இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

டில்லி ஐஐடி, டிஐஎம்டிஎஸ் மற்மு் தி எனர்ஜி மற்றும் ரிசோர்சஸ் சார்பில் 8 மாநிலங்களை சேர்ந்த 32 நகரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களுக்கான வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

டில்லி ஐஐடி, டிஐஎம்டிஎஸ் மற்மு் தி எனர்ஜி மற்றும் ரிசோர்சஸ் சார்பில் 8 மாநிலங்களை சேர்ந்த 32 நகரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களுக்கான வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

உத்திரபிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சுமார் 1,550 கிலோ மீட்டர் தொலைவிலான ரோடு பகுதிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

மேல குறிப்பிட்ட மாநிலங்களில் தான் அதிகம் சாலை விபத்துக்கள் நடக்கிறது. இந்த மாநிலங்களில் கடந்தாண்டு மட்டும் 1.47 லட்சம் பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். இது நாட்டில் நடந்த ஓட்டு மொத்த சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதமாகும்.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

இதில் கொச்சி, வதோதரா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களின் தான் சாலையில் நடந்து செல்பவர்களுக்கு அதிக வசதியும் பாதுகாப்பும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

இந்த நகரங்களில் 10 மற்றும் அதற்கும் குறைவான அளவிலான இடங்கள் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

அதே நேரத்தில் ராஜ்காட், ஆமதாபாத், ஹிஷர், ஆகிய நகரங்கள் சாலை பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறைந்த நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

அந்த நகரங்களில் சுமார் 80 சதவீதமான சாலையில் நடந்து செல்லும் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

இந்த ஆய்வு சாலை பயணிகள் செல்லும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றி மட்டும் அல்ல சாலைகளில் நடந்து செல்பவர்களின் வசதிகள், நடைபாதைகள், சாலையில் குறியீடுகள், தகவல்கள், அறிவிப்பு மற்றும் சிமிஞ்ஞை பலகைகள் உள்ளிட்டவைகளையும் உள்ளடக்கியது.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

மேற்குறிப்பிட்டவைகள் எல்லாம் ஐஆர்சி எனப்படும் இந்திய சாலை கட்டுமான சட்டங்களை பொருத்து அமைந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

இதில் ஆய்வு நடத்தப்பட்ட 32 நகரங்களில் 15 நகரங்களில் உள்ள 30 சதவீத்திற்குள் அதிகமாக அறிவிப்பு பலகைகள் இந்திய சாலை அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை. ஆய்வு நடந்த 45 கி.மீ. நீளம் உள்ள ரோடுகளில் ஒரு ரோடு கூட இந்திய சாலை அமைப்பு சட்டப்படி அமைக்கப்படவில்லை.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

ஆய்வு செய்யப்பட்டதில் ராஜ்காட், நாக்பூர், மும்பை, குர்கான் ஆகிய பகுதிகளில் ஐஆர்சியின் விதிப்படி ஒரளவிற்கு சிறப்பாக இருக்கிறது. 65 சதவீதமான அறிவிப்பு பலகைகள் விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ளது. ஐஆர்சி என்பது நாடு முழுவதும் ஒரே விதியின் கீழ் கட்டமைக்க அமைக்கப்பட்ட விதிகள்.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

இது குறித்து சாலை பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் கூறிய போது "சரியான விதிகளை பின்பற்றி சாலையில் அறிவிப்பு பலகைகள் வைத்தால் மட்டுமே அதற்கான சரியான பலன் இருக்கும். வெறும் அறிவிப்பை மட்டும் மையப்படுத்தி வைத்தால் அதனால எந்த விதமான பலனும் இருக்காது.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

அதே போல சாலையை கடக்கும் கோடுகள் பெரும்பாலான நகரங்களில் சிக்னல் அருகிலேயே அமைக்கப்படுகிறது. " என கூறினார்.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

ஆய்வு நடத்தப்பட்ட 32 நகரங்களில் 12 நகரங்களில் 70 சதவீத நடைபாதைகளில் குறைந்ததது ஒரு ஆக்கிரமிப்பாவது இருக்கிறது. சாலையோரம் உள்ள கடைகள் தங்கள் கடைகளை விரிவாக்குவது. மக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் பார்க் செய்து போன்ற ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதை எல்லாம் நகர நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீசார் தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கி பலியானது 20,500 பேர், இது 2014ம் ஆண்டை காண்டிலும் 66 சதவீதம் அதிகமாகும். 2014ல் 12,300 பேர் மட்டுமே பலியாகியிருந்தனர்.

 இந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்..!

ஆக இந்தியாவில் சாலை விபத்தில் பலி எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரிக்க இதுபோன்ற சாலை கட்டமைப்பு வசதிகளை சரியாக பராமரிக்காதவர்களும், கட்டமைப்பை சரியாக அமைக்காதவர்களுமே முக்கியமான காரணம் என கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
IIT Delhi research on safety of pedestrian on road. Read in Tamil
Story first published: Wednesday, October 17, 2018, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X