Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்!
புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தியது. இதில், மஹிந்திரா மராஸ்ஸோ கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளி
குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் சிறப்பான மதிப்பீட்டை பெற்று இந்தியர்களை தலைநிமிர செய்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தியது. இதில், மஹிந்திரா மராஸ்ஸோ கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளிகளை பெற்றது.
சிறியவர்களுக்கான பாதுகாப்பில் அதிகபட்சமான 40 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன்படி, பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 4 ஸ்டார் ரேட்டிங்கும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றிருக்கிறது.
கடந்த நவம்பர் 16ந் தேதிக்கு பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் ஒன்றுதான் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே, கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்திய மராஸ்ஸோ காரில் ஏதேனும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டதா அல்லது கட்டமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.
சிறியவர்களுக்கான பாதுகாப்பில், சைல்டு இருக்கை முன்னோக்கி அதிவேகத்தில் செல்லும் வாய்ப்புள்ளது. இதனால், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிக காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.
அதேபோன்று, பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் ஓட்டுனரின் நெஞ்சுப்பகுதிக்கான பாதுகாப்பு சற்று குறைவாக, ஏற்றுக் கொள்ள தக்க அளவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்புற சீட் பெல்ட் ரிமைன்டர் வசதியும் குளோபல் என்சிஏபி அமைப்பின் வழிகாட்டு முறைகளுக்கு ஒப்பானதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை தயாரிக்கப்பட்ட மஹிந்திரா கார்களில் கிராஷ் டெஸ்ட்டில் அதிகபட்சமான தர மதிப்பீட்டை மராஸ்ஸோ பெற்றிருக்கிறது. அத்துடன், எம்பிவி ரக கார்களில் ஏற்கனவே சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரெனோ லாட்ஜி, செவர்லே என்ஜாய், மாருதி ஈக்கோ உள்ளிட்ட கார்கள் சொதப்பிய நிலையில், மஹிந்திரா மராஸ்ஸோ கார் சிறப்பான தர மதிப்பீட்டை பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ கார் ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் சந்தைக்கு வந்தது. இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
மஹிந்திரா மராஸ்ஸோ காருடன் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டாடா நெக்ஸான் எஸ்யூவி 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தி இருக்கிறது. குளோபல் என்சிஏபி அமைப்பின் சோதனைகளில், 5 ஸ்டார் ரேட்டிங் பெறும் முதல் இந்திய தயாரிப்பு கார் மாடல் என்ற பெருமையையும் டாடா நெக்ஸான் பெற்றிருக்கிறது.
மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களும் கிராஷ் டெஸ்ட் சோதனையில் சிறப்பான மதிப்பீட்டை பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகவும், பாதுகாப்பான கார்களை இந்திய நிறுவனங்களும் தயாரிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
மேலும், இந்தியாவில் கடை விரித்திருக்கும் வெளிநாட்டு கார் நிறுவனங்களும் இனி பாதுகாப்பான கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான நிர்பந்தத்தையும் இரு நிறுவனங்களும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இது வரவேற்கத்தக்க விஷயமாகவே பார்க்க முடியும்.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி