Just In
- 26 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் வடிவமைப்பு பினின்ஃபரீனா வசம் செல்கிறது!
புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை பினின்ஃபரீனா நிறுவனம் உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனங்களும் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை பினின்ஃபரீனா நிறுவனம் வடிவமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்யூவி தயாரிப்பில் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனம் மிக பிரபலமானதாக விளங்குகிறது. அதேபோன்று, கார் வடிவமைப்பில் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் உலகப் புகழ்பெற்றது. இந்த இரு நிறுவனங்களும் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த சகோதர பந்தத்தை பயன்படுத்தி, புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் வடிவமைப்புப் பணிகளை பினின்ஃபரீனா வசம் ஒப்படைத்துள்ளது சாங்யாங் மோட்டார்ஸ். இந்த தகவலை சாங்யாங் நிறுவனத்தின் சிஇஓ ஜோங் சிக் சோய் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி டி200 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புதிய தலைமுறை மாடலை வடிவமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டதாகவும் சாங்யாங் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி வரும் 2021 அல்லது 2022ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி எந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. எஞ்சின் ஆப்ஷன்களில் மாறுதல் இருக்குமா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்க இன்னும் சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும்.
தற்போதைய மாடல் சாங்யாங் லிவ்-2 கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஜி4 ரெக்ஸ்டன் என்ற பெயரில் தென்கொரியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் அங்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பொறுப்பு பினின்ஃபரீனாவிடம் சென்றுள்ளதால், நிச்சயமாக புதிய ரெக்ஸ்டன் வடிவமைப்பில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், ஃபெராரி, பிஎம்டபிள்யூ என பல முன்னணி கார் நிறுவனஙகளின் புகழ்பெற்ற கார் மாடல்களை பினின்ஃபரீனா நிறுவனம்தான் உருவாக்கி கொடுத்துள்ளது.
Source: CarMagazine