Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Movies வடிவேலு பற்றி என்ன தெரியும்?.. அவரால்தான் கஞ்சி குடிக்கிறேன்.. பாவா லட்சுமணன் ஓபன் டாக்
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கடுமையான டிராப்பிக்கில் சாதுர்யமாக கார் ஓட்டிய நாய்… அசர வைக்கும் வீடியோ..!
இந்தியாவில் உலகின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது டிராபிக் அதிகமான பகுதி தான். இங்கு திறமையாக கார் ஒட்டுபவர்கள் கூட சில நேரங்களில் திணற நேரிடும். குறிப்பாக, டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கோல்கட்ட
இந்தியாவில் உலகின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது டிராபிக் அதிகமான பகுதி தான். இங்கு திறமையாக கார் ஒட்டுபவர்கள் கூட சில நேரங்களில் திணற நேரிடும். குறிப்பாக, டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கோல்கட்டா ஆகிய நகரங்களில் வாகனம் ஓட்டுதல் சற்று சவாலான விஷயம் தான்.
இப்படி மனிதர்களே கார் ஓட்ட திணறும் ஒரு ரோட்டில் காரின் எஜமானர் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று அந்த காரை ஓட்டிச்செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
என்ன நாய் கார் ஓட்டுகிறதா? என்ற ஆச்சரியமாக உங்கள் மனதில் எழும் கேள்வி எங்களுக்கு கேட்கிறது. அதற்கு ஒரே பதில் ஆம். ஷிலாங் நகரில் மாருதி 800 காரை நாய் ஒன்று ஓட்டு செல்லும் 2 வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் முதல் வீடியோவில் நாய் டிராபிக் நிறைந்த ரோட்டில் மனிதர்கள் எவ்வளவு சாதூர்யமாக கார் ஓட்டுகிறார்களோ அதே போல இந்த நாயும் கார் ஓட்டுகிறது. டிரைவர் சீட்டிற்கு அருகில் உள்ள சீட்டில் இந்த நாயின் ஓனர் அமர்ந்திருக்கிறார்.
இரண்டாவது வீடியோவும், அதே போல நாய் கூட்டமே இல்லாத ஒரு ரோட்டில் கார் ஓட்டுகிறது. அந்த வீடியோவிலும் நாயின் ஒனர் பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்கிறார். இந்த இரண்டு விடியோவில் பின்னால் சென்ற மற்றொரு காரில் பயணத்தவர்களால் எடுக்கப்பட்டது.
நாய்கள் மனிதர்களுடன் மிகவும் பாசமாகவும் அன்பாகவும் பழகும் ஒருமிருகம் தான். மனிதர்களை சொல்வதை கேட்டு அதற்கு தகுந்தார் போல் செயல்படும் குணம் நாய்களுக்கு இருக்கிறதுதான் அதற்காக இது போன்று கார்களை ஓட்டுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்றுதான்.
இந்த வீடியோவை பார்க்கும் பாேது அந்த நாய்க்கு அதன் கால்களை ஸ்டியரிங்கில் வைத்து கார் ஓட்டுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்க நன்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் நாய் காரின் ஸ்டிரயிங்கில் ஒரு காலையும், ஆக்ஸிலரேட்டரில் ஒரு காலையும் வைத்திருப்பது சாத்தியமில்லாத காரியம்.
இந்த மாருதி 800 காரில் மாடிஃபிகேஷன் செய்வது சுலபம், காரின் கிளட்ச், பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டரை நாயின் பக்கத்து சீட்டில் உட்காந்து இருக்கும் நாயின் ஓனரின் கண்ட்ரோலில் இருக்கும் படி மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கலாம். அதன் மூலம் அவர் காரின் வேகம், பிரேக், மற்றும் கியர்களை அவரால் எளிதாக கட்டுப்படுத்த இயலும்
மேலும் ஸ்டியரிங்கை பொருத்தவரை நாயின் கால்களுக்கு ஸ்டியரிங் கிரிப்பாக இருக்காது. அதனால் அதை கண்டிப்பாக அருகில் இருக்கும் நாயின் ஓனர் தான் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அவர் காரின் ஸ்டியரிங்கை ஸ்டியரிங்கின் அடிப்பகுதியில் பிடித்து ஸ்டியரிங்கை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆக மொத்தத்தில் இந்த நாயரை காரை ஓட்ட வைப்பது போன்ற விஷயங்களை செய்வது வெறும் மக்களின் கவனத்தை தன் பக்கம் இழுப்பதற்காக மட்டுமே என தெளிவாக நம்மால் புரிய முடிகிறது. கார் என்பது மனிதர்கள் ஓட்டுவதற்காக என்றே டிசைன் செய்யப்பட்டுள்ளது. எந்த விலங்கும் கார் ஓட்டுவது என்பது சாத்தியமற்றது.
கார் ஓட்டுவது சாத்தியமற்றது மட்டும் அல்ல சட்ட விதிகளுக்கு மீறியது. நாய்களுக்கு கார் ஓட்டுவதற்காக அரசு லைசன்ஸ்களை வழங்குவதில்லை. இவ்வாறாக டிராபிக்கான ரோட்டில் இவ்வாறான முயற்சிகளை செய்வது மிகவும் ஆபத்தானது. இவர் மீது போலீஸ் நடவடிக்கை பாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!