக்கு விற்பனை திறனை காட்டி வருகிறது.

பிறகு அரசின் விதிக்கு உட்பட்டு வாகனங்கள் அனைத்து பிஎஸ்4 திறனுக்கு மாற்றப்பட்டு அதுவும் நல்ல விற்பனை திறனை எட்டியது.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

இதற்கு அச்சாரம் அமைக்கும் விதமாக, வர்த்தக வாகன தயாரிப்பிற்காக விரைவில் சென்னையில் தனது இரண்டாவது ஆலையை அமைக்கிறது டெய்ம்லர்.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

மேலும் இங்கே தயாரிக்கப்படும் பாரத்பென்ஸ் டிரக்குகள் இந்தியாவில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

இந்தியாவில் கால்பதித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, பார்தபென்ஸ் டிரக்கில் புதிய நடுத்தர ரக டிரக்கை வாடிக்கையாளர்களுக்காக டெய்ம்லர் தயாரித்துள்ளது.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

யூரோ 5 தர சான்றிதழ் பெற்றுள்ள இந்த டிரக்குகள் நைட்ரஸ் ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுபடுத்துவதில் 40 சதவீதம் பிஎஸ்4 எஞ்சினை விட திறன் பெற்றவை.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

இதுபற்றி டெய்ம்லருக்கான ஆசிய தலைவரான மார்க் லில்ஸ்டோசெல்லா, "கடந்த 5 ஆண்டுகளில் பாரத்பென்ஸ் டிரக்குகளை உலகளவில் நல்ல விற்பனையை பெற்றுள்ளது. இதை செயல்படுத்துக்காட்டிய வாடிக்கையாளர்கள் மற்றும் எங்களுக்கு கிடைத்த பங்குதார்கள் அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

டெய்ம்லர் இந்தியாவிற்கான தலைமை செயல் அதிகாரியான எரிச் நெஸல்ஹாஃப் பேசும் போது,

"பாரத்பென்ஸ் மீதிருக்கும் வரவேற்பு இன்னும் அப்படியே இருக்கிறது. சுமார் 16 முதல் 49 டன்களுக்கான தேவை வாடிக்கையாளர்களிடம் அதிகரித்துள்ளது" என்று கூறினார்.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

2012 செப்டம்பரில் பாரத்பென்ஸ் இந்திய சந்தைக்குள் கால்பதித்தது. கடந்த 2014, ஏப்ரலில் சுமார் 10,000 டிரக்குகள் முதற்கட்டமாக விற்பனை செய்தது.

இந்தியாவில் 6வது ஆண்டில் தடம்பதிக்கும் டெய்ம்லர்..!!

மேலும் எஞ்சின் திறனை பிஎஸ்4-க்கு மாற்ற சொல்லி மத்திய அரசு விதித்த உத்தரவின் போது, அதற்கு ஏற்றவாறு தனது உற்பத்தி திறனை மாற்றியும் விற்பனையில் சாதித்தது டெய்ம்பலர் பாரத்பென்ஸ்.

Most Read Articles
மேலும்... #டெய்ம்லர் #daimler
English summary
Read in Tamil: Daimler India Commercial Vehicles celebrates the 5th anniversary of the market launch of BharatBenz trucks. Click for Details...
Story first published: Wednesday, September 20, 2017, 15:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X