Just In
- 4 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 4 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?
புத்தம் புதிய சியாஸ் கார்களில் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. எனவே சரி செய்து தருவதற்காக, அவற்றை திரும்ப பெறவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
புத்தம் புதிய சியாஸ் கார்களில் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. எனவே சரி செய்து தருவதற்காக, அவற்றை திரும்ப பெறவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய 2018 மாருதி சுஸுகி சியாஸ் ஃபேஸ்லிப்ட் கார், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய மாருதி சுஸுகி சியாஸ் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் சியாஸ் டீசல் கார்களின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களின் ஸ்பீடோமீட்டர்களில் (Speedometer) குறைபாடு இருப்பதை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது கண்டறிந்துள்ளது.
அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் 1 மற்றும் செப்டம்பர் மாதம் 21 ஆகிய தேதிகளுக்கு இடையே உற்பத்தி செய்யப்பட்ட சியாஸ் டீசல் கார்களின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களில்தான் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 880 கார்களில் குறைபாடு உள்ளது.
எனவே அந்த 880 கார்களையும் திரும்ப பெற உள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் ஸ்பீடோமீட்டர்களை மாற்றி தருவதற்கான சிறப்பு சர்வீஸ் முகாம்களை மாருதி சுஸுகி நிறுவன டீலர்கள் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதியே தொடங்கி விட்டனர்.
மாருதி சுஸுகி நிறுவனம் இதற்கென சிறப்பு இணைய தள பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. சியாஸ் டீசல் கார்களின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட் உரிமையாளர்கள், தங்களது கார்களில் குறைபாடு உள்ளதா? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மாருதி சுஸுகி நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ள இணைய தள பக்கத்தில் காரின் சேஸிஸ் நம்பரை என்டர் செய்வதன் மூலமாக இதற்கு விடை கிடைக்கும். அந்த இணைய தள பக்கத்திற்கு செல்ல வேண்டுமானால் இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதில், குறைபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டால், உடனடியான மாருதி சுஸுகி நிறுவன டீலர்களை அணுகி ஸ்பீடோமீட்டர்களை மாற்றி கொள்ளலாம். இதற்கான செலவு அனைத்தும் இலவசம்தான் என மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்பீடோமீட்டர்களின் குறைபாடு காரணமாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்னையும் வராது என்றும், இது சிறிய அளவிலான பிரச்னைதான் என்றும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. என்றாலும் அவற்றை உடனடியாக மாற்றி தந்துவிட மாருதி சுஸுகி நிறுவனம் முன்வந்துள்ளது.
புதிய 2018 மாருதி சுஸுகி சியாஸ் ஃபேஸ்லிப்ட் கார், ரூ.8.19 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) என்ற ஆரம்ப விலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய மாருதி சுஸுகி சியாஸ் காரானது சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா என 4 வேரியண்ட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் பெட்ரோல் வேரியண்ட்களில் ஆல் நியூ 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் டீசல் வேரியண்ட்களில் 1.3 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 88 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு