Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?
புத்தம் புதிய சியாஸ் கார்களில் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. எனவே சரி செய்து தருவதற்காக, அவற்றை திரும்ப பெறவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
புத்தம் புதிய சியாஸ் கார்களில் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. எனவே சரி செய்து தருவதற்காக, அவற்றை திரும்ப பெறவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய 2018 மாருதி சுஸுகி சியாஸ் ஃபேஸ்லிப்ட் கார், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய மாருதி சுஸுகி சியாஸ் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் சியாஸ் டீசல் கார்களின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களின் ஸ்பீடோமீட்டர்களில் (Speedometer) குறைபாடு இருப்பதை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது கண்டறிந்துள்ளது.
அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் 1 மற்றும் செப்டம்பர் மாதம் 21 ஆகிய தேதிகளுக்கு இடையே உற்பத்தி செய்யப்பட்ட சியாஸ் டீசல் கார்களின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களில்தான் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 880 கார்களில் குறைபாடு உள்ளது.
எனவே அந்த 880 கார்களையும் திரும்ப பெற உள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் ஸ்பீடோமீட்டர்களை மாற்றி தருவதற்கான சிறப்பு சர்வீஸ் முகாம்களை மாருதி சுஸுகி நிறுவன டீலர்கள் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதியே தொடங்கி விட்டனர்.
மாருதி சுஸுகி நிறுவனம் இதற்கென சிறப்பு இணைய தள பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. சியாஸ் டீசல் கார்களின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட் உரிமையாளர்கள், தங்களது கார்களில் குறைபாடு உள்ளதா? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மாருதி சுஸுகி நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ள இணைய தள பக்கத்தில் காரின் சேஸிஸ் நம்பரை என்டர் செய்வதன் மூலமாக இதற்கு விடை கிடைக்கும். அந்த இணைய தள பக்கத்திற்கு செல்ல வேண்டுமானால் இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதில், குறைபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டால், உடனடியான மாருதி சுஸுகி நிறுவன டீலர்களை அணுகி ஸ்பீடோமீட்டர்களை மாற்றி கொள்ளலாம். இதற்கான செலவு அனைத்தும் இலவசம்தான் என மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்பீடோமீட்டர்களின் குறைபாடு காரணமாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்னையும் வராது என்றும், இது சிறிய அளவிலான பிரச்னைதான் என்றும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. என்றாலும் அவற்றை உடனடியாக மாற்றி தந்துவிட மாருதி சுஸுகி நிறுவனம் முன்வந்துள்ளது.
புதிய 2018 மாருதி சுஸுகி சியாஸ் ஃபேஸ்லிப்ட் கார், ரூ.8.19 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) என்ற ஆரம்ப விலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய மாருதி சுஸுகி சியாஸ் காரானது சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா என 4 வேரியண்ட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் பெட்ரோல் வேரியண்ட்களில் ஆல் நியூ 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் டீசல் வேரியண்ட்களில் 1.3 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 88 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..