Just In
- 31 min ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 1 hr ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 3 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News கவனிச்சீங்களா.. பாஜக அஸ்திவாரம் ஆடுது.. மோடி +அமித் ஷா +யோகி.. கூட்டமாக எடுத்த 3 அஸ்திரம்! இடிக்குதே
- Movies Aparna Das - நிலைபெயராது சிலை போலவே நின்று.. ரிசப்ஷனில் தங்க நிற சேலையில் ஜொலித்த டாடா பட நடிகை!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழ்நாட்டில் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும்: அமைச்சர் உறுதி
சட்டமன்ற கூட்ட தொடரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை சமர்பித்தார். அதில் தமிழகத்தில் மொத்தம் 2.5 கோடி வாகனங்கள் இயங்கி வருவதாகவும், தமிழகத்தில் விரைவில் எலெக்
சட்டமன்ற கூட்ட தொடரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை சமர்பித்தார். அதில் தமிழகத்தில் மொத்தம் 2.5 கோடி வாகனங்கள் இயங்கி வருவதாகவும், தமிழகத்தில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க திட்டமிட்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் வாசித்த அறிக்கை விபரம் வருமாறு : தமிழகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மொத்தம் 2.56 கோடி வாகனங்கள் பதிவுசெய்ப்பட்டு இங்கி வருகிறது. அதில் 85 சதவீதமான வாகனங்கள் இருந்து வருகிறது.
அதன் படி தமிழகத்தில் மொத்தம் 2.15 கோடி டூவிலர்களும், 23.61 லட்சம் கார்களும் இயங்கி வருகிறது. இது கடந்தாண்டு இருந்த வாகனங்களை விட 7.62 சதவீதம் அதிகம் ஆகும்.
புதிய வாகனகளுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் 1 ஆண்டிற்கு வாங்க தேவையில்லை அதன் பின் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை அதை வாங்க வேண்டும் என்ற விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் டீசல் ஆட்டோக்கள் இயக்கப்படுவதில்லை.
சென்னையை பொருத்தவரை எல்.பி.ஜி மற்றும் பெட்ரோல் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது போக்குவரத்து துறை தமிழகத்தின் முக்கியமாக வருவாய் ஈட்டும் துறையாக மாறியுள்ளது..
தற்போது தமிழகத்தில் ரூ 5362 கோடி போக்குவரத்து துறை மூலம் வருமானம் ஈட்டி வருகிறது. இந்த வருமானம் என்பது வரி மற்றும் கட்டணமாக வசூல் செய்ப்படும் தொகை மட்டுமே.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கி பரிசோதனை நடத்தி வருகின்றனர். கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அது வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையான பஸ்களை தமிழகத்தில் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் பஸ்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ்களால் ஏற்படும் மாசு மிகவும் குறைவாக இருக்கும். மேலும் தற்போது பஸ்களை செயல்படுத்த அரசிற்க ஆகும் செலவும் பல மடங்கு குறையும்.
இதன் மூலம் போக்குவரத்து துறை அதிக லாபத்தில் இயக்க வைக்க முடியும். மேலும் இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் பல தொழிற்நுட்ப வசதிகளும் இருக்கிறது. இதையும் அரசு எளிதாக பயன்படுத்தக்கொள்ள முடியும்.
தற்போது சென்னை மெட்ரோபோலிடன் போக்குவரத்து கழகத்தின் பஸ்களை மக்கள் பயன்படுத்துவதை கணக்கில் கொண்டு முதற்கட்டமாக சென்னையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பஸ்களால் போக்குவரத்து நெருக்கடியும் குறையும் தற்போது உள்ள பஸ்களை காட்டிலும் இதில் அதிகமான பயணிகள் செல்ல முடியும்.
அடுத்த கட்டமான போக்குவரத்து குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் அரசு முடிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக விழிப்புணர்வு வீடியோக்களை தயார் செய்து அதை மக்கள் மத்தியில் பரப்ப அரசு முடிவு செய்துள்ளது .இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பல்வேறு மாநிலங்கள் எலெக்ட்ரிக் பஸ்கள் தொடர்பாக பல்வேறு விதமான நடவடிக்கையில் இறங்கி வருகையில் தமிழகம் தற்போது தாமதாமாக தான் இது குறித்து பேசி வருகிறது இருந்தாலும் இனியாவது விரைந்து செயல்பட்டு எலெக்ட்ரிக் பஸ்களை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
- பஜாஜ் வி12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!
- பர்ஸ் பத்திரம் பாஸ்.. ஹெல்மெட், சீட் பெல்ட் குறித்த சென்னை ஐகோர்ட்டின் புதிய உத்தரவால் போலீசார் குஷி
- விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!
- டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு
- எலக்ட்ரிக் ஸ்டார்ட், சார்ஜர் என நவீன வசதிகளுடன் கூடிய டிவிஎஸ் XL 100 மொபட் அறிமுகம்!
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?