Just In
- 3 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 4 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 4 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 7 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மோடி சார் நீங்க சொன்ன வட மாநில இளைஞர்கள் இவங்கதானா? இந்த செயலுக்குதான் நாடே பெருமிதப்படுகிறதா?
போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த 3 வட மாநில இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த காரியம் பிரதமர் மோடி குறிப்பிட்டதற்கு நேர் எதிராக உள்ளது.
போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த 3 வட மாநில இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த காரியம் பிரதமர் மோடி குறிப்பிட்டதற்கு நேர் எதிராக உள்ளது.
இந்தியாவில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதே இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் கொள்ளையடிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் மறுபக்கம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக நகர பகுதிகளில்தான் அதிக அளவிலான வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இட பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடம் கிடைப்பதில்லை. எனவே வீடு, அலுவலகங்களுக்கு வெளியே பாதுகாப்பற்ற முறையில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன.
இதனை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களை கொள்ளையர்கள் இரவு நேரங்களில் எளிதாக திருடி சென்று விடுகின்றனர்.
அத்துடன் ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்துவது போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கு வாகன உரிமையாளர்கள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை. இதன் காரணமாக கொள்ளையடிக்கப்படும் வாகனங்கள் எங்கே உள்ளது? என்பதை கண்டறிவது மிக கடினமான விஷயமாக மாறிவிடுகிறது.
இந்தியாவில் அதிக அளவில் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக என்சிஆர் (NCR) எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியம் (National Capital Region) உள்ளது. டெல்லி, மீரட், குர்கான், நொய்டா உள்ளிட்ட நகரங்கள் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் கீழ் வருகின்றன.
தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. எனவே வாகன கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி செய்து வந்தனர்.
இந்த சூழலில் ரவீந்தர், அசோக் மற்றும் அன்வர் ஆகிய மூன்று பிரபல கொள்ளையர்கள் தற்போது டெல்லி போலீசார் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் மிகவும் ஆக்டிவ் ஆக செயல்பட்டு வந்துள்ளனர்.
நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியின்படி, அவர்கள் மூவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா பார்ச்சூனர், ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ போன்ற பிரீமியம் எஸ்யூவி கார்களை குறிவைத்து அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பின்னர் அந்த கார்களை, செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளனர். க்ரைம் மற்றும் க்ரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் மற்றும் சிஸ்டம்ஸ் (CCTNs-Crime and Criminal Tracking Network and Systems) உதவியுடன்தான் அவர்கள் மூவரையும் போலீசார் பிடித்துள்ளனர்.
வட மாநில இளைஞர்களை நினைத்து நாடே பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். ஆனால் கொள்ளை வழக்கு என்றால் பெரும்பாலும் வட மாநில இளைஞர்கள்தான் சிக்குகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கொள்ளை சம்பவங்களை பீகார், உத்தரபிரதேசம் மாநிலத்தினர்தான் அரங்கேற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!