Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உங்கள் காரை வைத்து உங்கள் பர்ஸையே காலியாக்க துடிக்கும் நவீன திருட்டு கும்பல்; தப்பிப்பது எப்படி?
இந்தியாவில் ரோடுகள் பெரும்பாலான பகுதியில் சற்று மோசமா நிலையிலேயே உள்ளன. கரடு முரடான பாதைகள், ரோட்டில் நிறைந்திருக்கும் பள்ளங்கள், குட்டி சுவர் போல அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடைகள் இந்த மாதிரியான
இந்தியாவில் ரோடுகள் பெரும்பாலான பகுதியில் சற்று மோசமா நிலையிலேயே உள்ளன. கரடு முரடான பாதைகள், ரோட்டில் நிறைந்திருக்கும் பள்ளங்கள், குட்டி சுவர் போல அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடைகள் இந்த மாதிரியான ரோடுகளை நீங்கள் இந்தியாவில் அதிகமாக பார்க்க முடியும். இந்த ரோடுகள் உங்கள் காரை பாழாக்கி விடும்.
அதே நேரத்தில் இந்தியாவில் உங்கள் கார்களை வைத்து பணம் சம்பாதிக்க பலர் பல விதமாக ஊழல்கள் மற்றும் உங்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் சில முயற்சிகள் நடக்கிறது. இதில் இருந்து தப்பிப்பது எப்படி? உங்கள் பணத்தை பாதுகாப்பது எப்படி என இந்த செய்தியில் காணலாம்.
பஞ்சர்
நீங்கள் எப்பொழுதும் காரின் டயருகஅக ஏர் பிடிக்கும் கடையில் ஏர் மறந்து வீட்டீர்கள் என்றால் நீங்கள் செல்லும் வழியில் உள்ள உங்களுக்கு பழக்கமில்லாத அல்லது தெரியாத கடையில் காற்றை நிரம்பி கொண்டு செல்ல நினைப்பீர்கள். அவ்வறாக நீங்கள் காற்றை நிரம்பும் போது சில கடைகளில் அவர்கள் உங்கள் காரை காற்று நிரப்பும் போதே டயரின் சைடு வால் பகுதியில் உங்களுக்கு தெரியமாலேயே பஞ்சர் செய்கின்றனர்.
பின்பு அதே டயரில் காற்றை நிரப்பி விட்டு உங்கள் டயரில் பஞ்சர் உள்ளது. என்று கூறி காருக்கு பஞ்சர் பார்த்து உங்களிடம் இருந்து சில நூறு ரூபாய் வசூல் செய்து விடுகின்றனர். இந்த மாதிரியான செயல்கள் இந்தியா முழுவதும் நடக்கிறது. இதை தவிர்க்க உங்களுக்கு பழக்கம் இல்லாத மற்றும் தெரியாத கடைகளில் காற்று நிரப்புவதை தவிர்க்க வேண்டும்.
டயர் வால்வு
பஞ்சர் செய்து போல அடுத்தாக செய்ப்படுவது டயர் வால்வுகளை சேதப்படுத்துவது. அவர்கள் காற்று நிரப்பும் சாக்கில் குறைந்த அளவு ஏர் மட்டும் அடைத்து விட்டு உங்களிடம் வந்து டயர் வால்வு சரியில்லை அதை மாற்ற வேண்டும் என உங்களிடம் கூறி அதற்கு சில நூறு ரூபாய்களை உங்களிடம் இருந்து பெற்று கொள்வார்கள்.
இவ்வாறு உங்கள் காரில் டயர்வால்வு சரியில்லை என யார் கூறினாலும் அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் நீங்கள் எப்பொழுதும் காற்று பிடிக்கும் நம்பிக்கையான நபரிடம் சென்று அதை செக் செய்து கொள்ளுங்கள்.
விபத்து திருட்டு
நீங்கள் உங்கள் காரில் நெருக்கமான டிராபிக்கில் செல்லும் போது உள்ள காரின் அருகில் பைக்கில் செல்லும் சிலரோ அல்லது நடந்து செல்லும் சிலரோ உங்கள் காரின் முன்பு வேண்டும் என்றே விழுந்து சிறிய விபத்தை ஏற்படுத்துவர். இதனால் அவர்கள் பெரிய காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும் அவர்களை சேர்ந்தவர்கள் சிலர் உங்கள காரின் கண்ணாடி கதவை தட்டி அவருக்கு அடிபட்டு விட்டது.
நீங்கள் முதலில் கீழே இறங்குகள் என ஆவேசமாக கத்துவார்கள். நீங்கள் அந்த சமயத்தில் பதற்றமடைவீர்கள், அதை பயன்படுத்தில சிலர் உங்கள் காரின் சீட்டில் அல்லது டேஷ்போர்டில் நீங்கள் வைத்திருக்கும். செல்போன், லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்று விடுவார்கள். அவர்கள் திருட்டு முடிந்ததும். டிரபிக் களையும் சாக்கில் அவர்களும் கலைந்து விடுவார்கள்.
இந்த சம்பவத்தில் இருந்து உங்களை காத்துக்கொள்ள முதலில் விலை மதிப்பு மிக்க பொருட்களை காரின் சீட்டிலோ அல்லது டேஷ் போர்டிலோ வைக்காதீர்கள். அதை பத்திரமாக காரின் பூட் பகுதியில் வைக்கவேண்டும். மேலும் சிலர் உங்கள் காரை சுற்றி நின்று கொண்டு காரை திறக்க சொல்லி கத்தி கொண்டே இருந்தால் டென்ஷன் ஆகாமல்
காரின் கதவுகள் கண்ணாடிகள் எல்லாம் லாக் ஆகி உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு அமைதியாக இருங்கள் இதன் காரணமாக டிராபிக் அதிகமாகும். ஒரு கட்டத்தில் அவர்களே கலைந்து செல்லுவார்கள் அவ்வாறவர் கையில் நீங்கள் சிக்கினால் உங்கள் பர்ஸ் காலி தான்.
காரை சோதனையில் திருட்டு
நீங்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போது டோல்கேட்களில் பணம் செலுத்த நீங்கள் காரை நிறுத்துவீர்கள் அப்பொழுது நீங்கள் பணம் கட்டும் சமயத்தில் ஒருவர் உங்களிடம் வந்து அதிகாரிகள் உங்கள் காரை சோதனையிட வேண்டும் நீங்கள் இறங்கவேண்டாம், காரின் பின்பகுதியை மற்றும் திறங்கள் என கூறுவார்கள் நீங்கள் அவ்வாறு செய்தால் காரில்உள்ள பொருட்களை அபேஸ் செய்து கொண்டு போய்விடுவார்கள்.
காரை சோதனையிட வேண்டும் என்றால் நீங்கள் டோல்கேட் கட்டணத்தை கட்டி விட்டு சற்று தள்ளி காரை ஒரம் கட்டி காரின் பூட் கதவை திறந்து நீங்களும் காரில் இருந்து வெளியேறிஅவர்கள் அருகில் நின்று அவர்களை சோதனையிட அனுமதியுங்கள். அப்படி செய்தால் தான உங்கள் உடமைகளை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!