Just In
- 6 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Movies வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி
மஹிந்திரா நிறுவனம் இன்று ஜாவா பைக்குகளை வெளியிட்டுள்ள நிலையில் ட்ரியோ என்ற எலெக்ட்ரிக் ஆட்டோவையும் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை கீழே காணலாம்.
மஹிந்திரா நிறுவனம் இன்று ஜாவா பைக்குகளை வெளியிட்டுள்ள நிலையில் ட்ரியோ என்ற எலெக்ட்ரிக் ஆட்டோவையும் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை கீழே காணலாம்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கியமான நகரங்கள் மற்றும் தலைநகர் பகுதிகளில் அதிக மாசு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதிகளில் மாற்று எரிசக்தி கொண்ட குறைவான அல்லது காற்று மாசுவையே ஏற்படுத்தாத வகையிலான ஆட்டோக்களைதான் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் அதிக அளவில் சிஎன்ஜி ரக ஆட்டோக்கள் பயன்படுத்தப்படுகிறது. சென்னையிலும் இது போன்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களுக்கு தடையுள்ளது.
சிஎன்ஜி வாகனங்கள் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களுக்கு பதிலாக இயக்கப்பட்டாலும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கான எதிர்பார்ப்பு தற்போது ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எலெக்ட்ரிக் ஆட்டோக்களை பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜிக்களை விட குறைந்த செலவில் இயக்க முடியும். அதனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அத்துடன் மக்களுக்கு தற்போது உள்ள பணத்தை விட குறைவான பணமே செலவாகும்.
ஏற்கனவே சில சிறிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை சந்தைக்கு கொண்டு வந்து விட்டன. அவர்கள் கொண்டு வந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் வட இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் பெரிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அதிகமாக களம் இறக்கவில்லை.
இதனால் மஹிந்திரா நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ இரண்டு வேரியன்ட்களில் வெளியாகியுள்ளது. ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீ என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதில் ட்ரியோ யாரீ என்பது 2+2 என்று 4 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய வகையிலான ஷேர் ஆட்டோ வகையிலான சீட் அமைப்பை கொண்டுள்ளது. ட்ரியோ வழக்கமான 3 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளது.
இந்த ஆட்டோக்கள் ஐபி67 தொழிற்நுட்பம் என்று சொல்லக்கூடிய தூசு மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்க கூடிய வகையிலான பேட்டரியில் இயங்குகிறது. இதில், சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் ட்ரியோ ஆட்டோ முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 3 மணி நேரம் பிடிக்கும். இந்த ஆட்டோ முழு சார்ஜில் சுமார் 130 கி.மீ. வரை (ரியல் வேல்டு) இயங்கும்.
ட்ரியோ யாரீ ஆட்டோவில் முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 2.30 மணி நேரம் தேவைப்படும். இது முழு சார்ஜில் சுமார் 85 கிமீ வரை (ரியல் வேல்டு) பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 30 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த ஆட்டோக்கள் அதிகபட்சமாக 45 கி.மீ. வேகம் வரை செல்லும். தற்போது உள்ள சிஎன்ஜி ஆட்டோக்களில் 55-60 கி.மீ. வேகம்தான் அதிகபட்ச வேகமாக உள்ளது.
இந்த ஆட்டோவை செயல்படுத்துவதற்கு சராசரியாக ஒரு கி.மீ.க்கு ரூ.0.5 மட்டுமே செலவு ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சிஎன்ஜி ஆட்டோக்களை விட இதை குறைந்த செலவில் இயக்க முடியும்.
மேலும் இந்த ஆட்டோக்கள் இரண்டு விதமான ரூஃப் ஆப்ஷன்களுடன் வருகிறது. கடினமான ரூஃப் மற்றும் மெதுவான ரூஃப் என்று இரண்டு வித ஆப்ஷன்கள் உள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இது பொருத்தி தரப்படும்.
இந்த ஆட்டோக்கள் ரூ.2.22 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த ஆட்டோக்கள் நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் ஆட்டோ கட்டணம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
இதனால் தற்போது ஆட்டோக்களில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் சில ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆட்டோ வந்துவிட்டால் அவர்கள் வசூலிக்கும் தொகையில் இருந்து 10 சதவீதம் வசூலித்தாலே ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றாக சம்பாதிக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு