Just In
- 12 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..
கேரள மாநில அரசு தங்கள் மாநிலத்தில் எலெக்ட்ரிக் கார் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது அம்மாநில போக்குவரத்து துறை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டுமான வசதிகளை மேமம்படுத்த முதற்கட்ட பணிகளை
கேரள மாநில அரசு தங்கள் மாநிலத்தில் எலெக்ட்ரிக் கார் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது அம்மாநில போக்குவரத்து துறை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டுமான வசதிகளை மேமம்படுத்த முதற்கட்ட பணிகளை துவங்கியுள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு மாற்றுசக்தி வாகனங்களை இயக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை 2020க்குள்ளாக குறைந்ததது 5 சதவீதமாக மாற்ற திட்டமிட்டு அதற்கு தகுந்தார் போல் செயல்பட்டு வருகிறது.
மேலும் கேரள அரசு ஒவ்வொரு சார்ஜிங் ஸ்டேஷவனும் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களாகவு்ம செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கறது. மேலும் கேரளாவில் கட்டமைக்கப்படும் அனைத்து சார்ஜிங் ஸ்டேஷன்களையும் ஒரே செயலியில் செயல்படும் வகையில் எலெக்டரிக் வாகன உரிமையாள்கள் எந்த செயலி மூலமே எந்த ஸ்டேஷனில் வேண்டுமானாலும் சார்ஜிங் ஸ்லாட்களை புக் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது.
மேலும் அடுத்த சில மாதங்களில் கேரள மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கான பாலிசிகள் உருவாக்கப்பட்டு அதற்காக கூட்டம் நடத்தப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநில அரசின் போக்குவரத்து கழகமாக கேஎஸ்ஆர்டிசியின் சார்பில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமான வரும் ஐப்பசி மாதம் சபரி மலை சீசன் காலகட்டத்தில் நிலக்கல்லில் இருந்து பம்பை வரை எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
சபரி மலை சீசன் காலம் முடிவடைந்ததும் அந்த பஸ்கள் எல்லாம் நேரடியாக கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இயக்கப்படுகிறது.
சமீபத்தில் சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் முதன் முறையாக இந்த திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
மேலும் கேரள அரசு 2022ம் ஆண்டிற்குள் 1 கோடி எலெக்ட்ரிக் பஸ்களை கேரளாவில் இயங்க வைக்க முடிவு செய்துள்ளது இதற்கான ரோடுமேப்களையும் தயார் செய்யும் பணி தற்போது நடந்துவருகிறது.
இது குறித்து இந்திய இன்ஸ்டியூட் ஆஃப் ரோடு சேஃப்டி யின் இயக்குநர் உபேந்திரநாராயணன் கூறுகையில் : "எலெக்ட்ரிக் பஸ்கள் எல்லாம் தாள்தள பேருந்துகளாக இருக்கும் அதனால் அதனுடைய கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாக இருக்கும். இதனால் பெரிய வேகத்தடை உள்ள ரோடுகள், முறையாக கட்டமைக்காத அல்லது பராமரிக்காத ரோடுகள் மேம்பாலங்களில் செல்லும் போது பஸ்ஸின் மோட்டார் பாதிப்பாக வாய்ப்பு உள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களில் ஆக்ஸிலின் அருகிலேயே மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். அது மட்டும் அல்ல சுமார் 1 கோடி எலெக்ட்ரிக் பஸ்கள் தின பயன்பாட்டிற்கு வந்து விட்டால் அவற்றிற்கு மின் சக்தி வழங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
கேரள அரசின் மின் வாரியத்தில் அதற்கான அளவிற்கு திறன் மற்றும் ஆள் பலம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. தொடர்ச்சியாக எந்த வித இடையூறுமின்றி மின் சக்தியை தொடர்ந்த வழங்குவது விளையாட்டான விஷயம் அல்ல" என கூறினார்.
இது குறித்து அறிவியல் மற்றும் சுற்றுபுற ஆய்வு மைய செயல் இயக்குநர் அனுமிதா ராய்சவுத்திரி கூறுகையில் : "எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன் சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க வேண்டியது அவசியம். பயணத்தின் பாதிவழியில் எலெக்ட்ரிக் காரில் சார்ஜ் தீர்ந்து விட்டால் எங்கு சென்று சார்ஜ் ஏற்றுவது என்பது மக்களுக்கு தெரியவேண்டும் இது சாத்தியப்பட்டு விட்டால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சுலபமாக மாறிவிடுவார்கள்." என கூறினார்.
எலெக்ட்ரிக் வாகனம் என்பது முற்றிலும் சுற்றுசுழலுக்கு தீங்கு விளைவிக்காத வாகனம் என்று சொல்லிவிட முடியாது. பயன்படுத்தப்பட்ட பேட்டரிக்களுக்கு அதிகமாக இயற்கையை கெடுக்கும் குணம் வந்து விடும்.
அதை சரியாக மறு சுழற்சிக்கு கொண்டு செல்வது அரசிற்கு மிகபெரிய பணியாக இருக்கும். ஏற்கனவே அரசு கழிவு பொருட்கள் மேலாண்மையில் திணறி வரும் நிலையில் இது பெரும் தலைவலியாக வரும் காலங்களில் வரும்.
இதற்கிடையில் கேரள அரசு இ-ஆட்டோக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முனைப்பு காட்டி வருகிறது. கொச்சி மெட்ரோ ரயில் சார்பில் இந்த இ-ஆட்டோவை மெட்டரோ ரயில் நிலையங்களில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேரள அரசு குறிப்பிட்ட அளவு ஆட்டோக்களுக்கு மட்டுமே பெர்மிட்களை வழங்கி வருகிறது. அதற்கு மேல் பெர்மிட்களை வழங்காது தற்போது 2000 ஆட்டோக்களுக்கான பெர்மிட்டை வழங்கவுள்ளது அதுவும் இ-ஆட்டோக்களுக்கு மட்டுமே இந்த பெர்மிட் வழங்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு தொடர்ந்து பல்வேறு வகையானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. விரைவில் கேராளவில் வாகனங்களால் ஏற்படும் மாசு பெரும் அளவில் குறையும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் தமிழகத்தில் தற்போது தான் எலெக்ட்ரடிக் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து யோசனை செய்து வருகின்றனர். இதுவரை எலெக்ட்ரிக் ஸ்டேஷன்களை கட்டுமானம் செய்வதற்கான திட்டங்களையோ, எலெக்ட்ரிக் கார், எலெக்ட்ரிக் ஆட்டோ ஆகியவற்றை பற்றி தமிழக அரசு எந்த தகவலையுமே வெளியிடவில்லை.
மற்ற மாநிலங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் போது தமிழக அரசு இதைப்பற்றி பேசாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.