Just In
- 31 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சுப்ரீம் கோர்ட்டிற்கு கணக்கு காட்டுவதற்காக போலீசாருக்கு பறந்த அவசர உத்தரவு.. வாகன ஓட்டிகளே உஷார்
சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டிக்கு கணக்கு காட்டுவதற்காக போக்குவரத்து போலீசாருக்கு அவசர அவசரமாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டிக்கு கணக்கு காட்டுவதற்காக போக்குவரத்து போலீசாருக்கு அவசர அவசரமாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
உலக அளவில் சாலை விபத்துக்களின் காரணமாக அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.
இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். குடி போதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களே சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.
அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட, பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதே கிடையாது. இந்த கசப்பான உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால், அவர்களுக்கு மட்டும் பிரச்னை ஏற்படுவதில்லை. உடன் சேர்ந்து சாலையில் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகளும் விபத்துக்களினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் இதனை புரிந்து கொள்வதில்லை.
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பது இல்லை. அப்படிப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு மிக கடுமையான தண்டனைகளை இந்திய சட்ட திட்டங்கள் வழங்குவது இல்லை. அதற்கு மாறாக இலகுவான தண்டனை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு சில போலீசாரே போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்றனர். அத்துடன் அவர்கள் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் புகார்கள் உள்ளன.
இந்த சூழலில், விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிட்டி ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. விபத்து, உயிரிழப்புகளின் எண்ணிக்கையை உடனடியாக 10 சதவீதம் அளவிற்கு கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்த கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எதுவும் பெரிய அளவில் எடுக்கப்படவில்லை. எனவே இதுதொடர்பாக கடந்த 12ம் தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கடுமையான அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து போலீசார் மீது பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டன.
எனவே சுப்ரீம் கோர்ட் கமிட்டியின் பிடியில் இருந்து தப்புவதற்காக, மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள், அவரச அவசரமாக அனைத்து போக்குவரத்து காவல் நிலையங்களுக்கும், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். இதில், 6 வகையான போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 6 வகையான போக்குவரத்து விதிமீறல்களை செய்யும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸை குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி இனி அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னல்களை மதிக்காமல் செல்லுதல் ஆகிய குற்றங்களுக்கு, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸை 3 மாதங்களுக்கு ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் எடுப்பர்.
அத்துடன் செல்போனில் பேசி கொண்டு வாகனம் ஓட்டுதல், வணிக பயன்பாட்டு வாகனத்தில் பயணிகளை ஏற்றி செல்லுதல் மற்றும் ஓவர்லோடு ஆகிய குற்றங்களை செய்யும் நபர்களின் டிரைவிங் லைசென்சும் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டு விடும்.
இந்த உத்தரவை பாரபட்சம் பார்க்காமல் மிக கடுமையாக அமல்படுத்த வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ரத்து செய்யும் நடவடிக்கைகளுக்காக அதிகமான லைசென்ஸ்களை ஆர்டிஓ அலுவலகத்திற்கு பரிந்துரைக்க வேண்டும்.
இது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டிக்கு அவ்வப்போது தொடர்ச்சியாக அனுப்பி கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 35,800 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 12,200க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவும் அங்கு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் டிரைவ்ஸ்பார்க் யூ டியூப் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்
டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ டியூப் சேனலை பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி