Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி
மஹிந்திரா நிறுவனம் இன்று ஜாவா பைக்குகளை வெளியிட்டுள்ள நிலையில் ட்ரியோ என்ற எலெக்ட்ரிக் ஆட்டோவையும் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை கீழே காணலாம்.
மஹிந்திரா நிறுவனம் இன்று ஜாவா பைக்குகளை வெளியிட்டுள்ள நிலையில் ட்ரியோ என்ற எலெக்ட்ரிக் ஆட்டோவையும் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை கீழே காணலாம்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கியமான நகரங்கள் மற்றும் தலைநகர் பகுதிகளில் அதிக மாசு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதிகளில் மாற்று எரிசக்தி கொண்ட குறைவான அல்லது காற்று மாசுவையே ஏற்படுத்தாத வகையிலான ஆட்டோக்களைதான் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் அதிக அளவில் சிஎன்ஜி ரக ஆட்டோக்கள் பயன்படுத்தப்படுகிறது. சென்னையிலும் இது போன்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களுக்கு தடையுள்ளது.
சிஎன்ஜி வாகனங்கள் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களுக்கு பதிலாக இயக்கப்பட்டாலும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கான எதிர்பார்ப்பு தற்போது ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எலெக்ட்ரிக் ஆட்டோக்களை பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜிக்களை விட குறைந்த செலவில் இயக்க முடியும். அதனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அத்துடன் மக்களுக்கு தற்போது உள்ள பணத்தை விட குறைவான பணமே செலவாகும்.
ஏற்கனவே சில சிறிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை சந்தைக்கு கொண்டு வந்து விட்டன. அவர்கள் கொண்டு வந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் வட இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் பெரிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அதிகமாக களம் இறக்கவில்லை.
இதனால் மஹிந்திரா நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ இரண்டு வேரியன்ட்களில் வெளியாகியுள்ளது. ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீ என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதில் ட்ரியோ யாரீ என்பது 2+2 என்று 4 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய வகையிலான ஷேர் ஆட்டோ வகையிலான சீட் அமைப்பை கொண்டுள்ளது. ட்ரியோ வழக்கமான 3 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளது.
இந்த ஆட்டோக்கள் ஐபி67 தொழிற்நுட்பம் என்று சொல்லக்கூடிய தூசு மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்க கூடிய வகையிலான பேட்டரியில் இயங்குகிறது. இதில், சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் ட்ரியோ ஆட்டோ முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 3 மணி நேரம் பிடிக்கும். இந்த ஆட்டோ முழு சார்ஜில் சுமார் 130 கி.மீ. வரை (ரியல் வேல்டு) இயங்கும்.
ட்ரியோ யாரீ ஆட்டோவில் முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 2.30 மணி நேரம் தேவைப்படும். இது முழு சார்ஜில் சுமார் 85 கிமீ வரை (ரியல் வேல்டு) பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 30 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த ஆட்டோக்கள் அதிகபட்சமாக 45 கி.மீ. வேகம் வரை செல்லும். தற்போது உள்ள சிஎன்ஜி ஆட்டோக்களில் 55-60 கி.மீ. வேகம்தான் அதிகபட்ச வேகமாக உள்ளது.
இந்த ஆட்டோவை செயல்படுத்துவதற்கு சராசரியாக ஒரு கி.மீ.க்கு ரூ.0.5 மட்டுமே செலவு ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சிஎன்ஜி ஆட்டோக்களை விட இதை குறைந்த செலவில் இயக்க முடியும்.
மேலும் இந்த ஆட்டோக்கள் இரண்டு விதமான ரூஃப் ஆப்ஷன்களுடன் வருகிறது. கடினமான ரூஃப் மற்றும் மெதுவான ரூஃப் என்று இரண்டு வித ஆப்ஷன்கள் உள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இது பொருத்தி தரப்படும்.
இந்த ஆட்டோக்கள் ரூ.2.22 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த ஆட்டோக்கள் நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் ஆட்டோ கட்டணம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
இதனால் தற்போது ஆட்டோக்களில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் சில ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆட்டோ வந்துவிட்டால் அவர்கள் வசூலிக்கும் தொகையில் இருந்து 10 சதவீதம் வசூலித்தாலே ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றாக சம்பாதிக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!