Just In
- 35 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை கார்கள்… ஹூண்டாய் அதிரடி அறிவிப்பு
ஹூண்டாய் நிறுவனம் அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் துணை சேர்மன் யூய்சன் சங் தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் நிறுவனம் அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் துணை சேர்மன் யூய்சன் சங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் சர்வதேச மொபிலிட்டி உச்சி மாநாடு நிதி அயோக் சார்பில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஆட்டோமொபைல் துறையில் முதலீடு செய்து வரும் பல்வேறு தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
அதில் கலந்து கொண்ட ஹூண்டாய் நிறுவனத்தின் துணை சேர்மன் பேசியதாவது : "ஹூண்டாய் நிறுவனம், ஹைபிரிட், பியூயல் சயல், எலெக்டரிக் என எல்லா விதமான மாற்று எரிசக்தி திறன் கொண்ட வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் எங்கள் நிறுவனத்துடன் பங்கு கொண்டு மொபிலிட்டி சேவை மற்றும் கார் பகிர்வுகளை செய்ய விரும்பும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் வரவேற்கிறோம்.
பசுமையான வாகனம் என்பதை பொருத்தவரை பியூயல் செல் சிறப்பான தொழிற்நுட்பம் வெறும் ஹைட்ரஜனும் காற்றும் கலந்து அதன் மூலம் உருவாகும் திறனை கொண்டு வாகனத்தை இயக்க வைப்பது தான்.
ஹூண்டாய் நிறுவனம் வரும் 2025ம் ஆண்டிற்குள் ஹைபிரிட், பியூயல் செல், எலெக்ட்ரிக் போன்ற பசுமை வாகன தொழிற்நுட்பங்களை கொண்டு 38 வகையான வாகங்கைள அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதற்கு முதல்படியாக கோனா எனும் எலெக்ட்ரிக் காரை சிகேடி முறைப்படி இந்தியாவிற்கு கொண்டு வந்து 2019ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களை இந்தியாவில் தேடி வருகிறோம்." என கூறினார்.
ஹூண்டாய் நிறுவனம் இந்த கோனா எஸ்யூவி காரை உச்சிமாநாட்டில் காட்சிபடுத்திருந்தது. இந்த கார் முழு சார்ஜில் 482 கி.மீ. வரை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்நிறுவனம் கார் தயாரிப்பில் இருந்து ஸ்மார்ட் மொபிலிட்டி சொலியூஷன் புரோவைடராக மாற்றம் பெறுகிறது. மேலும் அந்நிறுவனம் கனெக்ட்ட் கார் புரோகிராம் என்ற தொழிற்நுட்பத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கும் கார்களில் பொருத்தி தயாரிக்க திட்டமிட்டு வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த நெக்ஸோ கார்களை கீழே உள்ள கேலரியில் பார்க்கலாம்.