Just In
- 3 hrs ago பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
- 4 hrs ago ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- 4 hrs ago சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
- 7 hrs ago ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
Don't Miss!
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை..
அறிமுகம் ஆன முதல் முயற்சியிலேயே, ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அறிமுகம் ஆன முதல் முயற்சியிலேயே, ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கடினமான இந்த போட்டியில், இந்தியா வெற்றி பெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
எப்ஐஏ எனப்படும் பெடரேஷன் இன்டர்நேஷனல் தி ஆட்டோமொபைல் அமைப்பால், ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் (இஆர்சி) போட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய கண்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1953ம் ஆண்டு முதல் இந்த போட்டி நடைபெற்று கொண்டுள்ளது.
இதனிடையே 2018 எப்ஐஏ ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது சுற்று, கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்றது. இதில், இந்தியர்களான அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் முதல் முறையாக கலந்து கொண்டனர்.
முதல் முறை என்றாலும் அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாகை சூடினர். இதன்மூலம் பாரம்பரியம் மிக்க ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற முதல் இந்திய கூட்டணி என்ற சாதனையை அவர்கள் படைத்தனர்.
அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் ஃபோர்டு பியஸ்டா ஆர்2 காரை ஓட்டினர். பால்டிக் மோட்டார் ஸ்போர்ட் ப்ரமோஷன் என்ற மோட்டார் ஸ்போர்ட் கம்பெனி அந்த காரை தயார் செய்திருந்தது. இந்த கம்பெனி லாத்வியாவை அடிப்படையாக கொண்டது.
அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் அடங்கிய இந்திய கூட்டணிக்கான ஸ்பான்ஸரை, ராமகிருஷ்ணா ரேஸ் பெர்மார்மென்ஸ் மேனேஜ்மெண்ட் (ஆர்ஆர்பிஎம்) மற்றும் பானா எஜூகேனஷனல் குருப் ஆகியவை செய்திருந்தன.
இந்திய தேசிய ரேலி சாம்பியனான (ஐஎன்ஆர்சி) அமித்ரஜித் கோஸ்தான், ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது சுற்றில், டிரைவராக செயல்பட்டார். 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஐஎன்ஆர்சி பட்டத்தை அமித்ரஜித் கோஸ் வென்றுள்ளார். அமித்ரஜித் கோஸ் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர்.
அமித்ரஜித் கோசுக்கு கோ-டிரைவராக செயல்பட்ட அஸ்வின் நாயக், கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர். இந்திய மண்ணில் நடைபெற்ற கிட்டத்தட்ட அனைத்து ரேலிகளிலும் அஸ்வின் நாயக் வெற்றி பெற்றுள்ளார்.
ஹிமாலயன் ரேலி மற்றும் டெசர்ட் ஸ்ட்ரோம் ரேலிக்களில் தலா 5 முறை அவர் வெற்றி வாகை சூடியுள்ளார். அதுமட்டுமின்றி சப்-ஹிமாலயன் ரேலியில் 4 முறை அவர் வெற்றி பெற்றுள்ளார். அமித்ரஜித் கோசுக்கு மிக நீண்ட நாட்களாக அவர் கோ-டிரைவராக இருந்து வருகிறார்.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டீஸ் ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில், அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் அடங்கிய இந்திய கூட்டணி அசத்தலாக செயல்பட்டிருந்தது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, அவர்களால் அப்போது அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.
தற்போது படைத்துள்ள சாதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமித்ரஜித் கோஸ், ''பழைய தலைமுறை ஃபோர்டு பியஸ்டா ஆர்2 காருடன்தான் போட்டிக்கு வந்திருந்தோம். எனினும் போட்டியை நிறைவு செய்து விட வேண்டும் என்பதைதான் முதல் இலக்காக வைத்திருந்தோம். போட்டியை நிறைவு செய்து விட்டால், நிச்சயமாக பதக்க மேடை ஏறி விட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது'' என்றார்.
மிக வேகமாக செல்வதை காட்டிலும் பாதுகாப்பாக பயணிப்பதில்தான் இந்திய கூட்டணி அதிக கவனம் செலுத்தியது. அமித்ரஜித் கோஸ் கூறியது போல் அதுதான் இந்திய கூட்டணிக்கு வெற்றி தேடி தந்தது. கரடுமுரடான பாதையில் அதிவேகமாக பயணித்ததால், எதிரணி வீரர்கள் ஒரு சிலரின் கார்கள் சேதமடைந்தன. இதனால் போட்டியை நிறைவு செய்ய முடியாமல், அவர்கள் பாதியிலேயே விலக நேரிட்டது.
இதுகுறித்து பானா எஜூகேனஷனல் குருப் சேர்மன் டாக்டர் பிரசாத் ஹெக்டே கூறுகையில், ''அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் இந்தியாவிற்கு பெருமையை கொண்டு வந்துள்ளனர். ஸ்பான்ஸர்ஷிப் மூலமாக அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது மகிழ்ச்சி'' என்றார்.
-
அம்பானியிடம் கூட இல்ல!! இளைஞர் வாங்கியுள்ள காரை பார்த்து வாயடைத்து நிற்கும் நெட்டிசன்கள்... முதல் கார் ஓனர்!!
-
ஹைவே நம்பருக்கு பின்னால் இவ்வளவு மேட்டரு இருக்கா!! சும்மா கண்ணை மூடி சூஸ் பண்ற விஷயம் கிடையாது!
-
இந்த பேருக்காவே கூட்டம் கூட்டமா போய் வாங்க போறாங்க... மாருதி, டாடா பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய கார்!