Just In
- 3 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 14 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 58 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நீங்களும் சார்ஜிங் சென்டர் அமைத்து சம்பாதிக்கலாம்..! மத்திய அரசு புதிய யோசனை..!
இந்தியாவில் இனி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்து கொள்ளலாம். சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க எந்தவிதமான லைசென்ஸ்களையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று
இந்தியாவில் இனி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்து கொள்ளலாம். சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க எந்தவிதமான லைசென்ஸ்களையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகமாவதோடு, புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகிறது.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் பெட்ரோல் விலையை சமாளிக்க இந்தியர்களுக்கு இருக்கும் ஒரே வழியாக பார்க்கப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தான். பெட்ரோல் இல்லாமல் முழுமையாக பேட்டரி பவரில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களால் மாசு ஏற்படுவதும் குறைகிறது.
இதன் காரணமாக மத்திய அரசு மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு ஊக்கங்களை அளித்து வருகிறது. மஹிந்திரா, ஹீரோ உள்ளிட்ட சில பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க துவங்கிவிட்டனர்.
தற்போது டில்லி, மும்பை, பெங்களூரு, புனே, ஆமதாபாத் ஆகிய இடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த எலெக்ட்ரிக் வாகன விற்பனைக்கு பெரிய தடையாக இருப்பது என்றால் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய இந்தியாவில் போதுமான அளவிற்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாததுதான் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்கள் அதிகமாக திறக்கப்பட்டால் எலெக்ட்ரிக் வாகன விற்பனை தற்போது உள்ளதை விட பல மடங்கு அதிகமாகும் என தெரிகிறது. இதற்கிடையில் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகமாக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் படி இனி தனி நபர்கள் யார் வேண்டுமானாலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை துவக்கலாம் என்ற முறை விரைவில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை துவக்குவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த தகுதியும் நிர்ணயிக்கவில்லை. இதனால் இந்த சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் துவங்க உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அதே சமயம் நாட்டில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜ் ஏற்றும் மையங்களின் தரம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும், ஓலா, உபர் போன்ற வாடகை கார் இயக்கும் நிறுவனங்களும் நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் வைத்துள்ள நிறுவனங்களுக்கு மின்சார விநியோகம் செய்வதற்கான கட்டணத்தை மாநில அரசு நிர்ணயிக்க உள்ளது.
ஒவ்வொரு 3 கி.மீ.,க்குள் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் உரிமம் பெறாமலேயே சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கலாம் என அரசு கூறி இருப்பதன் மூலம் சிறு தொழில்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டில்லி, புனே, மும்பை, பெங்களூரு, ஆமதாபாத் உள்ளிட்ட முக்கியமான 9 நகரங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கும் பொறுப்பு பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
இது தவிர போக்குவரத்து நெரிசல் மிகுந்த 11 நெடுஞ்சாலைகள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு 25 கி.மீ.,க்கும் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!