அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடியின் மாஸ்டர் பிளான்! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 1.4 லட்சம் வரை மானியம்

2ம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 7ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்காக, ரூ.5,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

By Arun

2ம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 7ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்காக, ரூ.5,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் கார், டூவீலர்களுக்கு எவ்வளவு மானியம் கிடைக்கும்? இதனால் இந்தியாவுக்கு ஏற்பட போகும் பயன் என்ன? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே வருகிறது. இது நாட்டின் அந்நிய செலாவணி விஷயத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. இதுதவிர பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்குகின்றன.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக முன் வைக்கப்படுவது எலக்ட்ரிக் வாகனங்கள்தான். 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

எனவே அதிவிரைவாக எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு இந்தியா மாற வேண்டும் என்ற நோக்கத்தில், ஃபேம் இந்தியா (FAME India-Faster Adoption and Manufacturing of Hybrid and Electric vehicles in India) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொது மக்கள், ஃபேம் இந்தியா திட்டத்தின் மூலமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசானது, ஃபேம் இந்தியா திட்டத்தை பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தி வருகிறது. முதல் கட்ட ஃபேம் இந்தியா (FAME India Phase I) திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு, இந்த 700 கோடி ரூபாய் நிதியில் இருந்து மானியம் வழங்கப்பட்டது. முதல் கட்ட ஃபேம் இந்தியா திட்டமானது, கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு மார்ச் வரை, முதல் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

இதன்பின் 2018ம் ஆண்டு மார்ச் வரை, முதல் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் (FAME India Phase II) உருவாகவில்லை. எனவே 2ம் கட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் வரை, முதல் கட்ட திட்டமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

தற்போது இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் வரைவு நிலையில் உள்ளது. இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்காக, மத்திய அரசு ரூ.5,500 கோடியை ஒதுக்கியுள்ளது. முதல் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்கு, வெறும் ரூ.700 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டமானது 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். வரும் செப்டம்பர் 7ம் தேதி, இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டம் தொடங்கப்படுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

வரும் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், நாட்டின் தலைநகர் டெல்லியில், 'MOVE' என்ற உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில், உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

இந்த உச்சி மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியின்போது (செப்டம்பர் 7), இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழாக, எலக்ட்ரிக் கார், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

எலக்ட்ரிக் கார்களுக்கு ரூ.1.4 லட்சம் வரை மானியம் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எலக்ட்ரிக் டூவீலர்களுக்கு ரூ.1,800 முதல் ரூ.29,000 வரையிலும், எலக்ட்ரிக் 3 வீலர்களுக்கு (மூன்று சக்கர வாகனங்கள்) ரூ.3,300 முதல் ரூ.61,000 வரையிலும் மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

இதுதவிர மின்சாரத்தில் இயங்கும் டாக்ஸி, எலக்ட்ரிக் பஸ் போன்ற வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கும் (Commercial Vehicles) மானியம் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

முதலில் தனி நபர்கள் வாங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தில் மானியம் வழங்கப்படாது என்றே தகவல்கள் வெளியாகி வந்தன. அதற்கு பதிலாக ஓலா, உபேர் போன்ற கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அதிக மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

ஏனெனில் மானியம் கிடைப்பதன் மூலமாக, ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள், தங்களின் அனைத்து வாகனங்களையும், எலக்ட்ரிக் மயமாக மாற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இதன்மூலம் எரிபொருள் தேவை குறைவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என ஒரு சாரார் தெரிவித்தனர்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

அதே நேரத்தில் தனி நபர்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டால், சாதாரண பொது மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் நிலை உருவானது. ஏனெனில் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

எனவே தனி நபர்கள் வாங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குவதை ரத்து செய்வது என்ற முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தனிநபர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படாது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

இதன்மூலமாக வருங்காலங்களில், எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எதிர்காலத்தில், அரபு நாடுகளில் இருந்து பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்வதையும் கணிசமாக குறைக்கலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

எனவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக அளவில் மானியம் வழங்கும் திட்டத்தின் மூலமாக, அரபு நாடுகளுக்கும், நரேந்திர மோடி செக் வைத்திருப்பதாகவே கருதப்படுகிறது. அப்படியே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

ஏனெனில் இந்தியாவில் பல்வேறு வரி விதிப்புகளின் காரணமாக, அதிகப்படியான விலைக்குதான், பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் என்ற அறிவிப்பின் மூலம் சாமானிய மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ள மோடி சார், அப்படியே பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும் கொஞ்சம் நடவடிக்கை எடுங்கள்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

முன்னதாக இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தில், ஹைபிரிட் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மார்க்கெட்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் முக்கியமானதாக உருவெடுக்கும் வரை, அதற்கான மாற்றாக ஹைபிரிட் வாகனங்கள்தான் இருக்கும்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் மானியம்..

ஆனால் ஹைபிரிட் வாகனங்களுக்கு மானியம் இல்லை. இது ஒன்று மட்டுமே, இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தின் ஒரே ஒரு குறையாக உள்ளது. மற்றபடி எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியையும், விற்பனையையும் அதிகரிக்க, மத்திய அரசு எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சியாகவே இது கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
FAME India II To Be Launched By PM Modi on September 7. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X