Just In
- 51 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதிய செடன் ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் காபெக்ட் செடன் கார்களை தயாரிக்க துவங்கியுள்ளது.மஹிந்திரா மற்றும் போர்டு ஆகிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
மஹிந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் காபெக்ட் செடன் கார்களை தயாரிக்க துவங்கியுள்ளது. எக்னாமிக் டைம்ஸ் தகவல்படி போர்டு ஃபிகோ ஆஸ்பயர் காரின் எலெக்ட்ரிக் வெர்சனாக அந்த கார் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா மற்றும் போர்டு ஆகிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தங்கள் தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் போர்டு நிறுவனத்தின் போர்டு ஃபிகோ ஆஸ்பயர் மாடலை பயன்படுத்தி கொள்கிறது.
எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் அதிகம் முதலீடு செய்ய விரும்பாத மகேந்திர நிறுவனம் போர்டு நிறுவனத்தின் ஃபிகோ ஆஸ்பயர் கார்களை தங்களது எலக்ட்ரிக் கார்களுக்காக பயன்படுத்தவுள்ளது.
ஏற்கனவே மஹேந்திர நிறுவனம் இவெரிட்டோ எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து இ.இ.எஸ்.எல்., மூலம் மத்திய அரசின் பயன்பாட்டிற்காக விற்பனை செய்து, அவை வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் தற்போது போர்டு நிறுவனம் மகேந்திராவின் எலக்ட்ரிக் தொழிற்நுட்பத்தை பெற முடியும்.
மஹிந்திரா இவெரிட்டோவை பொறுத்தவரை ரினால்ட் நிறுவனத்திலன் லோகன் கார் போன்று காட்சியளிப்பதால் அது இந்திய சந்தைக்கு பழக்கப்பட்ட காராக இருக்கும். அதே நேரத்தில் போர்டு ஃபிகோ ஆஸ்பயரின் புதிய லுக் வாடிக்கையாளர்களை கவரும். அதனால் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார் தொழிற்நுட்பத்திற்கு போர்டு ஃபிகோ ஆஸ்பயர் சிறந்த காராக அமையும் என கருதப்படுகிறது.
போர்டு மற்றும் மகேந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து தங்களுக்கு தகுந்தார் போல் வடிவமைத்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். அதே போல் மாருதி மற்றும் சுசூகி நிறுவனமும் கூட்டு சேரந்து எலெக்ட்ரிக் கார்களுக்கான லித்தியம் ஐயான் பேட்டரிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் டொயாட்டோ நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் டெக்னாலஜியை மாருதியுடன் வழங்கி குறைவிலையிலான எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களை தயாரித்த அனுபவம் உள்ள நிலையில் போர்டு நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவிற்காக புதிய எலெக்ட்ரானிக் கார்களை தயாரிக்க முன் வந்துள்ளது.
எலெக்ட்ரானிக் செடனின் கார் தயாரிக்க போர் ஃபிகோ மாடலை பயன்படுவது ஏற்கனவே தயாரித்த இவெரிட்டோ காரை காட்டிலும் புதிய டிசைனிலும் மேலும் பல சிறப்பம்சங்களுடனும் இணையும் என எதிர்பார்க்கலாம்.