Just In
- 4 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 4 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 4 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கேரள வெள்ளத்தில் உயிர்களை காப்பாற்றிய மீனவருக்கு புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் பரிசு…
கேரள வெள்ளத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை மீட்கும் போது படகில் ஏற குணிந்து நின்று தன் முதுகை படியாக கொடுத்தார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதை செய்த இளைஞரின் சமூகசேவையை பாராட்டி
கேரள வெள்ளத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை மீட்கும் போது படகில் ஏற குனிந்து நின்று தன் முதுகை படியாக கொடுத்தார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதை செய்த இளைஞரின் சமூகசேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் கேரளாவின் முதல் மஹிந்திரா மராஸ்ஸோ காரை அவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே காணுங்கள்.
சமீபத்தில் நடந்த கேரள வெள்ளத்தை நாம் யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது, என்னதான் தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் முல்லை பெரியாறு போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் கேரளா வெள்ளத்தில் மிதக்கும் போது தமிழர்கள் மனித நேயத்துடன் உதவி கரங்களை நீட்டினர்.
பேரிடர் காலம் என்றால் மக்களுக்கு மட்டும் அல்ல அரசும் பெரும் சிக்கலில் மாட்டும், மக்களை நிச்சயம் இந்த பேரிடரில் இருந்து காக்க வேண்டும். ஆனால் அதற்கான போதுமான மனித வளம், வசதிகளும் அரசிடம் இல்லை, இந்த பேரிடர் என்பது யாரும் எதிர்பாராத வகையில் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களே தங்களால் முடிந்த அளவிற்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டனர். இதில் கேரள மீனவர்களின் உதவி பெரும் பங்கு வகித்தது. ஏன் மீட்பு பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவே சில இடங்களில் மீனவர்களின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த வகையில் பொதுமக்களை படகு மூலம் மீட்ட ஜெய்சால் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் அவர் மீட்பு பணியில் ஈடுபடும் போது ஒரு பெண் படகில் ஏற முடியாமல் தவித்துள்ளார். உடனடியாக ஜெய்சால் மண்டி போட்டு குனிந்து தன் முதுகை படியாக பயன்படுத்தி ஏறுமாறு தெரிவித்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் லைரலாக பரவி தென் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பலர் ஜெய்சாலின் செயலை பாராட்டினர், அவரது உதவியையும், எதையும் யோசிக்காமல் உதவ முன் வந்த குணத்தையும் அனைவரும் பாராட்டி சமூகவலைதளங்களில் எழுதினர்.
இந்நிலையில் கோழிக்கோடை சேர்ந்த மஹிந்திரா நிறுவன டீலராக எராம் மோர்ட்டர்ஸ் நிறுவனம் ஜெய்சாலுக்கு மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட மஹிந்திரா மராஸ்ஸோ காரை பரிசாக அளித்தது. இந்த நிகழ்ச்சியில் அம்மாவட்ட கலெக்டர் யூவி ஜோஸ், மற்றும் எராம் குழும நிர்வாக சிஎம்டி சித்திக் அகமது, மேயர் தோட்டத்தில் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மஹிந்திரா மராஸ்ஸோ காரை பெற்றுக்கொண்ட ஜெய்சால் கூறியதாவாது : "இந்த மஹிந்திரா மராஸ்ஸோ காரை பரிசாக பெற்றதற்கு மகிவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த காரை எதிர்காலத்தில் சமூக நலனுக்காக பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பயன்படுத்துவேன்.
சமூக வலைதளங்களில் வைரலான என் புகைப்படம் குறித்த சம்பவம் என்னால் மறக்க முடியாதது. தேசிய பேரிடர் குழு என்னிடம் ஒரு பெண் மீட்க முடியாத இடத்தில் சிக்கியிருக்கிறார் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது அவரை மீட்க உங்களால் உதவ முடியமா என்று கேட்டனர்.
நான் ஒப்பு கொண்டதும், அந்த பெண்ணை மீட்பதற்கான படகுகள் மற்றும் உபகரணங்களை எங்களுக்கு வழங்கினர். நானும் எனது நண்பர்களும் எந்த பெண் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டோம். அது முழுவதுமாக நீர் சூழ்ந்த பகுதி அந்த பகுதியை படகை நிறுத்தி வைத்து அவரை ஏற சொன்னோம்.
ஆனால் அந்த பகுதியில் இருந்து அவர் படகிற்குள் ஏற சிரமப்படுவார் என்பதை உணர்ந்து கொண்டேன் உடனடியாக குனிந்து என் முதுகை படியாக பயன்படுத்தி படகில் எறுமாறு அந்த பெண்ணிடம் சொன்னேன். இதனால் அவர்கள் எளிதாக ஏற முடிந்தது. " என கூறினார்.
இந்த செயலில் ஈடுபட்ட ஜெய்சால், அஃப்சல், முஸூன் ஆகியோரை மக்கள் "கடலின் முத்துக்கள்" என அழைத்து வருகின்றனர். இந்த பரிசை வழங்கிய எராம் மோட்டார்ஸ் நிறுவனம் இது மற்ற இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் எனவும் எதிர்கால இளைஞர்களையும் ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் அவருக்கு வழங்கப்பட்ட கார்தான் கேரளாவில் முதல் டெலிவரிக்காக வைக்கப்பட்ட மஹிந்திரா மரஸ்ஸோ கார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது மஹிந்திரா நிறுவனம் கேரளாவின் முதல் காரை அந்த மீனவருக்கு பரிசாக வழங்கியுள்ளது.
Recommended Video
கேரள வெள்ளத்தில் சிக்கயவர்களை மீட்கும் பணியில் மட்டும் சுமார் 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் ஒரு வார காலம் இடைவிடாத மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் இருந்த அவர்களது படகுகளை வெள்ள பாதித்த பகுதிகளுக்குள் கொண்டு சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். எதிர்பாராத விதமாக கேளராளவில் இதுவரை அந்த வெள்ளத்திற்கு 480 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலா பார்வையில்:
மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோ காரை இலவசமாக வழங்கியது மூலம் கேரள மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற முயற்சிக்கிறது. இருந்தாலும் இது போன்று சமூக சேவையில் ஈடுபடுபவர்களை அங்கீகரிப்பதும் எதிர்கால இளைஞர்களை மேலும் பல நல்ல விஷயங்களை செய்ய தூண்டும். இது போன்ற செயல்களை மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
மஹிந்திரா நிறுவனம் மீனவருக்கு பரிசாக வழங்கிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை உங்களுக்காக கீழே வழங்கியுள்ளோம்.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!