Just In
- 1 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!
டில்லி ஐஐடி, டிஐஎம்டிஎஸ் மற்மு் தி எனர்ஜி மற்றும் ரிசோர்சஸ் சார்பில் 8 மாநிலங்களை சேர்ந்த 32 நகரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களுக்கான வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
டில்லி ஐஐடி, டிஐஎம்டிஎஸ் மற்மு் தி எனர்ஜி மற்றும் ரிசோர்சஸ் சார்பில் 8 மாநிலங்களை சேர்ந்த 32 நகரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களுக்கான வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
உத்திரபிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சுமார் 1,550 கிலோ மீட்டர் தொலைவிலான ரோடு பகுதிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
மேல குறிப்பிட்ட மாநிலங்களில் தான் அதிகம் சாலை விபத்துக்கள் நடக்கிறது. இந்த மாநிலங்களில் கடந்தாண்டு மட்டும் 1.47 லட்சம் பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். இது நாட்டில் நடந்த ஓட்டு மொத்த சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதமாகும்.
இதில் கொச்சி, வதோதரா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களின் தான் சாலையில் நடந்து செல்பவர்களுக்கு அதிக வசதியும் பாதுகாப்பும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நகரங்களில் 10 மற்றும் அதற்கும் குறைவான அளவிலான இடங்கள் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ராஜ்காட், ஆமதாபாத், ஹிஷர், ஆகிய நகரங்கள் சாலை பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறைந்த நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
அந்த நகரங்களில் சுமார் 80 சதவீதமான சாலையில் நடந்து செல்லும் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வு சாலை பயணிகள் செல்லும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றி மட்டும் அல்ல சாலைகளில் நடந்து செல்பவர்களின் வசதிகள், நடைபாதைகள், சாலையில் குறியீடுகள், தகவல்கள், அறிவிப்பு மற்றும் சிமிஞ்ஞை பலகைகள் உள்ளிட்டவைகளையும் உள்ளடக்கியது.
மேற்குறிப்பிட்டவைகள் எல்லாம் ஐஆர்சி எனப்படும் இந்திய சாலை கட்டுமான சட்டங்களை பொருத்து அமைந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதில் ஆய்வு நடத்தப்பட்ட 32 நகரங்களில் 15 நகரங்களில் உள்ள 30 சதவீத்திற்குள் அதிகமாக அறிவிப்பு பலகைகள் இந்திய சாலை அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை. ஆய்வு நடந்த 45 கி.மீ. நீளம் உள்ள ரோடுகளில் ஒரு ரோடு கூட இந்திய சாலை அமைப்பு சட்டப்படி அமைக்கப்படவில்லை.
ஆய்வு செய்யப்பட்டதில் ராஜ்காட், நாக்பூர், மும்பை, குர்கான் ஆகிய பகுதிகளில் ஐஆர்சியின் விதிப்படி ஒரளவிற்கு சிறப்பாக இருக்கிறது. 65 சதவீதமான அறிவிப்பு பலகைகள் விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ளது. ஐஆர்சி என்பது நாடு முழுவதும் ஒரே விதியின் கீழ் கட்டமைக்க அமைக்கப்பட்ட விதிகள்.
இது குறித்து சாலை பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் கூறிய போது "சரியான விதிகளை பின்பற்றி சாலையில் அறிவிப்பு பலகைகள் வைத்தால் மட்டுமே அதற்கான சரியான பலன் இருக்கும். வெறும் அறிவிப்பை மட்டும் மையப்படுத்தி வைத்தால் அதனால எந்த விதமான பலனும் இருக்காது.
அதே போல சாலையை கடக்கும் கோடுகள் பெரும்பாலான நகரங்களில் சிக்னல் அருகிலேயே அமைக்கப்படுகிறது. " என கூறினார்.
ஆய்வு நடத்தப்பட்ட 32 நகரங்களில் 12 நகரங்களில் 70 சதவீத நடைபாதைகளில் குறைந்ததது ஒரு ஆக்கிரமிப்பாவது இருக்கிறது. சாலையோரம் உள்ள கடைகள் தங்கள் கடைகளை விரிவாக்குவது. மக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் பார்க் செய்து போன்ற ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதை எல்லாம் நகர நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீசார் தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கி பலியானது 20,500 பேர், இது 2014ம் ஆண்டை காண்டிலும் 66 சதவீதம் அதிகமாகும். 2014ல் 12,300 பேர் மட்டுமே பலியாகியிருந்தனர்.
ஆக இந்தியாவில் சாலை விபத்தில் பலி எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரிக்க இதுபோன்ற சாலை கட்டமைப்பு வசதிகளை சரியாக பராமரிக்காதவர்களும், கட்டமைப்பை சரியாக அமைக்காதவர்களுமே முக்கியமான காரணம் என கூறப்படுகிறது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!