Just In
- 1 hr ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 2 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 2 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 3 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்... மாருதிக்கு செக் வைக்கிறது ஹோண்டா...
மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு செக் வைக்கும் விதமாக ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு செக் வைக்கும் விதமாக ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவித்து கொண்டுள்ளது.
இவ்விரு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக கருதப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசும் ஊக்கப்படுத்தி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு மானியங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. அதே நேரத்தில் ஒரு சில முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் வேகன் ஆர் காரை வரும் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்யவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வேகன் ஆர் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வேகன் ஆர் காருக்கு 'செக்' வைக்க ஹோண்டா திட்டமிட்டு வரும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆம், எலெக்ட்ரிக் வேகன் ஆர் காருக்கு போட்டியாக சிறிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அனேகமாக ஹோண்டா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார் 2023ம் ஆண்டில் லான்ச் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் டீசல் கார் செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனம் மிக தாமதமாகதான் நுழைந்தது. ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் விஷயத்திலும் அதே தவறை செய்ய வேண்டாம் என ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எனவே கூடிய விரைவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து விட வேண்டும் என ஹோண்டா நிறுவனம் விரும்புகிறது. ஆனால் 2023ம் ஆண்டு என்பதே தாமதம்தான் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் மஹிந்திரா, டாடா, மாருதி சுஸுகி, டொயோட்டா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட்டில் வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கின்றன. அவர்களுடன் ஹோண்டா சற்று தாமதமாகதான் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள சிறிய எலெக்ட்ரிக் காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150-200 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!