Just In
- 36 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
அட இதுல கூட தமிழர்கள் கெத்துதான்… மிரண்டு போனது மத்திய அரசு
இந்தியாவிலேயே சென்னையில் தான் மக்கள் அதிக அளவில் பைக்களை பயன்படுத்துவதாகவும், அதே நேரத்தில் அரசு போக்குவரத்தும் இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிக மக்களுக்கு பயன்பெறுவதும் சமீபத்தில் நடந்த ஆய்வு முடி
இந்தியாவிலேயே சென்னையில் தான் மக்கள் அதிக அளவில் பைக்களை பயன்படுத்துவதாகவும், அதே நேரத்தில் அரசு போக்குவரத்தும் இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிக மக்களுக்கு பயன்பெறுவதும் சமீபத்தில் நடந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்த முரணான விஷயத்திற்கு என்ன காரணம் என்றே தெரியாமல் அதிகாரிகள் விழித்து வருகின்றனர்.
இந்தியாவின் மக்கள் தொகை உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இவ்வளவு மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்வது என்பது அரசிற்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது. இந்திய மக்களின் வாழ்வியல் முறையும் இதற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் பல பகுதிகள் இருந்தாலும் நகரங்களில்தான் அதிக மக்கள் வாழ்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பல நிறுவனங்கள் தொடர்ந்து நகரங்களில் அமைக்கப்படுவதுதான்.
மக்கள் தங்கள் பணி நிமித்தமாக கொஞ்சம் கொஞ்சமாக நகரங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். ஒரு ஊரில் எவ்வளவு மக்கள் வாழ்கின்றனர்? என்பதை கணக்கிட அந்த நகரில் சாலைகளில் பயணித்தாலே போதும்.
அங்குள்ள கூட்ட நெரிசல் மற்றும் ஜன நெருக்கடியை கணக்கிட்டு அந்த ஊரின் மக்கள் பலத்தை நம்மால் உணர முடியும். இப்படியாக நகரங்களில் வாழ்பவர்கள் எதில் பயணிக்கிறார்கள்? பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகிறார்களா? அல்லது சொந்தமாக வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்களா? என்பதை வைத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை கணித்து விடலாம்.
இவ்வாறு மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சமீபத்தில் இந்தியா முழுவதும் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் எந்தெதந்த வகையான வாகனங்களை போக்குவரத்திற்காக மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்? என்பதை கணக்கிட்டு ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டனர்.
இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டவர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி. இந்த ஆய்வு முடிவுகள் மத்திய அரசிற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசிற்கு இந்த ஆச்சரியத்தைஏற்படுத்தியவர்கள் தமிழர்கள்தான்.
ஆம் ஆந்த ஆய்வு முடிவில் இந்தியாவிலேயே அதிகமாக மக்கள் பைக்குகளை பயன்படுத்துவது சென்னையில்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னையில்தான் மக்கள் அரசு போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக சொந்தமாக வாகனம் பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ள நகரங்களில் பொது போக்குவரத்தை அதிகமாக மக்கள் பயன்படுத்துவார்கள். பைக் என்பது சொந்தமான வாகனமாகவும், அரசு போக்குவரத்து என்பது பொது வாகனமாகவும் செயல்படும் நிலையில், சென்னை மக்கள் இவை இரண்டையுமே அதிகம் பயன்படுத்ததுகின்றனர்.
இந்த ஆய்வின் படி சென்னையில் உள்ள 75 சதவீத மக்கள் அரசு போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இது சென்னையில் உள்ள ஒரு அரசு பஸ் நாள் ஒன்றிற்கு சராசரியாக 1300 பயணிகளை அழைத்து செல்கிறது. இந்தியாவிலேயே ஒரு பஸ் ஒரு நாளுக்கு இத்தனை பயணிகளுக்கு பயன்படுவது சென்னையில்தான்.
சென்னையில் பஸ்கள் இவ்வளவு அதிகமான மக்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் இயங்குவதற்கு முக்கியமான காரணம் பஸ்களில் உள்ள அதிக இட வசதி, பஸ் டிக்கெட்டின் விலை. பயணிகளின் தேவை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் பஸ்களின் டிரிப் நேர அமைப்பு, பஸ் இயக்க தடங்களின் தேர்வு, பஸ் இயங்கும் தடங்களில் இயங்கும் பஸ்களின் எண்ணிக்கை ஆகியவை தான் காரணம்.
இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனடியாக பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
அதே நேரத்தில் சென்னையில்தான் அதிகமாக பைக்குகளும் பயன்படுத்தப்படுகிறது. சொந்த வாகனம் வாங்க நினைக்கும் பலர் கார்களை விட பைக்குகளைதான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?