Just In
- 1 hr ago கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- 6 hrs ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 8 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 8 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
Don't Miss!
- Technology 75 இன்ச் Haier 4K டிவி அறிமுகம்.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. விலையை சொன்னா நம்புவீங்களா?
- News உச்சத்தில் தங்கம் விலை, ஆனா இன்னும் முடியல! அடுத்தாண்டு ரூ.10,000க்கு போகும்- ஆனந்த் சீனிவாசன் பகீர்
- Lifestyle Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மிக நீண்ட ஆலோசனைக்கு பின், துணிச்சலான முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மிக நீண்ட ஆலோசனைக்கு பின், துணிச்சலான முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.
ஆட்டோக்களை பின்னுக்கு தள்ளி விட்டு, ஓலா, உபேர் போன்ற கேப் (Cabs) நிறுவனங்கள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருக்கும் காலம் இது. குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில், கேப் நிறுவனங்கள்தான் இன்று ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றன.
நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கே வாகனம் வந்து விடும், ஓரளவுக்கு கட்டுப்படியான கட்டணம் போன்ற முக்கியமான காரணங்களால்தான், ஓலா மற்றும் உபேர் போன்ற கேப் நிறுவனங்கள், இன்று விஸ்வரூப வளர்ச்சியை கண்டிருக்கின்றன.
அதே சமயம் கேப்களில் நிலவி வரும் முக்கியமான பிரச்னை பாதுகாப்பு. ஆம், கேப்களில் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கிறது என திட்டவட்டமாக கூறி விட முடியாது. குறிப்பாக பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கிறதா? என்பது சந்தேகமே.
இந்த சந்தேகத்தை உறுதிபடுத்தும் வகையில் பல நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. தலைநகர் டெல்லியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், உபேர் டிரைவர் ஒருவரால், இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி எடுத்தது அனைவரும் அறிந்ததுதான்.
அந்த டிரைவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இரவு நேரங்களில் தனியாக பயணிக்கும் பெண்களை மிரட்டி, பாலியல் ரீதியிலான கொடுமைகளை அவர் இழைத்திருந்தார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் பெண்களுக்கு அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதில் ஒரு பெண் தைரியமாக பொது வெளியில் உண்மைகளை போட்டு உடைத்ததால், அந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் எதிரொலியால், கேப்களில் தனியாக பயணம் செய்ய பெண்கள் மத்தியில் அச்சம் உருவானது.
எனவே கேப்களில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமானது, தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எம்-1 கேட்டகரியின் கீழ் வரும் போக்குவரத்து வாகனங்களில் உள்ள சைல்டு லாக்குகளை (Child locks) அகற்ற வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.
சைல்டு லாக்ஸ் என்பது, கூடுதல் பாதுகாப்பிற்காக வாகனங்களில் வழங்கப்படும் ஒரு வசதியாகும். ஒரு காரை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். காரின் பின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் குழந்தைகள், கவனக்குறைவாக பின் பக்க டோர்களை திறந்து விடுவதை தவிர்க்க சைல்டு லாக் வசதி உதவுகிறது.
அதாவது உள்ளே இருந்து கதவுகளை திறக்க முடியாது. வெளியே இருந்து மட்டுமே கதவுகளை திறக்க முடியும். ஆனால் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட சைல்டு லாக் வசதியை, சிலர் தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக உள்ளே இருந்தபடி கதவுகளை திறக்க முடியாது என்பதால், கேப்களில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. கடந்த 2017ம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இதற்கு உதாரணமாக கூறலாம்.
கடந்த 2017ம் ஆண்டு, பெங்களூருவில் கேப் ஒன்றில் பெண் ஒருவர் பயணித்து கொண்டிருந்தார். ஆனால் அந்த கேப்பின் டிரைவரால், அந்த பெண் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அந்த கேப்பின் டிரைவர் இதற்கு பயன்படுத்தியது சைல்டு லாக் வசதியைதான்.
இதன் காரணமாக உள்ளே இருந்து கதவை திறக்க முடியாததால், அந்த பெண் பாதிக்கப்பட்டார். எனவேதான் எம்-1 கேட்டகரியின் கீழ் வரும் வாகனங்களில், சைல்டு லாக் வசதியை அகற்றும்படி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இனி எம்-1 கேட்டகரியின் கீழ் வரும் வாகனங்கள் எவை? என்பதை தெரிந்து கொள்வோம். 8 இருக்கைகளுக்கு மேல் இடம்பெறாத வாகனங்கள் எல்லாம் எம்-1 கேட்டகரியின் கீழ் வருகின்றன. இவற்றில் டிரைவருக்கு தனியாக ஒரு இருக்கை இருக்கும் (8 சீட் + டிரைவர்).
இத்தகைய வாகனங்கள்தான் பெரும்பாலும் கேப்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவேதான் எம்-1 கேட்டகரியின் கீழ் வரும் வாகனங்களில், சைல்டு லாக் வசதி இருக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவானது, வரும் 2019ம் ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
கேப்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, எம்-1 கேட்டகரியின் கீழ் வரும் வாகனங்களில், சைல்டு லாக்கை நீக்குவது தொடர்பாக நீண்ட நாட்களாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இதன்பின் சைல்டு லாக்கை அகற்றுவது என தற்போது துணிந்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடியான உத்தரவின் காரணமாக, அத்துமீறி நடந்து கொள்ளும் ஒரு சில டிரைவர்கள், இனி நம்மை போன்ற பயணிகளிடம் வாலாட்டவே முடியாது. குறிப்பாக பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பு கிடைக்கும் என்பதால், இந்த உத்தரவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.