Just In
- 52 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
ஹோண்டா, நிஸான், ஃபோர்டு, டாடா கார்களின் விலை உயர்கிறது... வரும் ஜனவரி மாதம் முதல் அமல்...
மாருதி சுஸுகி, டொயோட்டாவை தொடர்ந்து, ஹோண்டா, நிஸான், ஃபோர்டு, டாடா உள்ளிட்ட நிறுவன கார்களின் விலையும் உயர்கிறது.
மாருதி சுஸுகி, டொயோட்டாவை தொடர்ந்து, ஹோண்டா, நிஸான், ஃபோர்டு, டாடா உள்ளிட்ட நிறுவன கார்களின் விலையும் உயர்கிறது. வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விலை உயர்வு குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா, தனது அனைத்து கார்களின் விலையையும் வரும் ஜனவரி முதல் உயர்த்தவுள்ளதாக இன்று (டிசம்பர் 14) அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், விலையை உயர்த்துவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.4.73 லட்சம் விலை கொண்ட ப்ரியோ ஹேட்ச்பேக் முதல், ரூ.43.21 லட்சம் விலை கொண்ட அக்கார்டு ஹைபிரிட் வரை பல்வேறு கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது (இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).
அமேஸ் மற்றும் சிட்டி போன்ற பிரபலமான தயாரிப்புகளும் ஹோண்டா நிறுவனத்துடையது தான். ஆனால் கார்களின் விலை எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பை ஹோண்டா நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை.
ஹோண்டா நிறுவனத்தின் உற்பத்தி செலவு 4 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஹோண்டா கார்களின் விலை உயர்த்தப்படுகிறது. விலையை எவ்வளவு உயர்த்துவது? என்பது தொடர்பாக ஹோண்டா தற்போது பரிசீலித்து வருகிறது.
முன்னதாக நிஸான் இந்தியா, ஃபோர்டு இந்தியா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், வாகனங்களின் விலையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை நேற்று (டிசம்பர் 13) வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி நிஸான் நிறுவன கார்களின் விலை 4 சதவீதம் வரையும், ஃபோர்டு நிறுவன கார்களின் விலை 2.5 சதவீதம் வரையும் உயர்த்தப்படுகிறது. அதே சமயம் டாடா நிறுவன பயணிகள் வாகனங்களின் விலை ரூ.40 ஆயிரம் வரை உயரவுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தை போன்று, நிஸான், ஃபோர்டு, டாடா நிறுவன வாகனங்களின் விலையும் வரும் ஜனவரி மாதம்தான் உயர்த்தப்படவுள்ளது. இந்த நிறுவனங்களுக்கெல்லாம் முன்னதாக மாருதி சுஸுகி, டொயோட்டா கிர்லோஸ்கர், இசுஸு உள்ளிட்ட நிறுவனங்களும் விலை உயர்வு குறித்து அறிவித்துள்ளன.
இதன்படி இசுஸு நிறுவன வாகனங்களின் விலை 1 லட்ச ரூபாய் வரையும், டொயோட்டா நிறுவன வாகனங்களின் விலை சுமார் 4 சதவீதம் வரையும் உயர்த்தப்படுகிறது. இசுஸு, டொயோட்டா நிறுவன வாகனங்களின் விலை உயர்வும் வரும் ஜனவரி மாதம்தான் அமலுக்கு வருகிறது.
ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, விலை உயர்வு எவ்வளவு? என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. ஹோண்டாவை போன்று மாருதி சுஸுகி நிறுவனமும், விலை உயர்வு எவ்வளவு என்பதை நிர்ணயிக்க ஆலோசித்து கொண்டுள்ளது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!