Just In
- 39 min ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- 1 hr ago காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- 2 hrs ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- 3 hrs ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
Don't Miss!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்கிறீயா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Movies Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..
வங்கதேச நாட்டிற்கு 300 டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை இந்திய நிறுவனமான அசோக் லேலண்ட் வென்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வங்கதேச நாட்டிற்கு 300 டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை இந்திய நிறுவனமான அசோக் லேலண்ட் வென்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று அசோக் லேலண்ட் லிமிடெட் (ALL). தமிழக தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் நிறுவனத்தை, ஹிந்துஜா குழுமம் நிர்வகித்து வருகிறது.
வணிக வாகன (commercial vehicle) உற்பத்தியில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய நிறுவனம் என்ற அந்தஸ்தை அசோக் லேலண்ட் பெற்றுள்ளது. அதிக அளவில் பஸ்களை உற்பத்தி செய்யும் உலக அளவிலான நிறுவனங்களின் பட்டியலில், அசோக் லேலண்ட் 4வது இடத்தில் உள்ளது.
அத்துடன் டிரக்குகளை (trucks) உற்பத்தி செய்யும் பணியிலும் அசோக் லேலண்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான டிரக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், அசோக் லேலண்ட் தற்போது 12வது இடத்தில் உள்ளது.
இதனிடையே வங்கதேச சாலை போக்குவரத்து கழகத்திற்கு (Bangladesh Road Transport Corporation-BRTC), 300 டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை அசோக் லேலண்ட் நிறுவனம் வென்றுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அதிக அளவிலான டபுள் டக்கர் பஸ்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட டெண்டரில், அசோக் லேலண்ட் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
தற்போதில் இருந்து 8 மாதங்களுக்குள், 300 டபுள் டக்கர் பஸ்களையும், வங்கதேச சாலை போக்குவரத்து கழகத்திற்கு, அசோக் லேலண்ட் நிறுவனம் சப்ளை செய்து விடும். இதன்மூலம் டாக்கா நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும் என வங்கதேச அரசு கருதுகிறது.
இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் கே.தாசரி கூறுகையில், ''எங்களின் முக்கியமான ஏற்றுமதி மார்க்கெட்களில் வங்கதேசமும் ஒன்று. தற்போது வென்றுள்ள ஆர்டரின் மூலம், எங்களின் நிலையை அங்கு இன்னும் வலுவாக்கி கொள்ள முடியும்'' என்றார்.
முன்னதாக லண்டன் மாநகர போக்குவரத்து பயன்பாட்டிற்காக 31 எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் ஆர்டரை, ஆப்ட்ரா பிஎல்சி என்ற நிறுவனம் சமீபத்தில் வென்றது. ஆப்ட்ரா பிஎல்சி என்பது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் ( Transport for London-TfL) எனும் அரசு நிறுவனம்தான், ஆப்ட்ரா பிஎல்சி நிறுவனத்திற்கு, இந்த ஆர்டரை வழங்கியது. TfL என்பது ஓர் அரசு அமைப்பாகும். கிரேட்டர் லண்டனின் போக்குவரத்திற்கு, TfL நிறுவனமே முழு பொறுப்பு.
இந்த ஆர்டரை வென்ற ஆப்ட்ரா பிஎல்சி நிறுவனத்தின் பெருமளவிலான பங்குகளை, இந்திய நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம்தான் தன் கைவசம் வைத்துள்ளது. சமீப காலமாக பல்வேறு வெளிநாடுகளின் ஆர்டர்களை அசோக் லேலண்ட் நிறுவனம் வென்று வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!