Just In
- 14 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 44 min ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 2 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வர்த்தக ரீதியில் சேவைக்கு வந்த இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பஸ்!
முதல்முறையாக இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
வர்த்தக ரீதியில் சேவைக்கு வந்த இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பஸ் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதத்தில், பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வரும் 2030ம் ஆண்டிற்குள் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், இதற்கான முதல்படியாக பேட்டரியில் இயங்கும் வர்த்தக வாகனங்களை தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக வணிக ரீதியிலான முதல் எலக்ட்ரிக் பஸ் பொது சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த குலு- மணாலி- ரோத்தங் கணவாய் வரை இந்த பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பஸ்சை கோல்டுஸ்டோன் இன்ஃப்ராடெக் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்கிறது.
இந்த பஸ் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கோல்டு ஸ்டோன் இ-பஸ் கே7 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பஸ்சில் 25 பயணிகள் செல்ல முடியும். செங்குத்தான மலைச்சாலைகள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 13,000 அடி உயரத்தில் இந்த மின்சார பஸ் இயக்கப்படுகிறது.
இந்த எலக்ட்ரிக் பஸ் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சாலையில் இயக்குவதற்கான தகுதிச் சான்றை இந்திய வாகன ஆராய்ச்சி கூட்டமைப்பு [அராய்] வழங்கி இருக்கிறது.
இந்த பஸ்சில் இருக்கும் பேட்டரிகளை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது அதிகபட்சமாக 200 கிமீ தூரம் வரை பயணிக்கும். 4 மணிநேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
இந்த பஸ்சில் லித்தியம் அயான் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி மிகவும் பாதுகாப்பானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பஸ்சில் இருக்கும் விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பு சொகுசு பஸ்களுக்கு நிகரான பயண அனுபவத்தை தரும்.
அடுத்து 25 மின்சார பஸ்களை இமாச்சலப் பிரதேச போக்குவரத்துத் துறைக்கு டெலிவிரி கொடுக்க இருப்பதாகவும், மலைப்பாங்கான பகுதியில் இயக்கப்படும் இந்த பஸ் மின்சார பஸ்களுக்கு முன்னோடியாக இருக்கும் என்றும் கோல்டுஸ்டோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோல்டுஸ்டோன்- பிஒய்டி நிறுவனங்களின் புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல்கள் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்
-
அம்பானியிடம் கூட இல்ல!! இளைஞர் வாங்கியுள்ள காரை பார்த்து வாயடைத்து நிற்கும் நெட்டிசன்கள்... முதல் கார் ஓனர்!!