Just In
- 25 min ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 5 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 5 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 6 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்.. இந்தியா மீது போர் தொடுக்கிறது அமெரிக்கா?
மோடி மீதான ஆத்திரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த ஒரு வார்த்தையால் இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் இடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மோடி மீதான ஆத்திரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த ஒரு வார்த்தையால், இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் இடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஈரான் நாட்டு அரசுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா விலகியது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு வழிகளில் ஈரான் அரசுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார்.
கச்சா எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பி பட்ஜெட் போட்டு கொண்டிருக்கும் உலகின் ஒரு சில நாடுகளில் ஈரானும் ஒன்று. ஆனால் கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து ஈரானை எப்படியாவது தனிமைப்படுத்தி விட வேண்டும் என்பதே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் திட்டம்.
அதற்கு உண்டான அத்தனை வேலைகளையும் டொனால்டு டிரம்ப் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் என டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கு காலக்கெடு ஒன்றையும் அமெரிக்கா நிர்ணயம் செய்துள்ளது. நவம்பர் 4 என்பதுதான் அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு. அதாவது நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு ஈரானில் இருந்து எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா என அனைத்து நாடுகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். எனவே இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்ன விதமான முடிவு எடுக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்தது.
ஏனெனில் மக்கள் தொகை அடிப்படையில் சீனாவிற்கு பிறகு உலகின் 2வது மிகப்பெரிய நாடாக திகழும் இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 82 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது.
இந்தியா மிக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈராக் முதல் இடத்திலும், சவுதி அரேபியா 2வது இடத்திலும் உள்ளன. ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு பிறகு இந்தியா மிக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு ஈரான்.
2017-18ம் ஆண்டில் 220.4 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில், 9.4 சதவீத கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவுக்கு கடுமையான பிரச்னைகள் ஏற்படும்.
ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளே கச்சா எண்ணெய்தான். இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.
இதன் காரணமாக தற்போது இருப்பதை காட்டிலும் பெட்ரோல், டீசல் விலை மிக மிக கடுமையாக உயரும். பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவேதான் அமெரிக்காவின் எச்சரிக்கையை மோடி எப்படி எதிர்கொள்ள போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த சூழலில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்வது என இந்தியா துணிந்து முடிவு எடுத்துள்ளது. இந்தியா மட்டுமல்லாது சீனா மற்றும் வேறு சில நாடுகளும் ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது என்ற முடிவைதான் எடுத்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் பத்திரிக்கை நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ''அந்த நாடுகளை நாங்கள் கவனித்து கொள்கிறோம்'' என்கிற ரீதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் அளித்தார்.
ஆனால் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை இந்தியா ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளப்போவது இல்லை என்பது மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி ஒன்றின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 4ம் தேதியுடன் அமெரிக்கா விதித்த காலக்கெடு முடிகிறது. ஆனால் அதே நவம்பர் மாதத்தில், இந்தியாவை சேர்ந்த 2 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஈரான் நாட்டு கச்சா எண்ணெய்க்கு ஆர்டர் கொடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் மங்களூர் ரீபைனரி அண்டு பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவைதான் அந்த 2 இந்திய நிறுவனங்கள். இந்த 2 நிறுவனங்களும் 1.25 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை ஈரானிடம் இருந்து வாங்குவதற்கான ஆர்டரை கொடுத்துள்ளன.
எனவே இந்த ஆத்திரத்தில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வார்த்தைகளை விட்டு வருகிறார். இதன் காரணமாக இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் இடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!