Just In
- 1 hr ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 4 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 5 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 7 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- News லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? தாமரை மலருது?
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..! "தல" என்னிக்கும் தல தான்.
தனது காருக்கு பின்னால் பைக்கில் பின் தொடர்ந்த ரசிகர் மீது அக்கறை கொண்டு அவரை அழைத்து நடிகர் அஜித் இவ்வாறு பின் தொடர்ந்தால் நீங்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என அறிவுரை கூறியுள்ளார். இந்த பதிவு
தனது காருக்கு பின்னால் பைக்கில் பின் தொடர்ந்த ரசிகர் மீது அக்கறை கொண்டு அவரை அழைத்து நடிகர் அஜித் இவ்வாறு பின் தொடர்ந்தால் நீங்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என அறிவுரை கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
தனது காருக்கு பின்னால் பைக்கில் பின் தொடர்ந்த ரசிகர் மீது அக்கறை கொண்டு அவரை அழைத்து நடிகர் அஜித் இவ்வாறு பின் தொடர்ந்தால் நீங்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என அறிவுரை கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் அவர் நடித்து வரும் விஸ்வாசம் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அஜித் தரப்பில் இருந்து அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில் அவர் படத்திற்காக தான் வைத்திருந்த புதிய கெட்டப்பை மாற்றி வழக்கமான தனது ஸ்டைலுக்கு மாறினார்.
இந்த புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்திலிருந்து காரில் சென்ற நடிகர் அஜித்தை அவரது ரசிகர் ஒருவர் தொடர்ந்து பின் தொடர்ந்துள்ளார். இதை கண்ட நடிகர் அஜித் காரை நிறுத்தி அவருக்கு அறிவுரை சொல்லியுள்ளார்.
நடிகர் அஜித் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் வந்த செய்தி கேட்டு அங்கு தீடீர் என கூட்டம் கூடியது. இதனால் திக்கு முக்காடி போன நடிகர் அஜித்தின் குழு அவரை ஒரு வழியாக அந்த கூட்டத்தை விட்டு வெளியேற்றி காருக்குள் ஏற்றிவிட்டனர்.
அவர் அங்கிருந்து தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். இதை விமான நிலையத்திலேயே பார்த்த அவரது ரசிகர் ஒருவர் தனது பைக்கில் அவரை பின் தொடர்ந்தே சென்றுள்ளார். இதை முதலில் கவனிக்காத அஜித் சிறிது கி.மீ. சென்றதும் கவனிக்க துவங்கியுள்ளார்.
பின் தொடர்ந்து வரும் பைக் குறித்து தனது டிரைவரிடம் கேட்டுள்ளார். அவர் அந்த பைக்கில் வருபவர்கள் விமான நிலையத்தில் இருந்தே பின் தொடர்ந்து வருவதாக பதிலளித்துள்ளார். பின்பு அந்த ரசிகரை கவனித்த அஜித் தனது காரை நிறுத்த சொல்லியுள்ளார்.
பின்பு தனது டிரைவரிடம் சொல்லி பின் தொடர்ந்து வரும் அந்த ரசிகரை தன்னிடம் அழைத்துள்ளார். பின் அந்த ரசிகருக்கு இவ்வாறு பின் தொடர்ந்து வராதீர்கள் என்னை பார்க்கும் ஆர்வத்தில் நீங்கள் விபத்தில் சிக்க நேரிடும்.
அவ்வாறு நீங்கள் விபத்தில் சிக்கினால் அது எனக்குதான் கஷ்டமாக இருக்கும். இதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் என கூறினர். அதன் பின் அந்த ரசிகர் கேட்டு கொண்டதற்கு இணங்க அவருடன் புகைப்படம் எடுக்க ஒப்பு கொண்டார்.
அந்த தகவலை அந்த ரசிகரே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது நடிகர் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
அவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் காரின் பின் சீட்டின் ஜன்னல் அருகே அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருக்கும் போது சீட் பெல்டை அணிந்திருந்தார்.
பொதுவாக நடிகர் அஜித் ஆட்டோமொபைல் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பைக் ரேஸ், கார் ரேஸ் என கலக்கி வந்த நடிகர் அஜித் தற்போது சில அறுவை சிகிச்சைகள் காரணமாக அதை விட்டு விட்டார்.
அவ்வப்போது கார் ரேஸ், பைக் ரேஸ், காராஜ்கள் என விசிட் அடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் ரேஸ் பைக் தயார் செய்யும் கராஜில் உள்ள புகைப்படம் வெளியானது.
மேலும் அவர் பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் போட வேண்டியது மற்றும் காரில் செல்லும் போது சீட் பெல்ட் போட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை அவரது நிஜ வாழ்விலும், சினிமாவிலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கடை பிடித்து வருகிறார்.
சினிமாக்களில் அவர் நடிக்கும் காட்சிகளில் பைக் ஓட்டுவது போலவோ அல்லது கார் ஓட்டுவது போலவோ காட்சிகள் அமைக்கப்பட்டால் அதில் நிச்சயம் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் இடம் பெற்றிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
நடிகர் அஜித் ரசிகர்கள் மத்தியில் இவ்வாறு குணமாக சொல்லும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். இது போன்ற செய்திகள் தொடர்ந்து வருவதால் இனி மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கூட அஜித் ரசிகர்களாக மாறிவிடுவார்கள் போல
நடிகர் அஜித் தலைமையில் சென்னை இன்ஜினியரிங் மாணவர்கள் வடிவமைத்த ஆளில்லாமல் பறக்கும் ட்ரோனுக்கு உலகளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த ட்ரோன் உலகில் நீண்ட நேரம் மற்றும் நீண்ட தூரம் பறக்கும் ஆளில்லா ட்ரோன் எனவும் கருதப்படுகிறது. இந்த ட்ரோன் தயாரிக்கும் தொழிற்நுட்பத்தை நடிகர் அஜித்தின் தலைமையில் இயங்கிய குழு இந்திய ராணுவத்திற்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் யூஏவி சேலஞ்ச் (UAV-Unmanned Airborne Vehicles) என்ற போட்டி சர்வதேச அளவில் நடத்தப்படும். இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டியில் கொடுக்கப்படும் டாஸ்க்கை வெற்றிகரமாக செய்யும் வகையில் ஆய்வுகள் மேற்கொண்டு தாங்களாக அறிவியல் கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும். அதன் மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இப்போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து சென்னை எம்ஐடி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தேர்வாகினர். அவர்கள் ஏற்கனவே கடந்த மே மாதம் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடக்கும் இறுதி போட்டிக்கு தேர்வாகினர்.
இந்த போட்டி என்பது வெகு தொலைவில் மருத்துவ உதவியை நாடும் ஒருவருக்கு விரைவில் மருத்துவ உதவியை செய்யும் வகையிலான பொருளை உருவாக்க வேண்டும். இதுவே அந்த போட்டியின் நோக்கம். சென்னை மாணவர்கள் உட்பட உலகம் முழுவதிலும் இருந்து 55 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் கலந்து கொண்டனர். சுமார் 5 நாட்கள் இறுதி போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியானது. சுமார் 22 கி.மீ. தொலைவில் மருத்துவ உதவி தேவைப்படும் ஒருவரிடம் இருந்து அவரது ரத்த மாதிரியை எடுத்து கொண்டு வருவதுதான். இந்த போட்டியில் பறக்கும் ட்ரோன்களை உருவாக்க வேண்டும். அந்த ட்ரோன் சுமார் 12 நாட்டிக்கல் மைல் தூரம் பறந்து ரத்த மாதிரியை பெற்றுக்கொண்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே பறந்து வர வேண்டும். அதாவது அந்த ட்ரோன் மொத்தம் 24 நாட்டிக்கல் மைல்கள் பறக்க வேண்டும். இது சுமார் 44 கி.மீ ஆகும்.
மேலும் இந்த போட்டியில் முக்கிய விதிகள் சிலவும் கடைபிடிக்கப்பட வேண்டும். அதாவது எக்காரணத்தை கொண்டும் ட்ரோன் கொடுக்கப்பட்ட கட்டுப்பாடு எல்லைகளை தாண்டி பறக்க கூடாது. எமர்ஜென்ஜி லேண்டிங்கிற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் ட்ரோன் 10 மீ தூரத்திற்குள் லேண்ட் ஆகி விட வேண்டும்.
ரத்த மாதிரிகளை பெற்ற பின்பு அந்த ட்ரோன் மீண்டும் தானாக டேக் ஆப் செய்து விட வேண்டும். ரத்த மாதிரிகளை பத்திரமாக பேஸ் கேப்பிற்கு கொண்டு வர வேண்டும். இவை எல்லாம் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள்ளாக செய்யப்பட வேண்டும்.
இந்த மாதிரியாக திறனை வெளிக்காட்டும் ட்ரோன்கள் உலகில் எங்குமே இல்லை. இதை மாணவர்கள் புதிதான யுக்திகளை ஆராய்ந்து தாங்களாகவே வடிவமைக்க வேண்டிய சூழல் நிலவியது. இவற்றை வடிவமைக்க சென்னை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு நபரை நியமிக்க எம்ஐடி கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.
Read more at: https://tamil.drivespark.com/off-beat/actor-ajiths-team-dheksha-got-second-place-in-uav-challange/articlecontent-pf121650-015991.html
அப்பொழுது நடிகர் அஜித் பறக்கும் ட்ரோன்களை வடிவமைத்து வருவது குறித்தும், அதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் குறித்தும் எம்ஐடி கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் நடிகர் அஜித்தை அணுகி இந்த போட்டி குறித்து தெரிவித்தது. அத்துடன் மாணவர்களின் கண்டுபிடிப்பிற்கு நடிகர் அஜித் உதவ வேண்டும் என்றும் கேட்டுகொண்டது.
இதை கேட்டதும் அஜித் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டு மாணவர்களுடனான தனது பணியை துவங்கினார். அஜித் ஆலோசனை வழங்கும் குழுவிற்கு "டீம் தக்ஷா" என பெயர் சூட்டப்பட்டது. தற்போது அதிக தூரம் பறப்பதற்காக ட்ரோன்களை உருவாக்க வேண்டும். அதற்காக அஜித் தனது குழுவுடன் சேர்ந்து பணியாற்றினார். இதனால் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் பேட்டரிகளை கொண்டு அதிக நேரம் அதிக தூரம் பறக்கும் ட்ரோன் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டது.
இதற்கிடையில் மும்பையில் ட்ரோன்களுக்கான போட்டி நடந்தது. அதில் "டீம் தக்ஷா" கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தனர். இது ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லேண்ட் பகுதியில் யூஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதி போட்டிகள் கடந்த செப்., 24ம் தேதி துவங்கியது. சுமார் 55 குழுக்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. 5 நாட்கள் நடந்த போட்டியில் 2 குழுக்கள் மட்டுமே போட்டியை வெற்றிகரமாக முடித்தனர். அதில் டீம் தக்ஷாவும் ஒன்று.
இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்தாலே வெற்றிதான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு டீம்கள் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்தது. மோனஷ் யூஏஎஸ் மற்றும் டீம் தக்ஷா ஆகிய அணிகள் வெற்றிகரமாக போட்டியை முடித்த நிலையில் ஒரு குழு மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அதனால் இதை செய்த விதத்தை கொண்டு வெற்றி பெற்றவரை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.
இதில் மோனஷ் யூஏஎஸ் குழுவின் ட்ரோன் ஆட்டோமெட்டிக்காக டேக் ஆப் செய்ய கமெண்ட்களை வழங்க வேண்டியது இருந்தது. தானாக அந்த ட்ரோனால் நிலைமை உணர்ந்து டேக் ஆப் செய்ய இயலவில்லை. மேலும் ஆட்டோமெட்டிக் டேக் ஆஃப் செய்யும் போது சில ஜெர்க்கை அனுபவித்தது.
டீம் தக்ஷாவை பொருத்தவரை டேக் ஆஃப்பிலும், லேண்டிங்கிலும் அசத்தியது. எனினும் எமர்ஜென்ஸி லேண்டிங்கில் 10 மீட்டருக்குள் லேண்ட் ஆக வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த ட்ரோன் 30 மீட்டரில்தான் லேண்ட் ஆனது.
சிறிய சிறிய குறைகள் இருந்தாலும் இந்த டாஸ்கை முழுவதுமாக நிறைவு செய்தது, இந்த இரு அணிகள்தான். மற்ற அணிகளால் டாஸ்க்கை நிறைவு செய்யவே முடியவில்லை. இதையடுத்து நடுவர் குழு இந்த இரு அணிகளையும் பாராட்டியது.
மேலும் இந்த போட்டியை ட்ரோன் பறக்கும் நேரம், இது குறித்து குழுவிடம் நடந்தப்பட்ட நேர்காணல், சமர்பிக்கப்பட்ட ரிப்போர்ட் ஆகியவற்றைக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதில் டீம் தக்ஷா விமானம் பறப்பதில் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றது. இதன் மூலம் உலகிலேயே நீண்ட நேரம் பறக்கும் ட்ரோனாக நடிகர் அஜித் ஆலோசனையில் டீம் தக்ஷா உருவாக்கிய ட்ரோன் இடம் பெற்றுள்ளது. தக்ஷா குழு உருவாக்கிய ட்ரோன் பறக்கும் காட்சியை நீங்கள் கீழே பாருங்கள்.
இருந்தாலும் மதிப்பெண் அடிப்பையில் மோனஷ் யூஏஎஸ் குழு 116.55 மதிப்பெண்களையும், டீம் தக்ஷா குழு 115.70 மதிப்பெண்களையும் பெற்றது. வெறும் புள்ளி 85 மதிபெண்ணில் டீம் தக்ஷா முதலிடத்தை நழுவ விட்டது. இருந்தாலும் இரு அணிகளும் கவுரவிக்கப்பட்டன. நடுவர் குழுவின் பாராட்டுகளை இரு அணிகளும் பெற்றது.
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!
-
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா