Just In
- 37 min ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 1 hr ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 1 hr ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- 3 hrs ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கேரள வெள்ளத்தில் உயிர்களை காப்பாற்றிய மீனவருக்கு புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் பரிசு…
கேரள வெள்ளத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை மீட்கும் போது படகில் ஏற குணிந்து நின்று தன் முதுகை படியாக கொடுத்தார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதை செய்த இளைஞரின் சமூகசேவையை பாராட்டி
கேரள வெள்ளத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை மீட்கும் போது படகில் ஏற குனிந்து நின்று தன் முதுகை படியாக கொடுத்தார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதை செய்த இளைஞரின் சமூகசேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் கேரளாவின் முதல் மஹிந்திரா மராஸ்ஸோ காரை அவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே காணுங்கள்.
சமீபத்தில் நடந்த கேரள வெள்ளத்தை நாம் யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது, என்னதான் தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் முல்லை பெரியாறு போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் கேரளா வெள்ளத்தில் மிதக்கும் போது தமிழர்கள் மனித நேயத்துடன் உதவி கரங்களை நீட்டினர்.
பேரிடர் காலம் என்றால் மக்களுக்கு மட்டும் அல்ல அரசும் பெரும் சிக்கலில் மாட்டும், மக்களை நிச்சயம் இந்த பேரிடரில் இருந்து காக்க வேண்டும். ஆனால் அதற்கான போதுமான மனித வளம், வசதிகளும் அரசிடம் இல்லை, இந்த பேரிடர் என்பது யாரும் எதிர்பாராத வகையில் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களே தங்களால் முடிந்த அளவிற்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டனர். இதில் கேரள மீனவர்களின் உதவி பெரும் பங்கு வகித்தது. ஏன் மீட்பு பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவே சில இடங்களில் மீனவர்களின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த வகையில் பொதுமக்களை படகு மூலம் மீட்ட ஜெய்சால் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் அவர் மீட்பு பணியில் ஈடுபடும் போது ஒரு பெண் படகில் ஏற முடியாமல் தவித்துள்ளார். உடனடியாக ஜெய்சால் மண்டி போட்டு குனிந்து தன் முதுகை படியாக பயன்படுத்தி ஏறுமாறு தெரிவித்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் லைரலாக பரவி தென் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பலர் ஜெய்சாலின் செயலை பாராட்டினர், அவரது உதவியையும், எதையும் யோசிக்காமல் உதவ முன் வந்த குணத்தையும் அனைவரும் பாராட்டி சமூகவலைதளங்களில் எழுதினர்.
இந்நிலையில் கோழிக்கோடை சேர்ந்த மஹிந்திரா நிறுவன டீலராக எராம் மோர்ட்டர்ஸ் நிறுவனம் ஜெய்சாலுக்கு மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட மஹிந்திரா மராஸ்ஸோ காரை பரிசாக அளித்தது. இந்த நிகழ்ச்சியில் அம்மாவட்ட கலெக்டர் யூவி ஜோஸ், மற்றும் எராம் குழும நிர்வாக சிஎம்டி சித்திக் அகமது, மேயர் தோட்டத்தில் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மஹிந்திரா மராஸ்ஸோ காரை பெற்றுக்கொண்ட ஜெய்சால் கூறியதாவாது : "இந்த மஹிந்திரா மராஸ்ஸோ காரை பரிசாக பெற்றதற்கு மகிவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த காரை எதிர்காலத்தில் சமூக நலனுக்காக பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பயன்படுத்துவேன்.
சமூக வலைதளங்களில் வைரலான என் புகைப்படம் குறித்த சம்பவம் என்னால் மறக்க முடியாதது. தேசிய பேரிடர் குழு என்னிடம் ஒரு பெண் மீட்க முடியாத இடத்தில் சிக்கியிருக்கிறார் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது அவரை மீட்க உங்களால் உதவ முடியமா என்று கேட்டனர்.
நான் ஒப்பு கொண்டதும், அந்த பெண்ணை மீட்பதற்கான படகுகள் மற்றும் உபகரணங்களை எங்களுக்கு வழங்கினர். நானும் எனது நண்பர்களும் எந்த பெண் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டோம். அது முழுவதுமாக நீர் சூழ்ந்த பகுதி அந்த பகுதியை படகை நிறுத்தி வைத்து அவரை ஏற சொன்னோம்.
ஆனால் அந்த பகுதியில் இருந்து அவர் படகிற்குள் ஏற சிரமப்படுவார் என்பதை உணர்ந்து கொண்டேன் உடனடியாக குனிந்து என் முதுகை படியாக பயன்படுத்தி படகில் எறுமாறு அந்த பெண்ணிடம் சொன்னேன். இதனால் அவர்கள் எளிதாக ஏற முடிந்தது. " என கூறினார்.
இந்த செயலில் ஈடுபட்ட ஜெய்சால், அஃப்சல், முஸூன் ஆகியோரை மக்கள் "கடலின் முத்துக்கள்" என அழைத்து வருகின்றனர். இந்த பரிசை வழங்கிய எராம் மோட்டார்ஸ் நிறுவனம் இது மற்ற இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் எனவும் எதிர்கால இளைஞர்களையும் ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் அவருக்கு வழங்கப்பட்ட கார்தான் கேரளாவில் முதல் டெலிவரிக்காக வைக்கப்பட்ட மஹிந்திரா மரஸ்ஸோ கார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது மஹிந்திரா நிறுவனம் கேரளாவின் முதல் காரை அந்த மீனவருக்கு பரிசாக வழங்கியுள்ளது.
Recommended Video
கேரள வெள்ளத்தில் சிக்கயவர்களை மீட்கும் பணியில் மட்டும் சுமார் 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் ஒரு வார காலம் இடைவிடாத மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் இருந்த அவர்களது படகுகளை வெள்ள பாதித்த பகுதிகளுக்குள் கொண்டு சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். எதிர்பாராத விதமாக கேளராளவில் இதுவரை அந்த வெள்ளத்திற்கு 480 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலா பார்வையில்:
மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோ காரை இலவசமாக வழங்கியது மூலம் கேரள மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற முயற்சிக்கிறது. இருந்தாலும் இது போன்று சமூக சேவையில் ஈடுபடுபவர்களை அங்கீகரிப்பதும் எதிர்கால இளைஞர்களை மேலும் பல நல்ல விஷயங்களை செய்ய தூண்டும். இது போன்ற செயல்களை மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
மஹிந்திரா நிறுவனம் மீனவருக்கு பரிசாக வழங்கிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை உங்களுக்காக கீழே வழங்கியுள்ளோம்.
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!