Just In
- 21 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி அறிமுகம்!!
அடுத்த நான்கு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் FASTAGS கார்டு மூலமாக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சா
அடுத்த நான்கு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் FASTAGS கார்டு மூலமாக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில், 58 ஆம் ஆண்டு SIAM ஆண்டு மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அவர் பேசினார். அப்போது பல்வேறு புதிய திட்டங்கள் குறித்தும் தகவல்களை வெளியிட்டார். அதில், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் தேக்கமடைந்து கால விரயம் ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தில், நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.
அதன்படி, நாடுமுழுவதும் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்திலும் ஃபாஸ்ட்டேக் அட்டை மூலமாக மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையை அமலுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார். இந்த RFID FASTAGS முறை முற்றிலும் சுங்கஞ்சவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க உருவாக்கப்பட்டது. இது வாடிக்கையாளர்களின் நேரத்தையும் எரிபொருளை மிச்சம் செய்யவும் அருமையான திட்டம்.
இந்த FASTAGS விற்பனையை இந்திய அரசாங்கம் இந்தியன் ஆயில் கார்பொரேஷன்(INDIAN OIL CORPORATION) உடன் கைகோர்த்துக்கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் அதிக பெட்ரோல் பம்புகளை கொண்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தால் இந்த அட்டைகளை மக்களிடம் சீக்கிரம் கொண்டு சேர்க்க முடியும் என அரசாங்கம் நம்புகிறது.
தற்போதய ஆய்வு புள்ளிகள் படி இந்தியாவில் பதினைந்து முதல் இருபது சதவிகித மக்களே இந்த FASTAGS பயன்பாட்டை கொண்டுள்ளனர் என்கிறது. இந்த தொழில்நுட்பம் எளிதாகவும் நேரத்தை குறைக்க நல்லதாகவும் உள்ளதால் கண்டிப்பா இது சீக்கிரம் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.
இந்த FASTAGS கார்டானது தற்போது குறிப்பிட்ட ஒரு சில வங்கிகளில் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. அவை SBI , ICICI , FEDERAL போன்றவை. மேலும் இந்த RFID FASTAGS கார்டினை அணைத்து சுங்கஞ்சாவடிகளிலும் அமையப்பெற்ற COMMON SERVICES CENTRE (CSC)யிலும் பெற்று கொள்ளலாம்.
NHAI நிறுவனம் இந்த பாஸ்டாக்ஸ் விற்பனையை சென்ற வருட செப்டம்பர் மாதம் ஆன்லைன் வாயிலாகவும் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நடைபெற்ற இதன் கலந்தாய்வில் போது நிதின் கட்கரி அனைத்து கனரக வாகனத்திலும் , ஸ்பீட் கவர்னர் எனப்படும் வேகக்கட்டுப்பாட்டு கருவியின் கட்டாயத்தை நீக்க இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இது சென்ற மாதம் கர்நாடக ஹை கோர்ட்டினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடப்படவேண்டியது.
ஸ்பீட் கவர்னர்ஸ் எனப்படும் இந்த வேக கட்டுபாட்டு கருவி வாகனத்தின் அதிகபட்ச வேகத்தை வரையறுக்க வல்லது. இதனை நடைமுறை படுத்த இந்திய அரசாங்கம் சென்ட்ரல் மோட்டார் வெஹிகிள்ஸ் ரூல்ஸ் (CENTRAL MOTOR VEHICLE RULES) எனப்படும் சட்டத்தில் மாற்றங்கள் செய்தாக வேண்டும். அதுவே இது முறையே அமுல்படுத்துவதற்கான வழி.
FASTAG அட்டை RFID என்ற தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்களை சுங்கஞ்சவடிகளில் அவர்களுக்கான தொகையை எலக்ட்ரானிக் முறையில் செலுத்த ஏதுவாய் அமைகிறது. RFID எனப்படும் அட்டை வாகனங்களின் விண்ட்சீல்டில் பொருத்தப்பட்டு இருக்கும், வாகனம் சுங்கச் சாவடியை கடக்கும் பொழுது அதற்குரிய பணம் தானாகவே பரிமாற்றம் செய்யப்படும். இதனின் விளைவாக நேர விரயம் மற்றும் எரிபொருள் வீணாவதை முற்றிலும் தவிர்க்க முடியும். சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதை தவிர்க்கவும் இந்த திட்டம் பெரிதும் பயன்படும்.
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட சுறா மீன் வடிவில் வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை கீழே பாருங்கள்..
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா