Just In
- 29 min ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 2 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 4 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
மோடியின் அடுத்த அதிர்ச்சி 'வாகன மதிப்பிழப்பு'... இனி ஒரு பய வண்டி ஓட்ட முடியாது...
இந்தியர்கள் மத்தியில் சொந்த வாகனத்தை வாங்கி பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று வாகனம் இல்லாத வீடுகளே இந்தியாவில் மிக குறைவுதான். குறைந்த பட்சம் ஒரு வாகனமாவது ஒரு வீட்டில் இருக்கிறத
இந்தியர்கள் மத்தியில் சொந்த வாகனத்தை வாங்கி பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று வாகனம் இல்லாத வீடுகளே இந்தியாவில் மிக குறைவுதான். குறைந்த பட்சம் ஒரு வாகனமாவது ஒரு வீட்டில் இருக்கிறது. சிலர் வீட்டில் இருக்கும் ஒவ்வொருக்கும் ஒரு வாகனம் என்று பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் பொது போக்குவரத்தின் பற்றாகுறையும், அதற்கான பயண செலவுமே ஆகும். பெரு நகரங்களில் செயல்படும் பெரும்பாலான பேருந்துகள் அதிக கூட்டத்துடன் செல்கிறது. இதனால் மக்கள் அதில் பயணிக்க விரும்பவில்லை.
மேலும் இந்தியா முழுவதும் தற்போது பேருந்துகளில் பயணிக்க டிக்கெட்டிற்கு கொடுக்கும் பணம் என்பது சொந்த வாகனம் வாங்கி அதற்கான எரிபொருளுக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட சமமாகிறது. அதனால் பெரும்பாலும் சொந்த வாகன பயன்பாட்டை விரும்புகின்றனர்.
போதாக்குறைக்கு இந்தியாவில் மக்கள் தொகை வேறு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க வேண்டும். தற்போது ஆட்டோமொபைல் மார்கெட்டும் இந்தியாவில் அதிகமாக உள்ளது. விரைவில் இந்திய மக்கள் தொகையை தாண்டி இந்தியாவில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நிலைமை இப்படி இருக்கையில் இந்தியாவில் எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் சந்தைக்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு விட்டது. எதிர்காலத்தில் இந்தியா போன்று அதிக மனித வளம் கொண்ட நாட்டில் ஆட்டோமொபைலுக்கு பெரிய மார்கெட் இல்லை என்றால் அவர்களது வருமானத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
இதனால் எதிர்கால இந்தியாவிலும் தொடர்ந்து ஆட்டோமொபைலுக்கான மார்கெட்டை நிலை நாட்ட தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுடன் சேர்ந்து சில திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஆயுள் காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதாவது நீங்கள் புதிதாக ஒரு வாகனம் வாங்கினால் அந்த வாகனத்தை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்ற வகையில் சட்டம் இயற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டில்லியில் இது போன்ற சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. பெட்ரோல் வாகனங்களுக்கு 15 ஆண்டுகளும், டீசல் வாகனங்களுக்கு 10 ஆண்டுகளும் ஆயுள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுளை தாண்டி வாகனங்களை இயக்க கூடாது என்ற உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த உத்தரவு கொண்டு வரப்படுவதற்கு முக்கிய காரணம் டில்லியில் ஏற்பட்ட காற்று மாசுதான். சுமார் 10-15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் எல்லாம் அதிக அளவு மாசுகளை வெளியேற்றும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த அரசு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரே முறையாக இதை செய்யாமல் முதலில் மெதுவாக பெரு நகரங்களில் இதை நடைமுறைப்படுத்தி விட்டு மெது மெதுவாக இதை சிறிய நகரங்கள் என இந்தியா முழுவதிலும் இதை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நிதிஅயோக் அமைப்பின் மூத்த ஆலோசகர் சுஜீத் கூறுகையில் : "தற்போது ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்து துறையின் கிராப்களை கணக்கிடுகையில் எதிர்காலத்தில் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்பு என்பது மிக குறைவானதாகி விடும். இதற்கு எல்லாம் தீர்வு குறிப்பிட்ட வயதை தாண்டிய வாகனங்களுக்கு தடை விதிப்பதுதான்.
ஆனால் அவ்வாறு செய்தால் இந்தியாவில் சுமார் 3 கோடி வாகனங்கள் செயல்பட முடியாத நிலைக்கு சென்று விடும். அந்த வாகனங்களை மக்களால் பயன்படுத்தவும் முடியாது. வேறு எதுவும் செய்ய முடியாது வாகனங்களை அழிக்க மட்டுமே முடியும்" என கூறினார்.
மேலும் வாகனங்களை அழிக்கவும் இந்தியாவில் குறைந்தது 500 அல்லது 600 கார் ரீ சைக்கிள் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கான சாத்திக்கூறுகள் மிக குறைவு.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
இதற்கிடையில் வாகனங்களை அழிப்பதற்கு முன் அதை எவ்வாறு அழிக்க வேண்டும்? அதன் கழிவுகளை எப்படி ரீ சைக்கிள் செய்ய வேண்டும்? என்ற சரியான திறனை நாம் வளர்க்கவேண்டும். அதற்கு முன்னர் இவ்வாறான முடிவுகளை எடுப்பது நிச்சயம் தவறு எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத விபரீதம் ஒன்று அரங்கேறியுள்ளது. மத்திய அரசின் அலட்சியம் காரணமாக அரங்கேறியுள்ள இந்த விபரீதத்தால், பெட்ரோல் விலை 100 ரூபாயை கடப்பதற்கான வாய்ப்பு உண்டாகியிருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு வரை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்கள்.
இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் அதிகப்படியான வரிகள் காரணமாகவும், அவற்றின் விலை புதிய உச்சங்களை தொட்டு வந்தது. எனவே வரிகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
ஆனால் மத்திய, மாநில அரசுகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இதனால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குறைந்தபட்சம் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
ஏனெனில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும் பட்சத்தில், ஒரே ஒரு வரி மட்டுமே என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வரிகள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருவாயை இழந்து விடக்கூடாது என்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்றே குறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கொண்டே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே மேற்கண்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுக்கு வந்த உடனேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த சூழலில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் பொதுமக்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
இந்தியாவிடம் தேவைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் வளம் இல்லை. எனவே சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
மக்கள் தொகை அடிப்படையில் உலகின் 2வது மிகப்பெரிய நாடான இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஆம், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைகிறது.
அத்துடன் தேவை அதிகரிக்க அதிகரிக்க தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் உயர்வடைந்து விடுகிறது. எந்த ஒரு பொருள் என்றாலும் தேவை அதிகரித்தால், தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்வடைவது என்பது வழக்கமான நடக்ககூடிய ஒரு விஷயம்தான்.
இந்த வகையில் தற்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 21.02 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா (Million Tonne) இறக்குமதி செய்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 10.5 சதவீதம் அதிகமாகும். அத்துடன் 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகமான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்திருப்பதும் இதுவே முதல் முறை.
அதாவது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது அதிகரித்துள்ளது. மத்திய அரசின் எரிபொருள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு இந்த புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு என்பது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி விடும். முதலில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிகப்படியான தொகை செலவிடப்படுவதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
அத்துடன் தேவை அதிகரிப்பின் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயரும். எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தே ஆக வேண்டும்.
அமெரிக்கா, சீனா என உலகின் பல்வேறு நாடுகளும் இந்த பிரச்னையை எதிர்கொண்டுதான் வருகின்றன. ஆனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எல்லாம் அந்த நாடுகள் வெகு வேகமாக எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. அத்துடன் எத்தனால், மெத்தனால், சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் அங்கு எடுக்கப்படுகின்றன.
இதனால் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் இறக்குமதி வெகுவாக குறையும். இந்தியாவிலும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அமெரிக்கா, சீனா அளவிற்கு துரிதம் அடையவில்லை என்பதே உண்மை.
தற்போதைய நிலையில் இந்தியாவில் ஒருவர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்பினாலும் கூட, அதனை செய்ய முடியாத நிலைதான் நிலவி வருகிறது. ஏனென்றால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இங்கு இன்னும் போதிய அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை.
எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களையே வாங்கி கொண்டிருக்கின்றனர். இதனால்தான் தேவை உயர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்து வருகிறது.
எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கவே செய்யும்.
முன்னதாக ஈரானுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் விலகியது. இதனால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4ம் தேதியுடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
எங்களின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. ஆனால் இதில் இருந்து இந்தியா உள்பட மொத்தம் 8 நாடுகள் விலக்கு பெற்றன.
இருந்தபோதும் ஈரானிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு அக்டோபர் மாதத்தில், சுமார் 12 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆப்ரிக்க நாடுகளிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.