Just In
- 1 hr ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 3 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 6 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 8 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆளில்லா காரில் உங்கள் வீட்டில் டெலிவரி ஆகும் மளிகை சாமான்; அமெரிக்காவில் அறிமுகம்
நீங்கள் கடைக்கும் போகாமல், டெலிவரி பாய் உங்கள் வீட்டிற்கும் வராமல் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும் தொழிற்நுட்பத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துகிறது ஒரு சூப்பர் மார்கெட்ட
நீங்கள் கடைக்கும் போகாமல், டெலிவரி பாய் உங்கள் வீட்டிற்கும் வராமல் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும் தொழிற்நுட்பத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துகிறது ஒரு சூப்பர் மார்கெட்ட நிறுவனம், ஆளில்லா வாகனத்தில் பொருட்களை டெலிவரி செய்ய எடுத்து செல்லும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் தொழிற்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் முன்னேறி கொண்டே வருகிறது. இந்த முன்னேற்றத்தின் வேகம் என்னவென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இது எல்லாம் கனவுகளில் தான் நடக்கும் என்ற விஷயம் எல்லாம் இன்று நினைவாகி கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் டிரைவரே இல்லாமல் போகும் வாகனங்களை எல்லாம் சயிண்டிபிக் பிக்ஷன் படங்களிலோ, கார்டூன்களிலோ பார்த்திருப்போம் ஆனால் அதை டெஸ்லா நினைவாக்கி காட்டி அதில் பெரும் சரித்திர மாற்றத்தையே உருவாக்கி வருகிறது.
தற்போது அமெரிக்காவில் மட்டும் டெஸ்லா அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும் விரைவில் பெரும்பாலான உலக நாடுகளில் தங்கள் காலை ஊன்ற போவது நமக்கு தெளிவாக தெரிகிறது.
அதே போல சமீபகாலமாக ஷாப்பிங்கும் துறையிலும் பெரும் தொழிற்நுட்ப
புரட்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பு ஒருவர் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் அவர் அந்த பொருளை விற்பனை செய்யும் கடைக்கு சென்று வாங்க வேண்டும். ஆனால் இன்று அப்படி அல்ல. எந்த பொருளை வேண்டுமானலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் அந்த பொருள் உங்கள் வீடு தேடி வரும்.
இன்று அன்று அந்த தொழிற்நுட்பத்தையும் இலகுவாக்கும் வகையில் டெலிவரி பாயே இல்லாமல் ஆளில்லாமல் இயங்கும் வாகனம் மூலம் பொருட்களை டெலிவரி செய்ய ரோபோவை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயார் செய்துள்ளது.
இது குறித்த செய்தியை இங்கே காணலாம்.
அமெரிக்காவில் மிகப்பெரிய சூப்பர் மார்கெட்டை நடத்தி வரும் நிறுவனம் கோர்கர், இந்நிறுவனமும் ஆளில்லா வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமான நியூரோ நிறுவனமும் சேர்ந்து பொருட்களை டெலிவரி செய்யும் ஆளில்லா வாகனங்களை தயாரிக்க முடிவு செய்தது.
அதன் படி நியூரோ நிறுவனம் ஆளில்லாமல் பொருட்களை டெலிவரி செய்யும் வானகத்தை தயாரித்துள்ளது. இந்த வாகனத்தை முதலில் அமெரிக்காவின் ஸ்கோட்டெயில், அரிசோனா ஆகிய மாகாணங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கோர்கர் நிறுவனத்தின் டிஜிட்டல் அதிகாரி யேல் காஸ்ஸட் கூறுகையில் :" இந்த ஆட்டோமெட்டிக் டெலிவரி வாகனத்தை நடைமுறைக்கு கொண்வடு வருவதில் ஆவலுடன் உள்ளோம். வாடிக்கையாளர்களை செளகரியமாக பொருட்கள் வாங்குவதற்காக இதை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தே பொருட்களை தங்கள் செல்போன் மூலமே, அல்லது ஏதேனும் ஒரு டிஜிட்டல் வழியில் ஆர்டர் செய்தால் சில மணி நேரங்களில் இந்த பொருட்கள் அவர்கள் வீட்டை சென்றடையும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிரமம் இல்லாமலும் உடனடியாகவும் ஷாப்பிங் செய்ய முடியும்" என கூறினார்.
இது குறித்து ஸ்காட்ஸ்டெயில் மாகாண மேயர் ஜிம் கூறுகையில் : "ஸ்காட்ஸ்டெயில் நகரில் கோர்கர் மற்றம் நியூரோ ஆகிய நிறுவனங்கள இணைந்து செய்யவுள்ள இந்த செயலால் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஸ்காட்ஸ்டெயில் நகரில் வாழும் மக்களுக்கு பயன் தரும் வகையில் உள்ள எல்லா தொழிற்நுட்பங்களையும் நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் இந்த மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்வு மேலும் எளிமையடையும் என நாங்கள் நம்புகிறோம்." இவ்வாறு கூறினார்.
நியூரோ நிறுவனம் முதற்கட்டமாக டோயோட்டா ப்ரியூஸ் காரை தான் இந்த திட்டத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிபெற்று, அதிகமான மக்கள் இதை பயன்படுத்த துவங்கினால் இதற்கான பிரத்தியோ வாகனத்தை தயார் செய்ய நியூரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த சேவையை பயன்படுத்த மக்கள், ஆர்டர் செய்யும் நாள் மற்றும் மறுநாள் டெலிவரி செய்யும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது. என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!