Just In
- 2 hrs ago எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- 3 hrs ago ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- 5 hrs ago உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- 10 hrs ago பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
Don't Miss!
- News கணேசமூர்த்தி மறைவு சொல்லொணாத் துயரம் தருகிறது.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Movies இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Technology பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்
5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்காக, மோடி தலைமையிலான மத்திய அரசு ஆடிய மெகா நாடகம் இன்று அம்பலமாகியுள்ளது. இந்த நாடகம் என்னவென்று தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியும், கோவமும் அடைவது உறுதி.
5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்காக, மோடி தலைமையிலான மத்திய அரசு ஆடிய மெகா நாடகம் இன்று அம்பலமாகியுள்ளது. இந்த நாடகம் என்னவென்று தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியும், கோவமும் அடைவது உறுதி.
இந்தியாவில் மாதம் இரு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வந்தது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்றே உயர்ந்தாலும் கூட, வெளிப்படையாக வெளியில் தெரிந்து கொண்டிருந்தது.
எனவே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை, தினசரி நிர்ணயம் செய்யும் நடைமுறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விரும்பின. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கியது.
இதனால் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை, தினசரி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு வெளிப்படையாக தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
ஆம், பைசா கணக்கில் மட்டுமே தினசரி விலை உயர்த்தப்பட்டதால், ஆரம்பத்தில் விலை உயர்வு பெரிதாக தெரியவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை புதிய உச்சங்களை தொட்டது.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தபோதுதான், அவற்றின் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் நடைமுறையை மத்திய அரசு தந்திரமாக அமலுக்கு கொண்டு வந்தது ஏன்? என்ற காரணம் அனைவருக்கும் புரிய தொடங்கியது.
எனவே பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என அனைவரும் வலியுறுத்த தொடங்கினர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்த சூழலில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிய தொடங்கியது. அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர தொடங்கியது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்வை சந்தித்தது.
உச்சகட்டமாக பெட்ரோல் விலை ஒரு சில இடங்களில் 90 ரூபாயை கடந்தது. பெட்ரோல் விலை 90 ரூபாயை கடப்பது என்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. எனவே மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
குறைந்தபட்சம் மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் அதிகப்படியான வரிகளை கைவிட்டு விட்டு, ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தற்போது மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டு வருகின்றன. எனவே ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில், ஒரே ஒரு வரி மட்டுமே என்பதால், அதன் விலை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் இருந்தன.
ஆனால் வரிகள் மூலம் கிடைக்கும் அதிகமான வருவாயை இழந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக அந்த கோரிக்கையையும் மத்திய அரசு நிறைவேற்றவே இல்லை. சொல்லப்போனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க சொல்லிக்கொள்ளும்படியான பெரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவே இல்லை.
இதெல்லாம் கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி வரைதான். அதன்பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. திடீரென பெட்ரோல், டீசல் விலை குறைய தொடங்கியதால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
தமிழக தலைநகர் சென்னையில் கடந்த அக்டோபர் 17ம் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 86.10 ரூபாய். இங்கு நேற்றைய நிலவரப்படி (டிசம்பர் 12) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 72.82 ரூபாய். ஆக மொத்தம் 57 நாட்களில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 13.28 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கடந்த அக்டோபர் 17ம் தேதி நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 80.04 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்தது. ஆனால் நேற்யை நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 68.26 ரூபாய் மட்டுமே. அதே 57 நாட்களில், ஒரு லிட்டர் டீசலின் விலை 11.78 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இடைப்பட்ட இந்த 57 நாட்களில் ஒரு முறை கூட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்த்தப்படவே இல்லை. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கொண்டே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் மத்திய அரசு நாடகம் ஆடுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
ஆம், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த இதன் முடிவுகள், நேற்று முன் தினம் (டிசம்பர் 11) வெளியானது.
இதில், மத்தியில் ஆளும் பாஜக மண்ணை கவ்வியுள்ளது. பாஜக வசம் இருந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களை காங்கிரஸ் தன் வசப்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டீரிய சமிதியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த 5 மாநில தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு குறைப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. தேர்தல் முடிவடைந்ததும் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்பதும் எதிர்கட்சிகளின் வாதமாக இருந்தது.
சாமானிய பொதுமக்களும் கூட அதைத்தான் தெரிவித்தனர். ஆனால் இடையில் ஒரு சிலர் மட்டும் இல்லை... இல்லை... பொதுமக்கள் மீதான கரிசனத்தால்தான் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வருவதாக முட்டு கொடுத்து கொண்டிருந்தனர்.
ஆனால் அதெல்லாம் இல்லை, பொதுமக்களும், எதிர்கட்சிகளும் கூறியபடி தேர்தல்தான் காரணம் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆம், 57 நாட்களுக்கு பிறகு இன்று (டிசம்பர் 13) பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 72.82 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்தது. ஆனால் இன்று அதன் விலை 12 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 72.94 காசுகளாக உயர்ந்துள்ளது.
தேர்தல் முடிந்து, அதன் முடிவுகள் நேற்று முன் தினம்தான் வெளியானது. அப்படி இருக்கையில், 57 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்து வந்த பெட்ரோல் விலை, உடனடியாக உயர்த்தப்படுகிறது என்றால், அதற்கு என்ன காரணம்? என்பது அனைவருக்கும் தெளிவாக புரியும்.
அதே நேரத்தில் இன்று டீசல் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் நேற்று விற்பனையான அதே 68.26 ரூபாய் என்ற விலையில்தான் இன்றும் டீசல் விற்பனையாகி கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை வெகுவாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம். இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. அந்த அறிவிப்பு வெளியான உடனேயே மீண்டும் பெட்ரோல், டீசல் விலை இதே பாணியில் குறைக்கப்படலாம்!!
முன்னதாக 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை பெரிதாக எதிரொலித்து விடக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசு விலையை குறைத்தது. மத்திய அரசு எதிர்பார்த்தது போலவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை பெரிய அளவில் எதிரொலிக்கவில்லை.
Image Source: English Manoramaonline
அப்படி இருந்தும் கூட பாஜக வெற்றி பெற தவறியுள்ளது. ஆடிய நாடகம் எல்லாம் வீணாக போய் விட்டதோ? என நினைத்து புலம்பி கொண்டிருக்கின்றனர் பாஜக பெருந்தலைகள். முன்னதாக கடந்த மே மாதத்தில், கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
அப்போதும் கூட இதே பாணியில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தாமல் இருந்து வந்தது. ஆனால் தேர்தல் முடிந்த உடனேயே மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது. இதில் பரிதாபம் என்னவென்றால், மத்திய அரசின் இந்த நாடகம் கர்நாடகாவிலும் பலிக்கவில்லை என்பதுதான். கர்நாடகாவிலும் பாஜகவிற்கு தோல்வியே பரிசாக கிடைத்தது.
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்
-
அகமதாபாத் வேற லெவலில் மாற போகுது!! புல்லட் இரயிலில் இருந்து எல்லாமே வருது... ஓப்பனாக பேசிய மத்திய அமைச்சர்!