Just In
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹோண்டா, நிஸான், ஃபோர்டு, டாடா கார்களின் விலை உயர்கிறது... வரும் ஜனவரி மாதம் முதல் அமல்...
மாருதி சுஸுகி, டொயோட்டாவை தொடர்ந்து, ஹோண்டா, நிஸான், ஃபோர்டு, டாடா உள்ளிட்ட நிறுவன கார்களின் விலையும் உயர்கிறது.
மாருதி சுஸுகி, டொயோட்டாவை தொடர்ந்து, ஹோண்டா, நிஸான், ஃபோர்டு, டாடா உள்ளிட்ட நிறுவன கார்களின் விலையும் உயர்கிறது. வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விலை உயர்வு குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா, தனது அனைத்து கார்களின் விலையையும் வரும் ஜனவரி முதல் உயர்த்தவுள்ளதாக இன்று (டிசம்பர் 14) அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், விலையை உயர்த்துவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.4.73 லட்சம் விலை கொண்ட ப்ரியோ ஹேட்ச்பேக் முதல், ரூ.43.21 லட்சம் விலை கொண்ட அக்கார்டு ஹைபிரிட் வரை பல்வேறு கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது (இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).
அமேஸ் மற்றும் சிட்டி போன்ற பிரபலமான தயாரிப்புகளும் ஹோண்டா நிறுவனத்துடையது தான். ஆனால் கார்களின் விலை எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பை ஹோண்டா நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை.
ஹோண்டா நிறுவனத்தின் உற்பத்தி செலவு 4 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஹோண்டா கார்களின் விலை உயர்த்தப்படுகிறது. விலையை எவ்வளவு உயர்த்துவது? என்பது தொடர்பாக ஹோண்டா தற்போது பரிசீலித்து வருகிறது.
முன்னதாக நிஸான் இந்தியா, ஃபோர்டு இந்தியா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், வாகனங்களின் விலையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை நேற்று (டிசம்பர் 13) வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி நிஸான் நிறுவன கார்களின் விலை 4 சதவீதம் வரையும், ஃபோர்டு நிறுவன கார்களின் விலை 2.5 சதவீதம் வரையும் உயர்த்தப்படுகிறது. அதே சமயம் டாடா நிறுவன பயணிகள் வாகனங்களின் விலை ரூ.40 ஆயிரம் வரை உயரவுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தை போன்று, நிஸான், ஃபோர்டு, டாடா நிறுவன வாகனங்களின் விலையும் வரும் ஜனவரி மாதம்தான் உயர்த்தப்படவுள்ளது. இந்த நிறுவனங்களுக்கெல்லாம் முன்னதாக மாருதி சுஸுகி, டொயோட்டா கிர்லோஸ்கர், இசுஸு உள்ளிட்ட நிறுவனங்களும் விலை உயர்வு குறித்து அறிவித்துள்ளன.
இதன்படி இசுஸு நிறுவன வாகனங்களின் விலை 1 லட்ச ரூபாய் வரையும், டொயோட்டா நிறுவன வாகனங்களின் விலை சுமார் 4 சதவீதம் வரையும் உயர்த்தப்படுகிறது. இசுஸு, டொயோட்டா நிறுவன வாகனங்களின் விலை உயர்வும் வரும் ஜனவரி மாதம்தான் அமலுக்கு வருகிறது.
ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, விலை உயர்வு எவ்வளவு? என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. ஹோண்டாவை போன்று மாருதி சுஸுகி நிறுவனமும், விலை உயர்வு எவ்வளவு என்பதை நிர்ணயிக்க ஆலோசித்து கொண்டுள்ளது.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!