Just In
- 30 min ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
Don't Miss!
- Movies இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மோடி சார் நீங்க சொன்ன வட மாநில இளைஞர்கள் இவங்கதானா? இந்த செயலுக்குதான் நாடே பெருமிதப்படுகிறதா?
போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த 3 வட மாநில இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த காரியம் பிரதமர் மோடி குறிப்பிட்டதற்கு நேர் எதிராக உள்ளது.
போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த 3 வட மாநில இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த காரியம் பிரதமர் மோடி குறிப்பிட்டதற்கு நேர் எதிராக உள்ளது.
இந்தியாவில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதே இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் கொள்ளையடிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் மறுபக்கம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக நகர பகுதிகளில்தான் அதிக அளவிலான வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இட பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடம் கிடைப்பதில்லை. எனவே வீடு, அலுவலகங்களுக்கு வெளியே பாதுகாப்பற்ற முறையில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன.
இதனை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களை கொள்ளையர்கள் இரவு நேரங்களில் எளிதாக திருடி சென்று விடுகின்றனர்.
அத்துடன் ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்துவது போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கு வாகன உரிமையாளர்கள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை. இதன் காரணமாக கொள்ளையடிக்கப்படும் வாகனங்கள் எங்கே உள்ளது? என்பதை கண்டறிவது மிக கடினமான விஷயமாக மாறிவிடுகிறது.
இந்தியாவில் அதிக அளவில் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக என்சிஆர் (NCR) எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியம் (National Capital Region) உள்ளது. டெல்லி, மீரட், குர்கான், நொய்டா உள்ளிட்ட நகரங்கள் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் கீழ் வருகின்றன.
தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. எனவே வாகன கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி செய்து வந்தனர்.
இந்த சூழலில் ரவீந்தர், அசோக் மற்றும் அன்வர் ஆகிய மூன்று பிரபல கொள்ளையர்கள் தற்போது டெல்லி போலீசார் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் மிகவும் ஆக்டிவ் ஆக செயல்பட்டு வந்துள்ளனர்.
நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியின்படி, அவர்கள் மூவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா பார்ச்சூனர், ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ போன்ற பிரீமியம் எஸ்யூவி கார்களை குறிவைத்து அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பின்னர் அந்த கார்களை, செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளனர். க்ரைம் மற்றும் க்ரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் மற்றும் சிஸ்டம்ஸ் (CCTNs-Crime and Criminal Tracking Network and Systems) உதவியுடன்தான் அவர்கள் மூவரையும் போலீசார் பிடித்துள்ளனர்.
வட மாநில இளைஞர்களை நினைத்து நாடே பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். ஆனால் கொள்ளை வழக்கு என்றால் பெரும்பாலும் வட மாநில இளைஞர்கள்தான் சிக்குகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கொள்ளை சம்பவங்களை பீகார், உத்தரபிரதேசம் மாநிலத்தினர்தான் அரங்கேற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு