இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மிக நீண்ட ஆலோசனைக்கு பின், துணிச்சலான முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மிக நீண்ட ஆலோசனைக்கு பின், துணிச்சலான முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

ஆட்டோக்களை பின்னுக்கு தள்ளி விட்டு, ஓலா, உபேர் போன்ற கேப் (Cabs) நிறுவனங்கள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருக்கும் காலம் இது. குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில், கேப் நிறுவனங்கள்தான் இன்று ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றன.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கே வாகனம் வந்து விடும், ஓரளவுக்கு கட்டுப்படியான கட்டணம் போன்ற முக்கியமான காரணங்களால்தான், ஓலா மற்றும் உபேர் போன்ற கேப் நிறுவனங்கள், இன்று விஸ்வரூப வளர்ச்சியை கண்டிருக்கின்றன.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

அதே சமயம் கேப்களில் நிலவி வரும் முக்கியமான பிரச்னை பாதுகாப்பு. ஆம், கேப்களில் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கிறது என திட்டவட்டமாக கூறி விட முடியாது. குறிப்பாக பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கிறதா? என்பது சந்தேகமே.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

இந்த சந்தேகத்தை உறுதிபடுத்தும் வகையில் பல நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. தலைநகர் டெல்லியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், உபேர் டிரைவர் ஒருவரால், இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி எடுத்தது அனைவரும் அறிந்ததுதான்.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

அந்த டிரைவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இரவு நேரங்களில் தனியாக பயணிக்கும் பெண்களை மிரட்டி, பாலியல் ரீதியிலான கொடுமைகளை அவர் இழைத்திருந்தார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் பெண்களுக்கு அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

இதில் ஒரு பெண் தைரியமாக பொது வெளியில் உண்மைகளை போட்டு உடைத்ததால், அந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் எதிரொலியால், கேப்களில் தனியாக பயணம் செய்ய பெண்கள் மத்தியில் அச்சம் உருவானது.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

எனவே கேப்களில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

இதன் ஒரு பகுதியாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமானது, தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எம்-1 கேட்டகரியின் கீழ் வரும் போக்குவரத்து வாகனங்களில் உள்ள சைல்டு லாக்குகளை (Child locks) அகற்ற வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

சைல்டு லாக்ஸ் என்பது, கூடுதல் பாதுகாப்பிற்காக வாகனங்களில் வழங்கப்படும் ஒரு வசதியாகும். ஒரு காரை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். காரின் பின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் குழந்தைகள், கவனக்குறைவாக பின் பக்க டோர்களை திறந்து விடுவதை தவிர்க்க சைல்டு லாக் வசதி உதவுகிறது.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

அதாவது உள்ளே இருந்து கதவுகளை திறக்க முடியாது. வெளியே இருந்து மட்டுமே கதவுகளை திறக்க முடியும். ஆனால் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட சைல்டு லாக் வசதியை, சிலர் தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

குறிப்பாக உள்ளே இருந்தபடி கதவுகளை திறக்க முடியாது என்பதால், கேப்களில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. கடந்த 2017ம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

கடந்த 2017ம் ஆண்டு, பெங்களூருவில் கேப் ஒன்றில் பெண் ஒருவர் பயணித்து கொண்டிருந்தார். ஆனால் அந்த கேப்பின் டிரைவரால், அந்த பெண் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அந்த கேப்பின் டிரைவர் இதற்கு பயன்படுத்தியது சைல்டு லாக் வசதியைதான்.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

இதன் காரணமாக உள்ளே இருந்து கதவை திறக்க முடியாததால், அந்த பெண் பாதிக்கப்பட்டார். எனவேதான் எம்-1 கேட்டகரியின் கீழ் வரும் வாகனங்களில், சைல்டு லாக் வசதியை அகற்றும்படி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

இனி எம்-1 கேட்டகரியின் கீழ் வரும் வாகனங்கள் எவை? என்பதை தெரிந்து கொள்வோம். 8 இருக்கைகளுக்கு மேல் இடம்பெறாத வாகனங்கள் எல்லாம் எம்-1 கேட்டகரியின் கீழ் வருகின்றன. இவற்றில் டிரைவருக்கு தனியாக ஒரு இருக்கை இருக்கும் (8 சீட் + டிரைவர்).

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

இத்தகைய வாகனங்கள்தான் பெரும்பாலும் கேப்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவேதான் எம்-1 கேட்டகரியின் கீழ் வரும் வாகனங்களில், சைல்டு லாக் வசதி இருக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவானது, வரும் 2019ம் ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

கேப்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, எம்-1 கேட்டகரியின் கீழ் வரும் வாகனங்களில், சைல்டு லாக்கை நீக்குவது தொடர்பாக நீண்ட நாட்களாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

இதன்பின் சைல்டு லாக்கை அகற்றுவது என தற்போது துணிந்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...

மத்திய அரசின் இந்த அதிரடியான உத்தரவின் காரணமாக, அத்துமீறி நடந்து கொள்ளும் ஒரு சில டிரைவர்கள், இனி நம்மை போன்ற பயணிகளிடம் வாலாட்டவே முடியாது. குறிப்பாக பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பு கிடைக்கும் என்பதால், இந்த உத்தரவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Most Read Articles
English summary
Child Lock System To Be Deactivated In Cabs From July 1, 2019. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X