Just In
- 12 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி
மஹிந்திரா நிறுவனம் இன்று ஜாவா பைக்குகளை வெளியிட்டுள்ள நிலையில் ட்ரியோ என்ற எலெக்ட்ரிக் ஆட்டோவையும் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை கீழே காணலாம்.
மஹிந்திரா நிறுவனம் இன்று ஜாவா பைக்குகளை வெளியிட்டுள்ள நிலையில் ட்ரியோ என்ற எலெக்ட்ரிக் ஆட்டோவையும் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை கீழே காணலாம்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கியமான நகரங்கள் மற்றும் தலைநகர் பகுதிகளில் அதிக மாசு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதிகளில் மாற்று எரிசக்தி கொண்ட குறைவான அல்லது காற்று மாசுவையே ஏற்படுத்தாத வகையிலான ஆட்டோக்களைதான் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் அதிக அளவில் சிஎன்ஜி ரக ஆட்டோக்கள் பயன்படுத்தப்படுகிறது. சென்னையிலும் இது போன்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களுக்கு தடையுள்ளது.
சிஎன்ஜி வாகனங்கள் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களுக்கு பதிலாக இயக்கப்பட்டாலும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கான எதிர்பார்ப்பு தற்போது ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எலெக்ட்ரிக் ஆட்டோக்களை பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜிக்களை விட குறைந்த செலவில் இயக்க முடியும். அதனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அத்துடன் மக்களுக்கு தற்போது உள்ள பணத்தை விட குறைவான பணமே செலவாகும்.
ஏற்கனவே சில சிறிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை சந்தைக்கு கொண்டு வந்து விட்டன. அவர்கள் கொண்டு வந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் வட இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் பெரிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அதிகமாக களம் இறக்கவில்லை.
இதனால் மஹிந்திரா நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ இரண்டு வேரியன்ட்களில் வெளியாகியுள்ளது. ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீ என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதில் ட்ரியோ யாரீ என்பது 2+2 என்று 4 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய வகையிலான ஷேர் ஆட்டோ வகையிலான சீட் அமைப்பை கொண்டுள்ளது. ட்ரியோ வழக்கமான 3 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளது.
இந்த ஆட்டோக்கள் ஐபி67 தொழிற்நுட்பம் என்று சொல்லக்கூடிய தூசு மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்க கூடிய வகையிலான பேட்டரியில் இயங்குகிறது. இதில், சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் ட்ரியோ ஆட்டோ முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 3 மணி நேரம் பிடிக்கும். இந்த ஆட்டோ முழு சார்ஜில் சுமார் 130 கி.மீ. வரை (ரியல் வேல்டு) இயங்கும்.
ட்ரியோ யாரீ ஆட்டோவில் முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 2.30 மணி நேரம் தேவைப்படும். இது முழு சார்ஜில் சுமார் 85 கிமீ வரை (ரியல் வேல்டு) பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 30 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த ஆட்டோக்கள் அதிகபட்சமாக 45 கி.மீ. வேகம் வரை செல்லும். தற்போது உள்ள சிஎன்ஜி ஆட்டோக்களில் 55-60 கி.மீ. வேகம்தான் அதிகபட்ச வேகமாக உள்ளது.
இந்த ஆட்டோவை செயல்படுத்துவதற்கு சராசரியாக ஒரு கி.மீ.க்கு ரூ.0.5 மட்டுமே செலவு ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சிஎன்ஜி ஆட்டோக்களை விட இதை குறைந்த செலவில் இயக்க முடியும்.
மேலும் இந்த ஆட்டோக்கள் இரண்டு விதமான ரூஃப் ஆப்ஷன்களுடன் வருகிறது. கடினமான ரூஃப் மற்றும் மெதுவான ரூஃப் என்று இரண்டு வித ஆப்ஷன்கள் உள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இது பொருத்தி தரப்படும்.
இந்த ஆட்டோக்கள் ரூ.2.22 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த ஆட்டோக்கள் நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் ஆட்டோ கட்டணம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
இதனால் தற்போது ஆட்டோக்களில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் சில ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆட்டோ வந்துவிட்டால் அவர்கள் வசூலிக்கும் தொகையில் இருந்து 10 சதவீதம் வசூலித்தாலே ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றாக சம்பாதிக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி