Just In
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நாடு முழுவதும் அதிகாரிகள் வேட்டை தொடங்கியது.. இந்த சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சிக்கல்
உங்கள் வாகனத்திற்கு இந்த சான்றிதழ் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அடுத்த முறை உங்கள் வாகனம் சாலைக்கு வரும்போது, அதிகாரிகளிடம் அபராதம் கட்ட நீங்கள் வரிசையில் நிற்க நேரிடலாம்.
உங்கள் வாகனத்திற்கு இந்த சான்றிதழ் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அடுத்த முறை உங்கள் வாகனம் சாலைக்கு வரும்போது, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அபராதம் கட்ட நீங்கள் வரிசையில் நிற்க நேரிடலாம்.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை நமது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கி வருகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அனைத்து வாகனங்களுக்கும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (Pollution Under Control Certificate) பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பதில்லை.
இதனால் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறாத வாகனங்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன தணிக்கை நடத்த தொடங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லியில் கடந்த 5ம் தேதி வாகன தணிக்கை தொடங்கப்பட்டது. அன்று முதல் கடந்த 22ம் தேதி வரை மட்டும் மொத்தம் 10,787 வாகனங்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்தனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்ட 10,787 வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை. அவை சுற்றுச்சூழலை மிக அதிகமாக மாசுபடுத்தின. எனவேதான் அந்த வாகனங்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
இதுதவிர 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் வாகனங்கள் அதிகளவில் சாலையில் இயங்கி கொண்டிருப்பதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருந்தன.
எனவே இது தொடர்பாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது 15 ஆண்டுகளுக்கும் மேலான 148 டீசல் வாகனங்கள் இயங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த 148 டீசல் வாகனங்களையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''மொத்தம் 10,787 வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளோம். மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு எதிராக போக்குவரத்து துறை வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை இது.
இந்த வாகன தணிக்கையை நடத்துவதற்காக 60 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 6 அதிகாரிகள் வரை இடம்பெற்றுள்ளனர். எங்களிடம் உள்ள அனைத்து ஊழியர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.
தற்போது எங்களது கவனம் எல்லாம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் மட்டும்தான் உள்ளது. எனவே வாகன தணிக்கையை தொடர்ந்து நடத்தவுள்ளோம். காற்றின் தரம் மேம்படும் வரை வாகன தணிக்கையை தொடர முடிவு செய்துள்ளோம்'' என்றனர்.
எனவே வரும் நாட்களில் வாகன தணிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. முதலில் வாகன தணிக்கை நடைபெறும் இடங்களுக்கு சென்று வர அதிகாரிகளுக்கு போதிய அளவில் வாகனங்கள் இல்லை. வாகனங்களுக்கு பற்றாக்குறை நிலவி வந்தது.
ஆனால் தற்போது 27 வாகனங்கள் அதிகாரிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் எல்லாம் நாளை (அக்டோபர் 26) முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. எனவேதான் இனி அதிகாரிகளின் வாகன தணிக்கை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''அதிக எண்ணிக்கையிலான டூவீலர்கள், கார்கள் சாலையில் இயங்குவதால் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபடுகிறது. எனவே ஒவ்வொரு தனி நபரும் தங்கள் சொந்த வாகனத்தில் வருவதற்கு பதிலாக பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம்'' என்றனர்.
இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. எனவே இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் தேவைதான். ஆனால் இதனை பயன்படுத்தி கொண்டு அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்கி விடக்கூடாது என்பதே வாகன ஓட்டிகள் அனைவரின் எதிர்பார்ப்பும்.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!