Just In
- 22 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 35 min ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 1 hr ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 2 hrs ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Movies வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிசிடிவியாம், ஸ்லீப்பராம், ஜிபிஎஸ் வசதியாம்... அசத்த வரும் புதிய அரசு பேருந்துகள்!!
தமிழக அரசு புதிதாக வாங்க இருக்கும் பஸ்களில் யாரும் எதிர்பாராத அளவுக்கு அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற இருக்கின்றன.
தமிழக அரசு புதிதாக வாங்க இருக்கும் பஸ்களில் யாரும் எதிர்பாராத அளவுக்கு அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற இருக்கின்றன. குறிப்பாக, குடிபோதையில் ஓட்டுனர் இயக்குவதற்கு தடுப்பதற்கு புதிய கருவி பொருத்தப்படுகிறது.
தமிழக அரசு இயக்கும் பேருந்துகள் பெரும்பாலானவை போதிய பராமரிப்பு இல்லாமல் அபாயக்கட்டத்தில் இயக்கப்படுகின்றன. கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில போக்குவரத்து கழகங்கள் மிகச் சிறப்பான வசதிகளுடன் பேருந்துகளை இயக்கும் நிலையில், தமிழக பேருந்துகளை பார்த்து பலர் ஏக்க பெருமூச்சு விட்டபடி உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணிப்பது வழக்கமாகிவிட்டது.
இந்த நிலையில், அரசு பேருந்துகள் மீதான பிம்பத்தை முற்றிலும் மாற்றுவதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, தனியார் பேருந்துகளைவிட அதிக வசதிகளுடன் அரசு பேருந்துகளை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட மாதிரி பேருந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "இந்த நிதி ஆண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் மிக தரமான கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்," என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதிய அரசு பஸ்களில் இடம்பெற இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவை தனியார் பேருந்துகளை விஞ்சும் அளவுக்கு புதிய அரசு பேருந்துகள் வர இருப்பதை உறுதி செய்துள்ளன.
கர்நாடக அரசு பேருந்துகளில் இருப்பது போலவே, புதிய அரசு பேருந்துகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட இருக்கின்றது. இந்த கருவி மூலமாக குறிப்பிட்ட வேக வரம்பிற்கு மேல் பேருந்தை இயக்க முடியாது. இந்த கருவிகள் பழுது இல்லாமல் நீண்ட நாள் உழைக்கும் வகையில் மிக தரமானதாக இருக்கும்.
புதிய பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட இருக்கின்றது. ஜிபிஎஸ் கருவி மூலமாக அடுத்து வரும் நிறுத்தம் குறித்த அறிவிப்புகளும் செய்யப்படும்.
மொபைல்போன் செயலி மூலமாகவே பஸ் எங்கு இருக்கிறது, எப்போது வரும் என்பது குறித்த தகவல்களை பயணிகள் பெற முடியும். எதிர்காலத்தில் புதிய அரசு பேருந்துகளில் வைஃபை இணைய தொடர்புக்கான வசதியை அளிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.
தற்போதுள்ள பஸ்களின் இருக்கையை 105 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ளும் புஷ் பேக் வசதி இருந்தது. புதிய பஸ்களில் 115 டிகிரி கோணத்தில் இருக்கையை சாய்த்துக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட இருக்கிறது. நீண்ட தூர தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் இந்த இருக்கைகள் கொடுக்கப்படும். இதனால், சவுகரியமான பயணத்தை பெற முடியும்.
இதுதவிர, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. நீண்ட தூர பேருந்துகளில் கழிவறை வசதியும், மிதவை சஸ்பென்ஷன் அமைப்புடன் சொகுசு பஸ்கள் கட்டப்பட உள்ளன.
புதிய அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட இருக்கின்றன. இதனால், பயணிகளின் பாதுகாப்பு மேம்படும் வாய்ப்பை கொடுக்கும். குற்றங்கள் குறையவும் வாய்ப்பு ஏற்படும்.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கிய வசதியாக புதிய அரசு பேருந்துகளில் ஓட்டுனர் குடிபோதையில் இருந்தால் பேருந்தை ஸ்டார்ட் செய்ய முடியாதபடி, புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஓட்டுனர் பேருந்தை இயக்குவதற்கு முன்பாக இருக்கையின் அருகே இருக்கும் ப்ரீஸ் அனலைசர் கருவியில் ஊத வேண்டும். ஒருவேளை, ஓட்டுனர் மது அருந்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாது.
இதனால், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுதவிர்த்து, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமும் புதிய அரசு பேருந்துகளில் கொடுக்கப்பட இருக்கிறது.
டயரில் காற்றழுத்தம் குறைந்தால், உடனடியாக ஓட்டுனர் முன் உள்ள சிறிய திரையில் அதுகுறித்த எச்சரிக்கை தகவல் வரும். உடனடியாக, பேருந்தை நிறுத்த முடியும் என்பதால், விபத்தை தவிர்க்கும் வாய்ப்பை வழங்கும்.
இதுதவிர, சென்னை மட்டுமின்றி, இதர நகரங்களிலும் அரசு மினி பஸ் சேவையை கொண்டு செல்வதற்கும், சென்னையில் இயக்குவதற்காக 200 மின்சார பஸ்களை வாங்குவதற்கும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?